search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் 25-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்-அமைச்சர் தகவல்
    X

    பெரம்பலூரில் 25-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்-அமைச்சர் தகவல்

    • தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் வரும் 25ம்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, அரியலூர் கலெக்டர் ரமணசரஸ்வதி, எம்எல்ஏக்கள் பிரபாகரன், சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், படித்த இளைஞர்கள் அனைவருக்கும் தகுதியான வேலைவாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மற்றும்

    அரியலூர் மாவட்டங்களுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் வரும் 25ம்தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும்,

    வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களை அனைத்து தரப்பினருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும், வேலைவாய்ப்பு முகாமிற்கு சென்று வர ஏதுவாக போதிய பஸ் வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதை துறை அலுவலர்கள் உறுதிசெய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    Next Story
    ×