search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private employment camp"

    • தூத்துக்குடி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
    • தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். தகுதியுள்ள, தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தினரும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற 20-ந்தேதி சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    பணிக்காலியிடங்களுக்கு நபர்களைத் தேர்வு செய்ய

    வுள்ள தொழில் நிறுவனங்க ளும், சேலம் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் இம்முகா மில் கலந்துகொண்டு பய னடையலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
    • 8-ம் வகுப்பு வகுப்பு முதல் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலை வாய்ப்பை தேடும் அனைவரும் கலந்து கொள்ளலாம்

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

    இதில் பல்வேறு தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலை வாய்ப்பை தேடும் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப் படாது. இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.
    • இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

    நெல்லை:

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.

    இந்த வாரம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைதேடுபவர்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்ளது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும்.

    வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறியவும் NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்து பயன்பெறலாம்.

    மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    • திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 8-ந் தேதி வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
    • நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்புமற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    திருச்சி

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 8-ந் தேதி வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் (வயது வரம்பு: 18-க்கு மேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம்.

    மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்புமற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் வருகிற 8-ந்தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியாா் வேலை வேண்டி காத்திருக்கும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.
    • மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காங்கயம் கரூா் சாலையில் உள்ள ஸ்ரீ மகாராஜா மஹாலில் இன்று நடைபெற்றது.

    இம்முகாமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 15,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன.

    இம்முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு படித்தவா்கள் மற்றும் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் படிப்புகளிலும் இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள் மற்றும் முந்தைய ஆண்டு படிப்பை முடித்த மாணவா்கள், தனியாா் வேலை வேண்டி காத்திருக்கும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.

    முகாமில் வேலை வாய்ப்புகளோடு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன வழங்கப்பட்டது.

    முகாமில் இன்று மாலை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சி.வி.கணேசன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகின்றனர். கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். 

    • தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் வரும் 25ம்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, அரியலூர் கலெக்டர் ரமணசரஸ்வதி, எம்எல்ஏக்கள் பிரபாகரன், சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், படித்த இளைஞர்கள் அனைவருக்கும் தகுதியான வேலைவாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மற்றும்

    அரியலூர் மாவட்டங்களுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் வரும் 25ம்தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும்,

    வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களை அனைத்து தரப்பினருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும், வேலைவாய்ப்பு முகாமிற்கு சென்று வர ஏதுவாக போதிய பஸ் வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதை துறை அலுவலர்கள் உறுதிசெய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    நெல்லையில் 27-ந் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    நெல்லை:

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.

    அதன்படி இந்த வாரம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் மற்றும் பங்கேற்க விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும்.


    மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.
    நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
    நெல்லை:

    நெல்லை பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம் சார்பில் டிவிஎஸ் பயிற்சி மையம் மூலமாக ஐசிஐசிஐ வங்கிக்கு இருபாலரும் தேர்வு செய்யப்படவுள்ளனர். எல்-டி நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு அதிகாரி பணியிடத்துக்கு ஆண்கள் மட்டும் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்கான வளாகத்தேர்வு நாளை (12-ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பல்கலைக்கழகத்தில் உள்ள சுந்தரனார் அரங்கில் நடைபெறுகிறது.

    கலை, அறிவியல் படிப்பை முடித்த பட்டதாரிகளும், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். 26 வயதுக்குள் இருக்கவேண்டும். விருப்பமுள்ளவர்கள் கல்விச் சான்றிதழ்களின் நகல், சுயதகவல் பதிவேடு மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வரவேண்டும். பதிவு கட்டணம் கிடையாது. ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

    முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களும் கலந்துகொள்ளலாம். இவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் பயிற்சிக்குப் பிறகு அனைத்து மாவட்டங்களிலும் பணியமர்த்தப்படுவர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews
    ×