IPL 2026 | CSK போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றமா? - காசி விஸ்வநாதன் விளக்கம்

சிஎஸ்கே அணியின் போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றப்படும் என தகவல் வெளியானது. சென்னை அணியின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.
IPL 2026 | CSK போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றமா? - காசி விஸ்வநாதன் விளக்கம்
Published on

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.

இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை நாளை (12-ந்தேதி) அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தேர்தல் காரணமாக சிஎஸ்கே அணியின் போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றப்படும் என தகவல் வெளியானது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

இந்நிலையில், சிஎஸ்கே அணியின் போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றப்படும் என்ற தகவல் உண்மையல்ல எனவும் அப்படி எந்த வழிகாட்டுதலையும் ஐபிஎல் நிர்வாகம் எங்களுக்கு கொடுக்கவில்லை என்று சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இதனால் சென்னை அணியின் அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com