search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.
    X
    ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.

    நெல்லையில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    நெல்லையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    நெல்லை:

    மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இன்று நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோமதிநாயகம் தலைமை தாங்கினார்.
     
    அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் உப தலைவர் முத்துகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 78 மாத பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,

    குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.

    இதில் நிர்வாகிகள் வெங்கடாச்சலம், ராமச்சந்திரன், முத்துசாமி, முத்தையா, பொன்ராஜ், குமார சாமி, ஆறுமுகம், நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×