search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லை சந்திப்பு பெட்டிக்கடையில் பணம் திருட்டு

    நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 51). இவர் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே ஸ்ரீபுரம் சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு சென்றார்.

    இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.3 ஆயிரம் திருட்டு போயிருந்தது. 

    இதுதொடர்பாக தேவராஜ், சந்திப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×