என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tirunelveli
நீங்கள் தேடியது "Tirunelveli"
டவுன் ரத வீதிகளில் நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியின் நெல்லை மண்டல குழு கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மண்டல தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் பைஜு முன்னிலை வகித்தார்.
இதில் சர்தார்புரம் கீழத்தெருவில் கழிவு நீரோடையை சீர் செய்து அதன்மேல் கல்வெட்டு பாலம் அமைத்திட தீர்மானிக்கப்பட்டது. காந்திநகர் ரேஷன் கடை தெருவில் பொது அடிபம்பு பழுதடைந்துள்ளது. அதனை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
15-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட நதிபுரம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறைகளை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
18-வது வார்டுக்கு உட்பட்ட விசுவநாதன் நகர் பூங்கா அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கவும், 23-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சீரான குடிநீர் வழங்க வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டவுன் கீழரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி வைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வாகையடி முனை பகுதியில் சேதமடைந்த பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய பாலம் அமைக்கவும் கோரிக்கை வைத்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. சமூக அறிவியல் தேர்வை மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.
Tirunelveli News: 10-th Exam Was Finished
Tirunelveli, S.S.L.C., Exam, Finish
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது
பாளையில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மாணவர்கள்.
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. சமூக அறிவியல் தேர்வை மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.
பாளை, பள்ளி தேர்வு, உற்சாகம்
நெல்லை:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்கவில்லை.
நடப்பு ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 92 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்றது.
இம்மையங்களில் அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதினர்.
கடைசி நாளான இன்று (30-ந்தேதி) திங்கட்கிழமை சமூக அறிவியல் பாடம் தேர்வு நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது.
தேர்வு நிறைவடைந்ததை அடுத்து தேர்வு மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் தங்கள் வகுப்பில் பயின்றவர்களை சந்தித்து, ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் புகைப்படம் எடுத்தும், சீருடைகளில் மாறி மாறி மை தெளித்தும், செல்போன் நம்பர் பரிமாறிக்கொண்டும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
நெல்லை சந்திப்பு கைலாசநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை சந்திப்பு கைலாசபுரம் கைலாசநாத சுவாமி கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து செப்பு கேடயத்தில் சவுந்தரி அம்பாள் கைலாசநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கொடிப்பட்டம் பல்லக்கில் ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
பஞ்ச வாத்தியங்கள் இசைக்கப்பட்டு கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து பால், தயிர் , இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான பஞ்சமூர்த்திகள் வீதி உலா வருகிற 2-ந்தேதியும், தேரோட்டம் வருகிற 7-ந் தேதியும் நடைபெறுகிறது.
உலக தைராய்டு தினத்தை முன்னிட்டு ஷிபா மருத்துவமனையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நெல்லை:
உலக தைராய்டு தினத்தை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள ஷிபா மருத்துவமனை சார்பில் தைராய்டு நோய்க்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் தைராய்டு சுரப்பி குறைபாடுகள், முன் கழுத்தில் வீக்கம் மற்றும் கட்டி, தைராய்டு புற்று நோய், உடல் பருமன் அல்லது மெலிதல், படபடப்பு, கை நடுக்கம், தூக்கமின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், நகம் உடைதல் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.
முகாமில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தைராய்டு பரிசோதனைகளை எடுத்துக் கொண்டனர்.
முகாமில் தைராய்டு நோயியல் சிறப்பு மருத்துவர்கள் அருண் விஸ்வநாத், ராகேஷ் சந்துரு, ஸ்டேன்லி ஜேம்ஸ் ஆகியோர் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
சிறப்பு முகாமிற்கு ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் முகம்மது ஷாபி அனைத்து ஒருங்கிணைப்புகளும் செய்திருந்தார்.
பரிசோதனையில் தைராய்டு அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் அதிநவீன முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் இந்த முகாமில் ரூ.800 க்கு தைராய்டு நோய் கண்டறியும் பரிசோதனைகள் ரூ.300 க்கு செய்யப்பட்டது.
நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
நெல்லை:
பாளை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 51). இவர் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே ஸ்ரீபுரம் சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு சென்றார்.
இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.3 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
இதுதொடர்பாக தேவராஜ், சந்திப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது
நெல்லை:
தென்காசி தாலுகா குறும்பலாபேரி உலகாசிபுரம் தெருவை சேர்ந்தவர் சேர்மன். தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் தேங்காய் பறிக்க சென்றபோது தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
எனவே வறுமையில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு நெல்லை தட்சணமாற நாடார் சங்க நலிந்தோர் நல நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்குவதற்கு நிர்வாக சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று நடைபெற்ற நெல்லை தட்சணமாற நாடார் சங்க நிர்வாக சபை கூட்டத்தில் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் டி.ராஜகுமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் முன்னிலையில் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை சேர்மனின் மனைவி சுந்தரவள்ளியிடம் வழங்கினார்கள்.
இதில் காரிய கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், சங்க ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி தாலுகா குறும்பலாபேரி உலகாசிபுரம் தெருவை சேர்ந்தவர் சேர்மன். தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் தேங்காய் பறிக்க சென்றபோது தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
எனவே வறுமையில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு நெல்லை தட்சணமாற நாடார் சங்க நலிந்தோர் நல நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்குவதற்கு நிர்வாக சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று நடைபெற்ற நெல்லை தட்சணமாற நாடார் சங்க நிர்வாக சபை கூட்டத்தில் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் டி.ராஜகுமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் முன்னிலையில் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை சேர்மனின் மனைவி சுந்தரவள்ளியிடம் வழங்கினார்கள்.
இதில் காரிய கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், சங்க ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையில் இருந்து செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதலாக 2 முறை பயணிகள் ரெயில் இயக்கம் நாளை முதல் இயக்கப்படுகிறது.
நெல்லை:
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. நிறுத்தப்பட்ட ரெயில்கள் அனைத்தும் தற்போது படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் தற்போது சிறப்பு ரெயில்களாகவும், எக்ஸ்பிரஸ் ரெயில்களாகவும் இயக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை-செங்கோட்டை, நெல்லை-திருச்செந்தூர் ரெயில்கள் கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவுக்கு முன்பாக நாளொன்றுக்கு 4 முறை திருச்செந்தூர், செங்கோட்டைக்கு இயக்கப்பட்டு வந்த இந்த பயணிகள் ரெயில், கொரோனாவுக்கு பின்னர் காலை, மாலை என 2 முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் நெல்லையில் இருந்து காலை 7.20 மணிக்கு ரெயில் புறப்பட்டு 9.05 மணிக்கு திருச்செந்தூருக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு நெல்லை வந்தடைகிறது.
இதேபோல் நெல்லை-செங்கோட்டை இடையே நெல்லையில் இருந்து காலை 7 மணிக்கும், மறுமார்க்கமாக மாலை 5.50 மணிக்கு செங்கோட்டையில் இருந்தும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2 வழித்தடங்களிலும் ரெயில்களை பழையபடி 4 முறை இயக்கவேண்டும் என்றும், இதனால் வீரவநல்லூர், சேரன்மகாதேவி, அம்பை, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, தென்காசி பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பயன் அடைவார்கள் என்றும் ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் அடிப்படையில் தென்னக ரெயில்வே சார்பில் செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி செங்கோட்டை-நெல்லை பயணிகள் ரெயில்(06662) காலை 6.40 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, காலை 8.50 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது.
இதேபோல் மறுமார்க்கமாக நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரெயில்(06657) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும் வகையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரெயில்களில் 10 பொது பெட்டிகளும், 4 சிலீப்பர் பெட்டிகளும் என மொத்தம் 14 பெட்டிகள் இடம்பெற்றுள்ளது. இந்த ரெயில்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.
இதில் நெல்லை-செங்கோட்டை மாலை ரெயில் நாளை முதலும், செங்கோட்டை-நெல்லை காலை ரெயில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதலும் இயக்கப்பட உள்ளது.
இதேபோல் திருச்செந்தூரில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில்(06674) காலை 9 மணிக்கு நெல்லை வந்தடையும். மறுமார்க்கமாக மாலையில் 6.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் அந்த ரெயில்(06677) இரவு 8.30 மணிக்கு திருச்செந்தூர் போய் சேருகிறது. இந்த 2 பயணிகள் ரெயில் நாளை முதல் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. நிறுத்தப்பட்ட ரெயில்கள் அனைத்தும் தற்போது படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் தற்போது சிறப்பு ரெயில்களாகவும், எக்ஸ்பிரஸ் ரெயில்களாகவும் இயக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை-செங்கோட்டை, நெல்லை-திருச்செந்தூர் ரெயில்கள் கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவுக்கு முன்பாக நாளொன்றுக்கு 4 முறை திருச்செந்தூர், செங்கோட்டைக்கு இயக்கப்பட்டு வந்த இந்த பயணிகள் ரெயில், கொரோனாவுக்கு பின்னர் காலை, மாலை என 2 முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் நெல்லையில் இருந்து காலை 7.20 மணிக்கு ரெயில் புறப்பட்டு 9.05 மணிக்கு திருச்செந்தூருக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு நெல்லை வந்தடைகிறது.
இதேபோல் நெல்லை-செங்கோட்டை இடையே நெல்லையில் இருந்து காலை 7 மணிக்கும், மறுமார்க்கமாக மாலை 5.50 மணிக்கு செங்கோட்டையில் இருந்தும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2 வழித்தடங்களிலும் ரெயில்களை பழையபடி 4 முறை இயக்கவேண்டும் என்றும், இதனால் வீரவநல்லூர், சேரன்மகாதேவி, அம்பை, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, தென்காசி பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பயன் அடைவார்கள் என்றும் ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் அடிப்படையில் தென்னக ரெயில்வே சார்பில் செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி செங்கோட்டை-நெல்லை பயணிகள் ரெயில்(06662) காலை 6.40 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, காலை 8.50 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது.
இதேபோல் மறுமார்க்கமாக நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரெயில்(06657) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும் வகையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரெயில்களில் 10 பொது பெட்டிகளும், 4 சிலீப்பர் பெட்டிகளும் என மொத்தம் 14 பெட்டிகள் இடம்பெற்றுள்ளது. இந்த ரெயில்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.
இதில் நெல்லை-செங்கோட்டை மாலை ரெயில் நாளை முதலும், செங்கோட்டை-நெல்லை காலை ரெயில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதலும் இயக்கப்பட உள்ளது.
இதேபோல் திருச்செந்தூரில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில்(06674) காலை 9 மணிக்கு நெல்லை வந்தடையும். மறுமார்க்கமாக மாலையில் 6.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் அந்த ரெயில்(06677) இரவு 8.30 மணிக்கு திருச்செந்தூர் போய் சேருகிறது. இந்த 2 பயணிகள் ரெயில் நாளை முதல் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் புகையிலை விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்காக நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கங்கைகொண்டான் பகுதியில் 88 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கங்கை கொண்டான் இன்ஸ்பெக்டர் பெருமாள் கைது செய்தார்.
மேலும் மாவட்டத்தில் முதல்முறையாக புகையிலை விற்பனை வழக்கில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார். இந்த வழக்கில் சிறப்பாக இன்ஸ்பெக்டர் பெருமாளை எஸ்.பி. சரவணன் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.
நெல்லை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கங்கைகொண்டான் பகுதியில் 88 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கங்கை கொண்டான் இன்ஸ்பெக்டர் பெருமாள் கைது செய்தார்.
மேலும் மாவட்டத்தில் முதல்முறையாக புகையிலை விற்பனை வழக்கில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார். இந்த வழக்கில் சிறப்பாக இன்ஸ்பெக்டர் பெருமாளை எஸ்.பி. சரவணன் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.
நெல்லையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இன்று நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோமதிநாயகம் தலைமை தாங்கினார்.
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் உப தலைவர் முத்துகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 78 மாத பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.
இதில் நிர்வாகிகள் வெங்கடாச்சலம், ராமச்சந்திரன், முத்துசாமி, முத்தையா, பொன்ராஜ், குமார சாமி, ஆறுமுகம், நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இன்று நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோமதிநாயகம் தலைமை தாங்கினார்.
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் உப தலைவர் முத்துகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 78 மாத பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.
இதில் நிர்வாகிகள் வெங்கடாச்சலம், ராமச்சந்திரன், முத்துசாமி, முத்தையா, பொன்ராஜ், குமார சாமி, ஆறுமுகம், நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லையில் 30-ந்தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம் நடைபெற உள்ளது.
நெல்லை:-
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் நடைபெறும்.
அதன்படி வருகிற 30-ந்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தாங்கி மனுக்களை பெறுகிறார்.
இதில் எண்ணை நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் நடைபெறும்.
அதன்படி வருகிற 30-ந்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தாங்கி மனுக்களை பெறுகிறார்.
இதில் எண்ணை நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகரை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி பார்வதி. இவர் சம்பவத்தன்று இரவு வண்ணார்பேட்டையில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து சென்ற ஒரு வாலிபர் பார்வதி கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டவாறு செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.
இதில் செயின் அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் அவர் கேரளாவை சேர்ந்த பட்டதாரி வாலிபரான ரித்திக் (வயது 22) என்பதும், வி.எம். சத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு விடுமுறையில் வந்தபோது செலவிற்கு பணம் இல்லாததால் செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்த ரித்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் பார்வதி அணிந்திருந்தது கவரிங் நகை என்பது தெரியவந்தது. எனினும் குற்ற செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகரை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி பார்வதி. இவர் சம்பவத்தன்று இரவு வண்ணார்பேட்டையில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து சென்ற ஒரு வாலிபர் பார்வதி கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டவாறு செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.
இதில் செயின் அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் அவர் கேரளாவை சேர்ந்த பட்டதாரி வாலிபரான ரித்திக் (வயது 22) என்பதும், வி.எம். சத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு விடுமுறையில் வந்தபோது செலவிற்கு பணம் இல்லாததால் செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்த ரித்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் பார்வதி அணிந்திருந்தது கவரிங் நகை என்பது தெரியவந்தது. எனினும் குற்ற செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் 27-ந் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
நெல்லை:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த வாரம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் மற்றும் பங்கேற்க விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த வாரம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் மற்றும் பங்கேற்க விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X