search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traders"

    • தி.நகரில் ஆடை விற்பனை நிறுவனம் நடத்தி வந்த ராமச்சந்திரன், ராஜேஷ், ரத்தன் ஆகியோர் ஆடைகள் வாங்கி தொழில் செய்து வந்தனர்.
    • திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் உற்பத்தியாளர்கள் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:- நாங்கள் திருப்பூரில் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் சிறிய அளவில் நடத்தி வருகிறோம். எங்களிடம் சென்னை தி.நகரில் ஆடை விற்பனை நிறுவனம் நடத்தி வந்த ராமச்சந்திரன், ராஜேஷ்,ரத்தன் ஆகியோர் ஆடைகள் வாங்கி தொழில் செய்து வந்தனர்.

    ஆடைகள் வாங்கியதற்கான பணத்தை காசோலையாக கொடுத்தனர். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லாமல் ரிட்டன் ஆகி விட்டது. அவர்கள் இது போல் திருப்பூரில் உள்ள 60-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களிடம் ரூ.11கோடியே 62 லட்சத்து 64ஆயிரத்து 218க்கு ஆடைகள் வாங்கி பணம் கொடுக்காமல் உள்ளனர். இதனால் ஆடை உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இது பற்றி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்ய ப்பட்டுள்ளது. பணமோசடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியு ள்ளனர்.   

    • குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
    • அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். மேலும் குளிர்ந்த காற்று வீசும்.

    கேரள மாநிலம் மூணாறு போன்று இங்கு குளுகுளு சீசன் நிலவும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.

    இந்த அருவிகளில் குளித்து சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குற்றாலம் வந்து செல்வார்கள். இங்குள்ள அருவிகளின் தண்ணீர் மூலிகை குணம் நிறைந்தது. இதனால் எவ்வளவு நேரம் அருவியில் குளித்தாலும் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருந்தாலும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் வந்து குளிக்கும் ஒரே இடமாக குற்றாலம் திகழ்கிறது. இந்த குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இதே போல் தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் மூலமாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும். ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் சீசன் அறிகுறிகள் தொடங்கும்.

    தொடர்ந்து கேரளா மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கியதும் குற்றாலத்திலும் மழை பெய்ய தொடங்கும். இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசனுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

    ஆனாலும் சீசன் இந்த மாதத்தில் தொடங்கிவிடும் என்ற நம்பிக்கையில் அருவிக்கரைகளில் உள்ள கடைகளை சீரமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சீசன் காலத்தில் குற்றாலத்தில் மட்டும் தினமும் ரூ. 20 லட்சம் வரை பணப்புழக்கம் இருக்கும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமல்லாது குற்றாலம் அருவியில் நீர்வரத்தை பொறுத்தே தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருக்கும். அதனை நம்பியும் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் குற்றாலம் சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    • கடை வியாபாரிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சிட்கோ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏராளமான தெருவோர கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்ற தொழிற்பேட்டை சிட்கோ சார்பில் இன்று நோட்டீசு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையோர கடை வியாபாரிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    மேலும் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • நகராட்சிக்கு சொந்தமான 52 கடைகள் கட்டப்பட்டுள்ளது.
    • புதிய கடைகள் கட்ட ஒத்துழைப்பு வழங்கவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் தினசரி மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 52 கடைகள் கட்டப்பட்டுள்ளது. சிமெண்ட் கூரைகளால் அமைக்கப்பட்டுள்ள இந்த கடைகளை அகற்றி விட்டு, ரூ.1.61 கோடி மதிப்பில் 48 கடைகள் கான்கிரீட் மேற்கூறையுடன் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கடைகளை வாடகைக்கு எடுத்துள்ள வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாமணி தலைமையில் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். இதில் மாற்று இடம் வழங்கப்படுவதாகவும், புதிய கடைகள் கட்ட ஒத்துழைப்பு வழங்கவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    வியாபாரிகள் தரப்பில் கட்டப்படும் புதிய கடைகளில் ஏற்கனவே வாடகைக்கு உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். கட்டப்படும் கடைகளுக்கு குடிநீர், சுகாதார வளாகம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். நியாயமான தொகையில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    • தெரு வியாபாரிகள் சட்டப்படி அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
    • தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே தெரு வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு இன்று ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.

    கண்ணன், சத்யா ,பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் தில்லைவனம் தொடங்கி வைத்தார். தேசிய நிர்வாக குழு சந்திரகுமார் முடித்து வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது தெரு வியாபாரிகள் சட்டப்படி அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்க வேண்டும் . சட்டம் 2015-ன் படி தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே தெரு வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    வியாபாரம் செய்யும் இடத்தை முடிவு செய்வதற்கு வணிகக் குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் வணிக குழு தேர்தல் நடத்தும் வரை வியாபாரம் செய்பவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்டத் தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், வங்கி ஊழியர் சங்கம் பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    இதில் மின்வாரியம் மண்டல செயலாளர் பொன்.தங்கவேல், ஓய்வு பெற்றோர் சங்கம் பொதுச்செயலாளர் அப்பாதுரை, டாஸ்மாக் சங்கம் மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், டி.என்.எஸ்.டி.சி பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்டத் தலைவர் சிவக்குமார், டி.என்.சி.எஸ்.சி மாவட்ட செயலாளர் தியாகராஜன், ஆட்டோ சங்கம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கட்டுமான சங்கம் மாவட்ட துணை தலைவர் செல்வம், உடலுழைப்பு தொழிலாளர் சங்கம் சுதா, கல்யாணி, மாநகரத் தலைவர் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நேற்று வழக்கம்போல், சுல்தான்பேட்டை பகுதியிலேயே வாரச்சந்தை கூடியது.
    • வியாபாரிகளுக்கு கடை போட இடம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடுவது வழக்கம். தற்போது காங்கிரீட் தளம் மற்றும் மேற்கூரை அமைக்க ரூ. 1 கோடியே 47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

    அதனால் வார சந்தை தற்காலிகமாக பழைய பஸ் நிலையம் அருகே மாற்றப்படும் என டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் அறிவித்தது. ஆனால் நேற்று வழக்கம்போல், சுல்தான்பேட்டை பகுதியிலேயே வாரச்சந்தை கூடியது.

    வாரசந்தையில் பணிகள் நடைபெற்று வருவதால், பாதிக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கடை போட இடம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் பில்லர் அமைக்க 10-க்கும் மேற்பட்ட பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.

    இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் அறியாமல் பள்ளத்தில் விழும் வாய்ப்புள்ளது. வாரச்சந்தை மாற்றும் முடிவில் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் மெத்தனமாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வாரச்சந்தை பழைய பஸ் நிலையம் அருகே இடமாற்றம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு, வியாபாரிகளுக்கும் கழிப்பிட வசதி முதற்கொண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில வியாபாரிகள் இடமாற்றத்தை எதிர்த்து இதே பகுதியில் கடை போட்டு வருகின்றனர். வரும் நாட்களில் வார சந்தை பழைய பஸ் நிலையம் அருகே கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படும் என கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் 53 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 35 ஆயிரத்து 588 பேர் இந்த தேர்தலில் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர்.
    • தேர்தலுக்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 103 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் தெருவோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்காக 15 பேர் கொண்ட சென்னை நகர விற்பனைக் குழு, சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையில் அமைக்கப்படுகிறது.

    இதில் 6 பேர் தெருவோர வியாபாரிகளில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் இன்று நடைபெற்றது.

    இந்த தேர்தலில் 53 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 35 ஆயிரத்து 588 பேர் இந்த தேர்தலில் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர்.

    இந்த தேர்தலுக்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 103 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. காலை முதலே வியாபாரிகள் திரண்டு வந்து ஓட்டு போட்டனர்.

    சாலையோர வியாபாரிகள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அசல் சான்றிதழை காண்பித்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

    திருவொற்றியூர் ஜெய் கோபால் கரோடியா அரசினர் உயர்நிலைப்பள்ளி, மணலி மண்டல அலுவலகம், மாதவரம் ஜெய்கோபால் கரோடியா அரசினர் உயர் நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரவாயல் அரசினர் மேல் நிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட் டிருந்த வாக்குச்சாவடிகளில் நடைப்பாதை வியாபாரிகள் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்.

    இன்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் வாக்கு எண்ணும் மையமான அண்ணாநகர் அம்மா அரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் வேட்பாளர்கள் முன்னிலையில மூடி சீல் வைக்கப்படும்.

    நாளை (28-ந்தேதி) காலை 9 மணிக்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    • ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் பார்வையிட்டு, செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
    • சுற்றுலா பயணிகள் நீலகிரியில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஊட்டி:

    தற்போது தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவக்கூடிய இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.

    மேலும் பூங்காவில் உள்ள பெரிய புல்தரையில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தனர். அங்குள்ள மலர் செடிகள் முன்பு புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    இதேபோல ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் பார்வையிட்டு, செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    இந்த சுற்றுலா தலம் மட்டுமின்றி தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம், அவலாஞ்சி, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, கொடநாடு காட்சிமுனை, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    இதேபோல், ஊட்டியில் உள்ள பைன் மரக்காடுகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் உயர்ந்து நிற்கும் பைன்கள், மூச்சடைக்கக் கூடிய அழகு காட்சிகள் மற்றும் இனிமையான சூழ்நிலை ஆகியவற்றை கண்டு ரசித்தனர். மேலும் பைன் மரங்கள் நிறைந்த வனப்பகுதியில் நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் அவர்களை நம்பி வியாபாரம் நடத்தி வரும் சாலையோர வியாபாரிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கேரட், பீட்ரூட், மக்காச்சோளம், கோஸ் மற்றும் அவிச்ச வேர்கடலை, மாங்காய் என சாலை ஓரங்களில் வியாபாரம் நடத்தி வருபர்களுக்கு வியாபாரம் களைகட்டி உள்ளது.

    சுற்றுலா பயணிகள் நீலகிரியில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பஸ் நிலையம், சேரிங்கிராஸ் மற்றும் ஊட்டி குன்னூர் சாலைகளில் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • மதுரை அருகே வியாபாரியை தாக்கிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • கடையில் பூக்கள் திருடுபோவது தொடர்பாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது.

    மதுரை

    மதுரை வளர் நகர் அம்பலக்காரன் பெட்டியை சேர்ந்தவர் ராமன் (55). இவர் மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.அங்கு வண்டியூரைச்சேர்ந்த லெட்சுமி எனபவரும் வியாபாரம் செய்கிறார். கடையில் பூக்கள் திருடுபோவது தொடர்பாக இவர் களுக்குள் முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் லட்சுமி யின் உறவினர்களான வண்டியூர் செம்மண் சாலையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் மனைவி மேனகா (37) , ராமசாமி மனைவி சாந்தி (50),சோனை மகள் ரேணுகா (39) ஆகிய 3 பேரும் ராமனை ஆபாச மாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து ராமன் மாட்டுத்தாவனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்தனர்.

    மதுரை தென்னோ லைக் காரத் தெருவை தெருவை சேர்ந்தவர் அன்புமணி. இவரது மனைவி பூர்ணிமா (38).இவர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தெற்கு வாசலில் உள்ள அரிசி கடைக்கு பூர்ணிமா சென்றிருந்தார். அப்போது அவரு க்கும் அங்கு வந்த ஆரப் பாளையம் ராஜேந்திரா மெயின்ரோடு கணேசன் மனைவி நிஷா காந்தி (45) என்பவருக்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நிஷா காந்தி, பூர்ணிமாவை ஆபாசமாக பேசி தாக்கினார். இந்த சம்பவம் குறித்து பூர்ணிமா தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து நிஷா காந்தியை கைது செய்தனர்.

    • மீன் மார்க்கெட்டிற்கு வந்து செல்ல அம்மா உணவகம் வழியாக வந்து செல்லும் பாதை மட்டும் உள்ளது.
    • வாடிக்கையாளர்கள் மற்றும் எங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ளவும் அனுமதி தர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்ட த்தின் கீழ் கட்ட ப்பட்டுள்ள தென்னம்பா ளையம் மீன் மார்க்கெட்டிற்கு வந்து செல்ல அம்மா உண வகம் வழியாக வந்து செல்லும் பாதை மட்டும் உள்ளது. அதிலும் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆகையால் அந்த ஆக்கிரமி ப்புகளை அகற்றி தருவதோடு குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டும் இடத்தில் உள்ள மண்களை அப்புறப்படுத்தி மற்றொரு வழித்தடத்தை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தற்போது உள்ள தற்காலிக மீன் மார்க்கெ ட்டில் வாடிக்கை யாளர்கள் மற்றும்எங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ளவும் அனுமதி தர வேண்டும். அதே போல் எங்களை நம்பி 200க்கும் மேற்பட்டமீன் வெட்டும் தொழிலாளர்கள் அங்கு மீன் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.   

    • கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேற்று சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
    • அரசு சார்பில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு, 250 கடைகள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி :

    கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் அனைத்து வியாபாரிகளுக்கும் கடைகள் வழங்குவது தொடர்பாகவும், நகராட்சி தினசரி சந்தை தொடர்பாகவும் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ நேற்று சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மா னம் கொண்டு வந்து பேசியதாவது:-

    கோவில்பட்டியில் நக ராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி காய்கறிசந்தை 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையை கோவில்பட்டி நகர் மட்டுமின்றி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட 5 தொகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்பொழுது தினசரி சந்தையில் அரசு சார்பில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு, 250 கடைகள் கட்டுவதாக அறிவிக்கப்ப ட்டுள்ளது. ஏற்கனவே அந்த காய்கறி சந்தையில் 396 கடைகள் செயல்பட்டு வருகின்ற இதனால் 146 வியாபாரிகள் வாழ்வாதரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் பதற்றத்தினையும், அச்சத்தினையும் உருவாக்கி உள்ளது.

    கொரோனா காலத்தில் கடை கள் மூடப்பட்டு இருந்த போது வியாபாரிகள் தங்களது சொந்த செலவில் பழுது பார்த்து நல்ல நிலையில் வைத்துள்ளனர். எனவே அந்த இடத்தில் கடைகளை கட்டுவதற்கு பதிலாக புதியதாக கிருஷ்ணா நகரில் நகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் தற்பொழுது குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. 5 ஏக்கர் இடம் பயன்பாட்டிற்கு உகந்த இடமாக உள்ளது. அந்த இடத்தில் மாற்று ஏற்பாடாக புதியதாக கடைகளை கட்டும் நேரத்தில் அரசுக்கு வருவாய் கிடைக்கும், அங்குள்ள வியாபாரிகளும், பொது மக்களும் பயன்படுத்து சூழ்நிலையை அமைச்சர் ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் கூறுகையில், ஏற்கனவே 396 கடைகள் இருந்த தாகவும், புதியதாக கட்டுப்படுவதில் 250 கடைகள் கட்டுப்படுவதாக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அதிகமான மக்கள் வருவதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

    வசதிகள் செய்வதற்கும், வாகனங்கள் எளிதாக உள்ளே செல்ல வேண்டும் என்பதற்காக தான் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பவர்கள் அனைவருக்கும் கடைகள் தரவேண்டும் என்றால் குப்பைகள் அகற்றி நகராட்சி இடம் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அந்த இடத்தினை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற வேண்டும், இ.எஸ்.ஐ மருந்தகத்தில் இடம் இருப்பதாக தெரி வித்துள்ளீர்கள், சம்ப ந்தப்ட்ட துறை அமைச்ச கத்தில் பேசி, அவர்கள் சம்மதம் தெரி வித்தால் அனைவருக்கும் கடைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • திருநங்கைகள் புகுந்து கட்டாயமாக பணம் கேட்டு தொல்லை தந்து வருகின்றனர்.
    • வணிகர்கள் நிம்மதி இழந்து வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் போலீஸ் நிலையத்தில் பல்லடம் அனைத்து வணிகர் சங்க தலைவர் ராம்.கண்ணையன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் தனசீலன், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு திருப்பூர் மாவட்ட தலைவர் எம்.கோவிந்தசாமி, செயலாளர் லாலா கணேசன், மாநகர தலைவர் ஜான்வல்தாரிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    பல்லடம் நகரில் உள்ள கடைகள், வணிக நிறுவன ங்களுக்குள் திருநங்கைகள் புகுந்து கட்டாயமாக பணம் கேட்டு தொல்லை தந்து வருகின்றனர். அவர்களுக்கு பணம் தரவில்லை என்றால் கூட்டமாக வந்து மிரட்டுவது ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் வணிகர்கள் நிம்மதி இழந்து வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 25ந் தேதி பல்லடத்தில் தள்ளு வண்டியில் துரித உணவு வியாபாரம் செய்து வரும் இசக்கிபாண்டி என்பவர் மீது திருநங்கைகள் கடுமையாக தாக்குதல் நடத்திபலத்த காயத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வியா பாரியை தாக்கியவர்க ளை கைது செய்ய வேண்டும். மேலும் பல்லடம் நகரில் உள்ள வியாபாரிக ளுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற விதமாக, அனைவரையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×