search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாழ்த்தப்பட்டோர்"

    ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒப்பந்த பணிகளை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை செயலாளர் அஸ்வனிகுமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி.எஸ்.பி., டி.எஸ்.பி.) துணைத்திட்ட நிதியின் மூலம் ஆதிதிராவிடர் மேம்பாட்டு  வரைநிலைக்கழகம் (பாட்கோ) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தங்கள் விடுகிறது. இவ்வாறு விடப்படும் ஒப்பந்தங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் பங்குபெற முடியாத நிலை உள்ளது. ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி குடியிருப்பு மேம்பாட்டு கழகம் மூலம் விடப்படுகின்ற அனைத்து ஒப்பந்தங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களே பங்குபெறும் வகையில் அரசாணை உள்ளது. 

    இதனை பின்பற்றி புதுவையிலும் பாட்கோ மூலம் விடப்படும் ஒப்பந்தங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்  பங்குபெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தேவ.பொழிலன் கூறியுள்ளார்.
    ×