என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தேச துரோக வழக்கில் திருமுருகன் காந்தி கைது
By
மாலை மலர்9 Aug 2018 6:37 AM GMT (Updated: 9 Aug 2018 6:37 AM GMT)

தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார். #ThirumuruganGandhi
பெங்களூரு:
மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் திருமுருகன் காந்தி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசுக்கு எதிராக சென்னை தேனாம்பேட்டையில் போராட்டம் நடத்தினார். அப்போது ஐ.ஓ.சி. நிறுவனம் மீது கல் எறிந்ததாக கூறி இவர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை சென்னை மெரினா கடற்கரையில் நடத்த முயன்ற போது திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சி நிர்வாகிகளான டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 4 மாதங்கள் சிறையில் இருந்த இவர்கள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் விடுதலை ஆனார்கள். இதுதவிர மேலும் பல வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருந்தன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் இவர் வெளிநாடு சென்றுவிட்டார்.
ஜெர்மனி சென்ற திருமுருகன் காந்தி அங்கு ஈழத்தமிழர் நலன் தொடர்பான கூட்டத்தில் பேசினார். பின்னர் ஐ.நா. சபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பேசினார். பல்வேறு நாடுகளுக்கு சென்று பேசிவிட்டு நார்வேயில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் வந்து இறங்கினார். அப்போது அவரை பெங்களூரு விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து தமிழக உள்துறைக்கும், சென்னை நகர போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சென்னை நகர போலீசார் அவரை அழைத்து வர பெங்களூரு விரைந்து உள்ளனர்.
திருமுருகன் காந்தி சென்னை அழைத்து வரப்பட்ட பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.
அவர் கைதானது குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் ஐ.நா. சபையில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது 124 ஏ என்ற தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் தமிழக அரசு வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரை கைது செய்ய லுக்அவுட் நோட்டீசையும் தமிழக அரசு பிறப்பித்திருந்தது.
இது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த நோட்டீசை தமிழக அரசு அனுப்பி இருந்தது. இன்று அதிகாலை நார்வேயில் இருந்து பெங்களூரு திரும்பிய அவரை பெங்களூரு விமான நிலைய போலீசார் கைது செய்து அங்கேயே வைத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை நகர போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டு மூலம் விடுதலை ஆனார். மேலும் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. அதையெல்லாம் அவர் சந்தித்து வருகிறார். தற்போது தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கையும் சட்டப்படி சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #ThirumuruganGandhi
மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் திருமுருகன் காந்தி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசுக்கு எதிராக சென்னை தேனாம்பேட்டையில் போராட்டம் நடத்தினார். அப்போது ஐ.ஓ.சி. நிறுவனம் மீது கல் எறிந்ததாக கூறி இவர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை சென்னை மெரினா கடற்கரையில் நடத்த முயன்ற போது திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சி நிர்வாகிகளான டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 4 மாதங்கள் சிறையில் இருந்த இவர்கள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் விடுதலை ஆனார்கள். இதுதவிர மேலும் பல வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருந்தன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் இவர் வெளிநாடு சென்றுவிட்டார்.
ஜெர்மனி சென்ற திருமுருகன் காந்தி அங்கு ஈழத்தமிழர் நலன் தொடர்பான கூட்டத்தில் பேசினார். பின்னர் ஐ.நா. சபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பேசினார். பல்வேறு நாடுகளுக்கு சென்று பேசிவிட்டு நார்வேயில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் வந்து இறங்கினார். அப்போது அவரை பெங்களூரு விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து தமிழக உள்துறைக்கும், சென்னை நகர போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சென்னை நகர போலீசார் அவரை அழைத்து வர பெங்களூரு விரைந்து உள்ளனர்.
திருமுருகன் காந்தி சென்னை அழைத்து வரப்பட்ட பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.
அவர் கைதானது குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் ஐ.நா. சபையில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது 124 ஏ என்ற தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் தமிழக அரசு வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரை கைது செய்ய லுக்அவுட் நோட்டீசையும் தமிழக அரசு பிறப்பித்திருந்தது.
இது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த நோட்டீசை தமிழக அரசு அனுப்பி இருந்தது. இன்று அதிகாலை நார்வேயில் இருந்து பெங்களூரு திரும்பிய அவரை பெங்களூரு விமான நிலைய போலீசார் கைது செய்து அங்கேயே வைத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை நகர போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டு மூலம் விடுதலை ஆனார். மேலும் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. அதையெல்லாம் அவர் சந்தித்து வருகிறார். தற்போது தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கையும் சட்டப்படி சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #ThirumuruganGandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
