search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UAE"

    • நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் பார்வையிட்டனர்.
    • போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல், மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடி கண்டு களித்தனர்.

    நேபாளம் - அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டனர். நேபாள நகரம் கீர்த்திப்பூரில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் ரசித்தனர்.


    மேலும் போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல், மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடியும் பேருந்தின் மீது நின்றபடியும் போட்டியை கண்டு ரசித்தனர்.


    இந்த கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் நேரில் பார்வையிட்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.



    • ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என ஜெய் ஷா கூறியிருந்தார்.
    • ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது.

    பஹ்ரைன்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் அல்லது அக்டோபரில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. 

    இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளருமான ஜெய் ஷா அறிவித்து இருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதியின் வலியுறுத்தலின் பேரில் இந்த அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகியவற்றில் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளது.

    ஆசிய கோப்பை போட்டி குறித்த இறுதி முடிவு அடுத்த மாதம் எடுக்கப்படுகிறது. கடந்த ஆசிய கோப்பை போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதன்முறையாக இந்து தந்தைக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு தற்போது பிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. #UAE #ChildBorn #BirthCertificate
    அபுதாபி:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள திருமண சட்டத்தின்படி, ஒரு முஸ்லிம் ஆண் பிற மதத்தை சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு. அதே சமயம், ஒரு முஸ்லிம் பெண் பிற மதங்களைச் சேர்ந்த ஆணைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது.

    இந்நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்துவான கிரண் பாபு என்பவர், அதே மாநிலத்தை சேர்ந்த சனம் சாபூ சித்திக் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறினர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், முஸ்லிம் தாய்க்கு பிறந்த அந்த குழந்தையின் தந்தை இந்து என்பதால் அந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் மறுக்கப்பட்டது.

    இந்த நிலையில், 2019-ம் ஆண்டை சகிப்புத்தன்மை ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் கடைபிடிக்கிறது. இதனை அடிப்படையாக கொண்டு, கிரண் பாபு மீண்டும் தனது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதன்முறையாக இந்து தந்தைக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு தற்போது பிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது.  #UAE #ChildBorn #BirthCertificate 
    போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். #PopeFrancis #UAE
    அபுதாபி:

    கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் வாடிகனில் உள்ளது. இதன் தலைவராக போப் ஆண்டவர் உள்ளார். அமீரகத்தில் இந்த (2019) ஆண்டு சகிப்புத்தன்மைக்கான ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் கலந்துகொள்ள போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்தார்.

    இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட போப் ஆண்டவர் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் “மதங்களுக்கு இடையிலான உறவின் வரலாற்றில், ஒரு புதிய பக்கத்தில் உங்களின் நேசமிக்க தேசத்தில் எழுதுகிறேன். நாம் வேறுவேறாக இருந்தாலும் சகோதரர் கள்தான்” என தெரிவித்தார்.



    அந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தொடங்கினார். வாடிகனில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர் அபுதாபி விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான், போப் ஆண்டவர் பிரான்சிசை நேரில் வரவேற்றார்.

    நேற்று காலை போப் ஆண்டவர் பிரான்சிஸ் முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து பேசினார். அதனைத்தொடர்ந்து அவர் அரண்மனைக்கு சென்று அரச குடும்பத்தினரை சந்தித்தார். அப்போது அவருக்கு அரண்மனை வாயிலில் துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து அங்குள்ள ஒரு மைதானத்தில் சிறப்பு பிரார்த்தனை (திருப்பலி) நடத்துகிறார். இதில் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த பயணத்தின் போது போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஏமன் உள்நாட்டு போர் குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் அவர் ஐக்கிய அரபு அமீரக பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக ஏமன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்திருந்தார்.

    இது பற்றி அவர் கூறுகையில், “ஏமனில் நடைபெறும் நீண்டகால உள்நாட்டு போரில் அந்நாட்டு மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் அழிந்துவிட்டனர். குழந்தைகள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களின் அழுகை சத்தம் இறைவனை சென்றடைந்துள்ளது. எனவே இதற்கு உடனடி தீர்வுகாண அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.

    ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரில் அரசுக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுபடையில் ஐக்கிய அரபு அமீரகம் அங்கம்வகிப்பது குறிப்பிடத்தக்கது.  #PopeFrancis #UAE 
    ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அமீரகத்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. #AFCAsianCup #Qatar #UAE
    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்று நடந்த அரைஇறுதியில் கத்தார் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த ஐக்கிய அரபு அமீரகம் அணி எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அமீரகத்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. அந்த அணியில் போலெம் கோகி (22-வது நிமிடம்), அல்மோஸ் அலி (37-வது நிமிடம்), ஹசன் அலி ஹைடோஸ் (80-வது நிமிடம்), ஹமித் இஸ்மாயில் (90-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.



    முன்னதாக கத்தார் அணி கோல் அடித்த போது, ஆத்திரமடைந்த உள்ளூர் ரசிகர்களில் சிலர் மைதானத்திற்குள் செருப்புகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்னொரு முறை தண்ணீர் பாட்டில்களை எறிந்தனர். இதனால் இரண்டு முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது. கத்தாருக்கு எதிராக ரசிகர்கள் அவ்வப்போது கோஷங்கள் எழுப்பியதால் ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது. வருகிற 1-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் கத்தார் அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. #AFCAsianCup #Qatar #UAE 
    தொழிலில் ஏற்பட்ட பொருளாதார இழப்பினால் மனம் உடைந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ரஸ் அல் கைமா பகுதியில் இந்தியாவை சேர்ந்த சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். #SandeepVellaloor
    துபாய்:

    இந்தியாவை சேர்ந்த சந்தீப் வெள்ளலூர்(35) என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு நாடான ரஸ் அல் கைமாவில் நில அளவையாளர் (சர்வேயர்) ஆக பணியாற்றி வந்தார்.

    மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகம் உள்ள சந்தீப் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான சில சமூகச் சேவைகளையும் செய்து வந்தார்.

    கடந்த ஆண்டு சாலை விபத்தில் இங்கு பலியான இந்தியரின் குடும்பத்தாருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்த இவர், தொடர்ந்து ரத்ததான முகாம்களையும் நடத்தியுள்ளார். இதற்காக அந்நாட்டு அரசிடம் மனிதநேய உதவியாளர் என்ற சான்றிதழையும் சந்தீப் பெற்றுள்ளார்.

    இங்குள்ள யுலான் கலா சாஹித்தி அமைப்பின் பொதுச்செயலாளராகவும், நண்பர்கள் கிரிக்கெட் குழுவின் அணி தலைவராகவும் இருந்துவந்த இவர், மூன்றாண்டுகளுக்கு முன்னர் தனது குடும்பத்தாரை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு, இரு நண்பர்களுடன் ரஸ் அல் கைமா நகரில் உள்ள அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில், வேலை முடிந்து வீடு திரும்பிய சந்தீப்பின் நண்பர்கள் உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கப்படாததால் கதவை உடைத்துகொண்டு உள்ளே நுழைந்தனர்.

    வீட்டின் ஒரு அறைக்குள் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சந்தீப் வெள்ளலூர் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



    தற்போது இபுராஹிம் பிம் ஒபைதுல்லா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சந்தீப்பின் பிரேதத்தை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் ஏற்பாடுகள் இங்கு நடைபெற்று வருகின்றன.

    சமீபத்தில் சொந்தமாக போக்குவரத்து நிறுவனம் தொடங்கிய சந்தீப், இதில் ஏற்பட்ட பொருளாதார இழப்பினால் கடும் துயரத்துக்குள்ளாகி இந்த விபரீத முடிவை தேர்ந்தெடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. #IndianSocialWorker #RasAlKhaimah #SandeepVellaloor
    ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் பணியாற்றிவரும் இந்தியரான பிரிட்டி மார்கோஸ் லாட்டரி குலுக்கலில் சுமார் 20 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசாக வென்றுள்ளார். #Indianwins #Dh10million #UAEraffledraw #BrittyMarkose
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் மாதந்தோறும் ‘பிக் டிக்கட் அபுதாபி’ என்ற லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த பலர் பலமுறை பரிசுத்தொகையை வென்றுள்ளனர்.

    அவ்வகையில், இந்த மாதம் நடைபெற்ற குலுக்கலில் கேரளாவை சேர்ந்த பிரிட்டி மார்கோஸ் என்பவருக்கு ஒரு கோடி திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 19 கோடியே 85 லட்சம் ரூபாய்) முதல் பரிசாக கிடைத்துள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டுமுதல் அபுதாபியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் இரு மகன்கள் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர். இந்த பரிசுத்தொகையை கொண்டு தனக்கு இருக்கும் கடன்களை எல்லாம் அடைத்த பின்னர் தனது சொந்த ஊரில் புதிதாக வீடு கட்ட விரும்புவதாக  பிரிட்டி மார்கோஸ் தெரிவித்துள்ளார். #Indianwins #Dh10million  #UAEraffledraw #BrittyMarkose
    ஐக்கிய அரபு அமீரகத்தில் உளவு பார்த்ததாக கைதான இங்கிலாந்து மாணவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
    துபாய்:

    இங்கிலாந்தை சேர்ந்தவர் மாத்யூஸ் ஹெட்ஜஸ் (31). இவர் ஐக்கிய அரபு அமீரக நாடான துபாயில் உள்ள துர்காம் பல்கலைக் கழகத்தில் டாக்டருக்கு படித்தார்.

    கடந்த மே 5-ந்தேதி இவரை துபாய் விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் 2 வாரங்களாக விசாரணை நடத்தினர். முடிவில், அவர் உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே அவரை விடுதலை செய்ய கோரி உலகம் முழுவதும் உள்ள 120 கல்வி நிறுவனங்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திடம் கோரிக்கை விடப்பட்டது.

    அதை தொடர்ந்து மாத்யூ ஹெட்ஜெஸ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் திரும்ப ஒப்படைக்கவில்லை. மீண்டும் வருகிற 21-ந் தேதி விசாரணைக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
    ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்கொலை செய்து கொண்ட இந்தியரின் உடல் 4 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. #UAE
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் யூசுப் கான் ரஷித் கான் என்பவர் தான் தங்கியிருந்த இடத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி போலீசார் அவரது உடலை மீட்டு, அவரது உறவினர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இறந்த யூசுப் கானின் உடலை பெற யாரும் முன்வராததால், அங்கு உள்ள இந்தியர்களின் சங்கத்தின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். யூசுப் கானின் விசாவில் இருந்த இந்திய முகவரி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் அவரது உறவினர்கள் இல்லை. இதனால், 4 மாதங்களாக பிண அறையில் இறந்தவரின் உடல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில், அவரது பாஸ்போர்ட்டை வைத்து ஆராய்ந்ததில், யூசுப் கானின் உறவினர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவரது மரணம் குறித்து தகவல் அளிக்கப்பட்டனர். இந்த தகவலை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான பணம் எங்களிடம் இல்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முழு செலவையும் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரூப் சித்து ஏற்றுக்கொண்ட நிலையில், இறந்தவரின் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. #UAE
    தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை 2016-ன் படி வெளிநாட்டில் இருந்து வரும் நிதியுதவியை ஏற்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். #KeralaFlood #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணமாக ஐக்கிய அமீரக அரசு ரூ.700 கோடி தருவதாக கூறியது. ஆனால், பேரிடர் சமையத்தில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதில்லை என மத்திய அரசு கொள்கை முடிவு வைத்துள்ளதாக கூறப்பட்டு ஐக்கிய அமீரகத்தின் நிதியுதவியை ஏற்க மறுப்பதாக தகவல்கள் வெளியானது.

    இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஆகஸ்ட் 26-ம் தேதி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும்.

    2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதியை ஏற்றுக் கொள்ளலாம். எனினும், இது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது. முடிவெடுக்கும் போது பார்க்கலாம் என கூறினார்.
    கேரளா மழை வெள்ளத்திற்கு ஐக்கிய அமீரகம் 700 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ள நிலையில், குஜராத் பூகம்பத்துக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் உதவியுள்ளது நினைவு கூறத்தக்கது. #keralaFlood
    புதுடெல்லி:

    கேரளாவில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழை மாநிலத்தையே புரட்டிப்போட்டது. 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல ஆயிரம் கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், பொதுமக்கள் என பல தரப்பில் இருந்தும் கேரளாவுக்கு நிதியுதவி குவிந்து வருகிறது.

    இந்நிலையில், கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியுதவி வழங்கப்படும் என ஐக்கிய அமீரக அரசு அறிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர்களின் பங்கு ஐக்கிய அமீரத்தின் வளர்ச்சியில் இருப்பதால் அவர்களின் துக்கத்தில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம் என அமீரக இளவரசர் குறிப்பிட்டிருந்தார்.

    எனினும், சர்வதேச உதவியை எதிர்நோக்கக்கூடாது அது இந்தியா மீதான மதிப்பை சீர் குலைக்கும் என பல வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதற்கு முன்னதாக கடந்த 2001-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் இந்தியா சர்வதேச உதவிகளை பெற்றுள்ளது. 

    மத்திய வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் உள்ள தகவலின் படி குஜராதில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து, சுமார் 109 நாடுகள் நேரடியாக உதவி செய்துள்ளன. நிதியுதவி, நிவாரணப்பொருட்கள், உணவுப்பொருட்கள், கூடாரம், அடிப்படை தளவாடங்கள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளது.

    அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா உள்ளிட்ட வல்லரசுகள் முதல் ஷிசெல்ஸ், நேபாள் ஆகிய குட்டி நாடுகள் வரை குஜராத்துக்கு உதவிக்கரம் கொடுத்துள்ளது. வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அமீரகம், ஏமன், சிரியா ஆகிய நாடுகளும் கனிசமான உதவியை அளித்துள்ளன.

    109 நாடுகள் போக, சர்வதேச அமைப்புகள், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் குஜராத்துக்கு நிவாரணம் அனுப்பியுள்ளது. குஜராத் பூகம்பம் ஏற்பட்ட போது அங்கு முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐக்கிய அமீரகத்தின் துபாய் லாட்டரியில் இந்தியர்களில் ஒருவர் ரூ.6.8 கோடியும், மற்றொருவர் பி.எம்.டபிள்யூ காரும் வென்றுள்ளனர். #DubaiLottery
    துபாய்:

    ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. பரிசாக கிடைக்கும் பொருளோ, பணமோ அதற்கு வரி இல்லை என்பதால், அமீரகத்தில் இந்த லாட்டரிக்கு கிராக்கி அதிகம்.

    இந்நிலையில், குவைத்தை சேர்ந்த இந்தியரான சந்தீப் மேனன் என்பவருக்கு ரூ.6.8 கோடி லாட்டரியில் ஜாக்பாட் கிடைத்துள்ளது. “வாழ்க்கையில் என்னைக்குமே எதையும் ஜெயிச்சது கிடையாது. ஆனால், இப்போது லாட்டரியில் பணம் ஜெயித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார் சந்தீப் மேனன்.

    மற்றொரு இந்தியரான சாந்தி போஸ் என்ற பெண், பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வென்றுள்ளார். 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த லாட்டரியில் இதுவரை 132 இந்தியர்கள் பரிசு வென்றுள்ளதாக கலீஜ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

    கடந்த மாத தொடக்கத்தில், கேரளாவை சேர்ந்த இந்தியர் தாய்நாட்டுக்கு கிளம்பும் நேரத்தில் சுமார் 6 கோடி ரூபாய் பரிசாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 
    ×