search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sharif"

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மீதான மேலும் இரு ஊழல் வழக்குகளில் அந்நாட்டின் பொறுப்புடைமை நீதிமன்றம் வரும் 24-ம் தீர்ப்பு வழங்கவுள்ளது. #Pakistancourt #nawazsharif
    இஸ்லாமாபாத்:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.
     
    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா கடந்த 19-9-2018 அன்று உத்தரவிட்டார்.

    இதற்கிடையில், நவாஸ் ஷரிபுக்கு எதிராக பொறுப்புடைமை நீதிமன்றத்தில் பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கு மற்றும் அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு என மேலும் இரு ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. 

    இந்த வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி முஹம்மது அர்ஷத் மாலிக் இன்று அறிவித்துள்ளார். இந்த தீர்ப்பு நவாஸ் ஷரிப்புக்கு பாதகமாக அமைந்தால் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Pakistancourt #nawazsharif
    மும்பை குண்டு வெடிப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்கு தொடர 3 மாகாணங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சில வெளிநாட்டவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல் குறித்து கடந்த சனிக்கிழமை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று கூறலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா? இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா, என்ன?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    அவருடைய இந்த கருத்து பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி லாகூர் ஐகோர்ட்டில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நவாஸ் ஷெரீப்புக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் சிந்து, பஞ்சாப் மற்றும் கைபர் பாக்துன்க்வா மாகாண சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பஞ்சாப் மாகாண சபையில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் ‘துரோகி நவாஸ் ஷெரீப்பை தூக்கிலிடுங்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Nawazsharif #treasoncase 
    மும்பை தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #NawazSharif #TreasonCase # PakistaniCourt
    லாகூர்:

    பாகிஸ்தானில் இருந்தவாறு செயல்படும் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சில வெளிநாட்டவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல் குறித்து கடந்த சனிக்கிழமை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று கூறலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா? இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா, என்ன?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    அவருடைய இந்த கருத்து பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில், நவாஸ்ஷெரீப்பின் கருத்து தேசத்துக்கு துரோகம் விளைவிப்பதாக உள்ளது என்று கூறி லாகூர் ஐகோர்ட்டில் வக்கீல் அப்தாப் விர்க் நேற்று மனுதாக்கல் செய்தார். அதில், “நவாஸ்ஷெரீப்பின் கருத்து தேச பாதுகாப்புக்கும், மாநில அமைப்புகளுக்கும் எதிரானது. எனவே அவர் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிடவேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது. 
    மும்பை தாக்குதல் விவகாரத்தில் நவாஸ் ஷெரிப் கூறிய கருத்து தவறானவை என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இன்று தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    இதுதொடர்பான விசாரைண நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக கூறினார். நவாஸ் ஷெரீப்பின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி, அந்நாட்டு அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    ஷெரிப்பின் கருத்தை தொடர்ந்து, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உயர்மட்டக் குழு கூட்டம் பிரதமர் ஷாகித் கான் அப்பாசி தலைமையில் இன்று அவசரமாக கூடியது. 



    இந்த கூட்டத்தில், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி குர்ராம் தஸ்தகிர், நிதி மந்திரி மிப்தா இஸ்மாயில், வெளியுறவுத் துறை செயலர் தெஹ்மினா ஜன்ஜூவா, தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நசீர் கான் ஜான்வா உள்பட பலர் கலந்துக் கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக ஆலோசித்தனர்.

    இந்த கூட்டத்திற்கு பிறகு, தேசிய பாதுகாப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விவகாரத்தில் ஆதாரங்களும், உண்மைகளும் மறுக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது ஏற்கக்கூடியது இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக நவாஸ் ஷெரிப் அளித்திருக்கும் கருத்துகள் தவறானவை. 

    இதுபோன்ற, தவறான கருத்துகளுக்கு இந்த குழு சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மும்பை பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் தாமதம் செய்து வருவது இந்தியாதான். பாகிஸ்தான் அல்ல. 

    இந்த விசாரணையின்போது மும்பை தாக்குதல் வழக்கின் முதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பை சந்திக்க விடாதது, உள்ளிட்ட முக்கிய பல கோரிக்கைகளை இந்தியா மறுத்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. மேலும், கசாப்பை அவசரமாக தூக்கிலிட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும், குல்புஷன் ஜாதவ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா பொறுமை காத்து ஒத்துழைக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×