search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Treason case"

    தேசத்துரோக வழக்கில் கைதான திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப மறுத்த நீதிபதி, எந்த அடிப்படையில் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது? என்று போலீசாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். #ThirumuruganGandhi
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் தொடர்பாகவும், சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரம் தொடர்பாகவும் தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக கூறி மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதற்கிடையே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு குறித்து கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் திருமுருகன் காந்தி பேசி உள்ளார். இந்த வீடியோ யூ டியூப்பில் வெளியாகி உள்ளது.

    இதைத்தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார், திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையொட்டி அவர் தலைமறைவாக இருந்தார் என்று வெளியான தகவல் தவறு.

    இந்தநிலையில் ஜெர்மனியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்த அவரை தமிழக போலீசார் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்திய அவரை நேற்று சென்னை சைதாப்பேட்டை பெருநகர 11-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க மனு அளித்தனர்.

    திருமுருகன் காந்தி தரப்பில் ஆஜரான வக்கீல் ஐ.பெரியசாமி, “திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்தே அவர் பேசி உள்ளார். அவரது பேச்சில் தேசத்துரோகம் எதுவும் இல்லை. எனவே, அவரை சிறைக்கு அனுப்பக்கூடாது” என்று வாதாடினார்.


    அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் திருமுருகன் காந்தி பேசியதாக கூறிய கருத்துகளை எழுத்து வடிவில் நீதிபதியிடம் கொடுத்தார். அதை வாசித்து பார்த்த நீதிபதி, “இதில் தேசத்துரோகம் எதுவும் இல்லையே? எந்த அடிப்படையில் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளர்கள்?. ஐ.நா.வில் பேசியதற்கு இங்கு எப்படி வழக்கு போட முடியும்? எந்த அடிப்படையில் சிறையில் அடைக்க கோருகிறீர்கள்?” என்று போலீசாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    இதன்பின்னர், திருமுருகன்காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட நீதிபதி மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக கைது செய்த நேரத்தில் இருந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தலாம் என்று சட்ட நடைமுறை இருப்பதால் திருமுருகன்காந்தியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருமுருகன்காந்தியிடம் 24 மணி நேரம் மட்டும் போலீசார் விசாரணை நடத்தி விட்டு விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து அவரை போலீசார், சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதன்பின்பு, தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றதாக ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் திருமுருகன்காந்தி மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் திருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #ThirumuruganGandhi
    தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார். #ThirumuruganGandhi
    பெங்களூரு:

    மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் திருமுருகன் காந்தி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசுக்கு எதிராக சென்னை தேனாம்பேட்டையில் போராட்டம் நடத்தினார். அப்போது ஐ.ஓ.சி. நிறுவனம் மீது கல் எறிந்ததாக கூறி இவர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை சென்னை மெரினா கடற்கரையில் நடத்த முயன்ற போது திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சி நிர்வாகிகளான டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 4 மாதங்கள் சிறையில் இருந்த இவர்கள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் விடுதலை ஆனார்கள். இதுதவிர மேலும் பல வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருந்தன.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் இவர் வெளிநாடு சென்றுவிட்டார்.

    ஜெர்மனி சென்ற திருமுருகன் காந்தி அங்கு ஈழத்தமிழர் நலன் தொடர்பான கூட்டத்தில் பேசினார். பின்னர் ஐ.நா. சபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பேசினார். பல்வேறு நாடுகளுக்கு சென்று பேசிவிட்டு நார்வேயில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் வந்து இறங்கினார். அப்போது அவரை பெங்களூரு விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.

    இதுகுறித்து தமிழக உள்துறைக்கும், சென்னை நகர போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சென்னை நகர போலீசார் அவரை அழைத்து வர பெங்களூரு விரைந்து உள்ளனர்.

    திருமுருகன் காந்தி சென்னை அழைத்து வரப்பட்ட பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

    அவர் கைதானது குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் ஐ.நா. சபையில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது 124 ஏ என்ற தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் தமிழக அரசு வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரை கைது செய்ய லுக்அவுட் நோட்டீசையும் தமிழக அரசு பிறப்பித்திருந்தது.

    இது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த நோட்டீசை தமிழக அரசு அனுப்பி இருந்தது. இன்று அதிகாலை நார்வேயில் இருந்து பெங்களூரு திரும்பிய அவரை பெங்களூரு விமான நிலைய போலீசார் கைது செய்து அங்கேயே வைத்துள்ளனர்.

    இதுகுறித்து சென்னை நகர போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டு மூலம் விடுதலை ஆனார். மேலும் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. அதையெல்லாம் அவர் சந்தித்து வருகிறார். தற்போது தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கையும் சட்டப்படி சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThirumuruganGandhi
    இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வேல்முருகன் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    ராயபுரம்:

    உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை கடந்த 25-ந்தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சிறையில் வேல்முருகன் உண்ணாவிரதம் இருந்தார். கடந்த 28-ந்தேதி அவரை வைகோ சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தினார்.

    இதையடுத்து வேல்முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். எனினும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி நெய்வேலியில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வேல்முருகன் மீது நெய்வேலி தெர்மல் நகர் போலீசார் திடீரென தற்போது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே இன்று காலை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வேல்முருகன் திடீரென புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது தேச துரோக வழக்கை கண்டித்து மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி இருப்பதாக அவர் கூறினார்.

    இது தொடர்பாக நிருபர்களிடம் வேல்முருகன் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்காக சென்றபோது என்னை கைது செய்தனர். என் மீதான கைது நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன்.

    நேற்று இரவு நெய்வேலி போலீசார் தேசதுரோக வழக்கில் என்னை கைது செய்திருப்பதாக கூறினார்கள். அது முதல் நான் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளேன். உணவு, மருந்து, டிரிப்ஸ் எடுக்கவில்லை.

    இலங்கையில் ராணுவ அடக்கு முறையை கணடித்து திலீபன் உண்ணாவிரதம் இருந்தது போல் நானும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன்.

    மத்திய, மாநில அரசுகளின் அழுத்தத்தின் காரணமாகவே டீனை கட்டாயப்படுத்தி அவசர சிகிச்சை பிரிவில் இருந்த என்னை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள்.

    பல்வேறு தமிழ் அமைப்பினர் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், துப்பாக்கி சூட்டை கண்டித்தும் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதுபோல், துப்பாக்கி சூட்டில் பலியான என் உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.

    தூத்துக்குடியில் உயர் பொறுப்பில் உள்ள போலீஸ் அதிகாரிகள் வட மாநிலத்தவர் என்பதால் தமிழர்களை குறி வைத்து தாக்குகிறார்கள். நான் ஒரு பச்சை தமிழன். தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால் என் மீது கைது நடவடிக்கை தொடர்கிறார்கள்.


    நான் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன். தொடர்ந்து தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் குரல் கொடுப்பேன். மத்திய-மாநில அரசின் அடுக்குமுறைக்கு அஞ்ச மாட்டேன்.

    தூத்துக்குடியில் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி கூறி உள்ளார். அவர்தான் தனது படங்களில் மது குடிப்பது மற்றும் புகை பிடிப்பது போன்று காட்சிகள் அமைத்து இளைய தலைமுறை தம்பி, தங்கைகளை தவறான பாதைக்கு அழைத்து சென்று உள்ளார்.

    அறவழியில் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறிய ரஜினியை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வேல்முருகனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதியம் 12 மணி அளவில் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். #Velmurugan
    மும்பை குண்டு வெடிப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்கு தொடர 3 மாகாணங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சில வெளிநாட்டவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல் குறித்து கடந்த சனிக்கிழமை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று கூறலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா? இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா, என்ன?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    அவருடைய இந்த கருத்து பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி லாகூர் ஐகோர்ட்டில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நவாஸ் ஷெரீப்புக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் சிந்து, பஞ்சாப் மற்றும் கைபர் பாக்துன்க்வா மாகாண சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பஞ்சாப் மாகாண சபையில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் ‘துரோகி நவாஸ் ஷெரீப்பை தூக்கிலிடுங்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Nawazsharif #treasoncase 
    ×