search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vck"

    • அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.
    • கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் பகண்டை கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க. உறுப்பினர் முருகவேல். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவனை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விழுப்புரம் வழுதாவூர் சாலையில் தொராவி கிராமம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திடீர் சாலை மறியல் போராட்டம் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பா.ம.க. உறுப்பினர் முருகவேலை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தகவலறிந்து விரைந்து வந்த விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் துரைராஜ், மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்த ப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தேடி வருகின்றோம். விரைவில் பிடித்து விடுவோம் என போலீசார் உறுதி அளித்ததனர். அதன் பேரில் காலை 9 மணிக்கு சாலை மறியலை கைவிட்டு வி.சி.க.வினர் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக விழுப்புரம் வழுதாவூர் சாலையில் காலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேசிய கட்சிக்கான தகுதியைப் பெற வேண்டுமெனில், 3 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
    • தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கான தலைமை அலுவலகம் உள்ளிட்ட விவரங்களைக் கோரும் பணியில் மாநிலத் தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எவை எவை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற, தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தையோ அல்லது வெற்றியையோ கட்சிகள் பெற்றிருக்க வேண்டும்.

    மாநில கட்சிகளாக அங்கீகாரம்பெற வேண்டுமெனில், நான்கு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதாவது, சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

    மக்களவைத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி., தொகுதிளில் ஒவ்வொரு 25 இடங்களில் ஒரு இடத்திலாவது வெற்றியைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

    மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை அல்லது 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். எந்தத் தொகுதியிலும் வெற்றியைப் பதிவு செய்யாவிட்டால் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.

    இதேபோன்று தேசிய கட்சிக்கான தகுதியைப் பெற வேண்டுமெனில், 3 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் குறைந்த பட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகள் பெறுவதுடன், 4 மக்களவைத் தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று பூர்த்தியானால், தேசிய கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

    தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்தால், தேர்தலின் போது அந்த கட்சி மற்றும் அதன் வேட்பாளருக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய வாதகாங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்தன.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.,பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தேர்தல் ஆணை யம் அண்மையில் வெளியிட்ட உத்தரவால், தமிழகத்திலும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இருந்து சில கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

    அதேசமயம், தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கான தலைமை அலுவலகம் உள்ளிட்ட விவரங்களைக் கோரும் பணியில் மாநிலத் தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது.

    தேசிய கட்சிக்கான அந்தஸ்து பட்டியலிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீக்கப்பட்டாலும், தமிழகத்தில் மாநிலக் கட்சிக்கான அந்தஸ்து பட்டியலில் அந்தக் கட்சி இடம் பெற்றுள்ளது.

    இதன்மூலம், மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., ஆம்ஆத்மி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் மாநில கட்சிகளாக உள்ள பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத் தைகள் உள்ளிட்ட கட்சிகள் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை ஏற்கனவே இழந்துள்ளன. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் 8 சதவீத வாக்குகளுக்கும் குறைவாக பெற்று வரும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இன்னும் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை பெறாமலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பணி செய்யும் வகையில் தேர்தல் பணிக்குழுவை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் அறிவித்து உள்ளார்.
    • விடுதலை சிறுத்தைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் 14 நிர்வாகிகள் இடம்பெற்று உள்ளனர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பணி செய்யும் வகையில் தேர்தல் பணிக்குழுவை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்து உள்ளார்.

    அக்குழுவில் இடம்பெற்றுள்ள 14 நிர்வாகிகள் வருமாறு:-

    முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, உஞ்சை அரசன், துணை பொதுச்செயலாளர் கனியமுதன், கருத்தியல் பரப்பு செயலாளர் சிபிசந்தர், மண்டல அமைப்பு செயலாளர் இரா.கிட்டு, பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் எஸ்.எம்.சாதிக், ஆல்ட்ரின் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், தெற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர், நிர்வாகிகள் அரசாங்கம், அக்பர் அலி, பைசல் அகமது, அகர முதல்வன், அம்ஜத்கான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

    • உடன்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவர்கள் கைது செய்ய வேண்டும், குலசேகரப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிபாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் தலைமையில் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

    உடன்குடி:

    உடன்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவர்களை கைது செய்ய கூறியும், இதைத் தொடர்ந்து குலசேகரப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிபாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் தலைமையில் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நிகழ்வில் முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், சுரேந்தர், அந்தோணி, ராவணன், ஒன்றிய செயலாளர் சங்கர் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    எழும்பூரில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டு இப்தார் உரையாற்றுகிறார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் மாநில பொருளாளர் மு.முகமது யூசுப்தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை எழும்பூர் பைஸ் மகாலில் நடக்கிறது. இதில் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு இப்தார் உரையாற்றுகிறார். 

    பேரவை மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மண்டல செயலாளர் முபாரக், மாநில துணை செயலாளர் சைதை ஜபார், கரிமுல்லாகான், முகமது ஷாகீர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீனஸ் இம்ரான்செய்து வருகிறார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கொம்பாடி குப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 42). இவர் நெய்வேலி என். எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர்ஜோதி பாசு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தங்கவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 ஆயிரம் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதால் அரியலூர் பொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #ariyalurponparappi

    கும்பகோணம்:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கும்பகோணத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். இதனால் தமிழகத்திலும் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மேலும் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. குறிப்பாக சொல்ல வேண்டு மென்றால் பா.ம.க வாக்குச் சாவடிகளில் கைப்பற்ற வேண்டும் சாதிய வன்முறைகளை தூண்டி விட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிகளில் கைப்பற்ற வட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன சில இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளது .நேற்று நடைபெற்ற சிதம்பரம் தொகுதியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி இடத்தில் காலை 10 மணிக்கு தலித் மக்களை வாக்களிக்காமல் தடுத்துள்ளனர். இந்த வன்முறையால் குடிசைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தீ இட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

    இதுபோல் தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை, நீலத்தநல்லூர் போன்ற பகுதிகளிலும் தலித்துகள் மீது வன்முறை நடைபெற்றுள்ளது. அரசியல் ஆதாயம் தேட அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளது. இதை கடுமையாக முயற்சித்து இவர்கள் தோல்வி அடைந்தனர்.

    அரியலூரில் நடைபெற்ற பொன்பரப்பியில் இந்து முன்னணியினர் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. மேலும் 2 ஆயிரம் வாக்குகள் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 83 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. இதனால் கள்ள ஓட்டு போட்டது கூட காரணமாக இருக்கலாம். இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்பரப்பில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும்

    இது குறித்து சிதம்பரம் தேர்தல் நடத்தும் அதிகாரி அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் இன்று சந்தித்து மனு அளிக்க இருக்கிறேன்.

    சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சிறப்பாக பணியாற்றின.

    தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து விடக்கூடாது என்று பலர் பகிரங்க முயற்சியில் இறங்கினர். அதை நாங்கள் தெளிவாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளோம்.

    இந்த கூட்டணியில் இணைந்த பிறகு நாங்கள் வெற்றிக்கரமாக கடந்து இருக்கிறோம். அவர்கள் செய்த வன்முறைகள் எல்லாம் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம். பா.ம.க. போன்ற ஜாதி வெறி கட்சி. பா.ஜ.க. போன்ற மதவெறி கட்சிகள் செயல்படுகிற வரை சமூக நல்லிணக்கம் சமூக ஒற்றுமை ஏற்படாது .

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #ariyalurponparappi

    பொன்பரப்பி வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019 #VCKProtest
    அரியலூர்:

    தமிழகத்தில் நேற்று பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடும் வன்முறை வெடித்தது. திருமாவளவனின் தேர்தல் சின்னமான பானையை சிலர் போட்டு உடைத்தனர். இதை சிலர் தட்டிக்கேட்டதால் மோதல் ஏற்பட்டது. மோதலின்போது சுமார் 20 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.

    இந்நிலையில், பொன்பரப்பி மோதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே மரங்களை வெட்டிப் போட்டு சாலைகளில் தடைகளை ஏற்படுத்தினர்.

    சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டி, புழுதிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. #LokSabhaElections2019 #VCKProtest
    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தேர்தல் பிரசாரத்தின்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். #VCKleader #Thirumavalavan #policesecurity #deaththreats
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    ஆனால், இவ்வழக்கை வழக்கமான நடைமுறைகளின்படி விசாரித்த ஐகோர்ட் தேர்தல் நடந்து முடிந்து விட்டதால் அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் தேர்தல் பிரசாரத்தின்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #VCKleader #Thirumavalavan #policesecurity #deaththreats
    சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறியதாக திமுக, விடுதலை சிறுத்தை நிர்வாகி உள்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. #ParlimentryElection2019
    சேலம்:

    தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்ததையடுத்து மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் இருந்த கட்சி கொடிகள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது.

    இதே போல ஓமலூர் பஸ்டாண்ட் மற்றும் கார் நிறுத்தும் இடம் அருகே பல்வேறு கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டது. இதில் தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பமும் அகற்றப்பட்ட நிலையில் அந்த பீடத்தில் இருந்த சின்னம், பெயர்கள் மறைக்கப்படாமல் இருந்தது.

    இதுகுறித்து கோட்ட மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி குமார் (37) தேர்தல் விதி மீறியதாக ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஓமலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குப்புசாமி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் ஆகியோர் மீது ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதே போல சங்ககிரி குப்பனூர் பிரிவு சாலையில் பெட்டிக்கடை நடத்தி வரும் மணிவேல் (44) என்பவர் தனது கடை முன்பு மரக்கம்பில் தி.மு.க. கொடியை பறக்கவிட்டிருந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணிவேல் மீது சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதையொட்டி சென்டர் மீடியன் அமைந்துள்ள பகுதியில் தி.மு.க., காங்கிரஸ் கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

    தேர்தல் அதிகாரிகள் உத்தரவுப்படி ஆத்தூர் டவுன் போலீசார் தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்ரமணியன் மீது பொது சொத்துக்கு சேதப்படுத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

    ஆத்தூர் அருகே உள்ள அப்பமசமுத்திரத்தில் தேவராஜ் என்பவரது சுவரில் அனுமதியில்லாமல் கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் மீது ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தேவூர் அண்ணமார் கோவில் காவேரிப்பட்டி பிரிவு ரோட்டில் வாய்க்கால் திட்ட மதிப்பீடு பலகை உள்ளது. இதில் வரும் தேர்தலில் ஓட்டு போட வேண்டாம், நோட்டாவுக்கு போடவும் என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் தேவூர் போலீசார் கோணக்கழுத்தானூரை சேர்ந்த பழனிவேல் (46) என்பவரை கைது செய்தனர்.

    தேவூர் புள்ளாக்கவுண்டம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள நீர்தேக்க தொட்டியில் உங்கள் ஓட்டை நோட்டாவுக்கு போடவும் என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (41) என்பவரை கைது செய்த தேவூர் போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர். #ParlimentryElection2019
    முத்துப்பேட்டை அருகே காதலித்த பெண்ணுடன் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செல்வரசூன் (வயது28). விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (27). இருவரும் போர்வெல் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜசேகர் வேறு இனத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் கீர்த்தனாவை திருமணம் செய்து கொள்ள ராஜசேகர் மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்து செல்வரசூன் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஆண்டு திருத்துறைப்பூண்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் ராஜசேகருக்கும் கீர்தனாவுக்கும் காதல் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 1 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் செல்வரசூன் மற்றும் ராஜசேகர் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனக்கு காதலியை திருமணம் செய்து வைத்த ஆத்திரத்தில் ராஜசேகர் இருந்து வந்தார். இதனால் ராஜசேகர், செல்வரசூன் ஆகியோர் தனியாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் சமையலுக்காக வயல் நத்தைகளை சேகரித்து கொண்டு வந்த செல்வரசூன் அப்பகுதியில் உள்ள மகேந்திரன் என்பவரின் வீட்டிற்கு பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் மகேந்திரனுடன் சேர்ந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த ராஜசேகர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் செல்வரசூன் மயங்கி விழுந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகேந்திரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் செல்வரசூனை மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்து வமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த கொலை குறித்து தகவலறிந்து முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொலையான செல்வரசூன் உடலை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைபூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குபதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த ராஜசேகரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ராஜசேகரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் இருவரும் வேறு வேறு சமூக சேர்ந்தவர்கள் என்பதால் கோவிலூர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒப்பந்த பணிகளை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை செயலாளர் அஸ்வனிகுமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி.எஸ்.பி., டி.எஸ்.பி.) துணைத்திட்ட நிதியின் மூலம் ஆதிதிராவிடர் மேம்பாட்டு  வரைநிலைக்கழகம் (பாட்கோ) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தங்கள் விடுகிறது. இவ்வாறு விடப்படும் ஒப்பந்தங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் பங்குபெற முடியாத நிலை உள்ளது. ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி குடியிருப்பு மேம்பாட்டு கழகம் மூலம் விடப்படுகின்ற அனைத்து ஒப்பந்தங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களே பங்குபெறும் வகையில் அரசாணை உள்ளது. 

    இதனை பின்பற்றி புதுவையிலும் பாட்கோ மூலம் விடப்படும் ஒப்பந்தங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்  பங்குபெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தேவ.பொழிலன் கூறியுள்ளார்.
    ×