search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகாசி திருவிழாவை முன்னிட்டு கைலாசநாத சுவாமி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்ற காட்சி.
    X
    வைகாசி திருவிழாவை முன்னிட்டு கைலாசநாத சுவாமி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்ற காட்சி.

    நெல்லை சந்திப்பு கைலாசநாத சுவாமி கோவில் வைகாசி திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது

    நெல்லை சந்திப்பு கைலாசநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை சந்திப்பு கைலாசபுரம் கைலாசநாத சுவாமி கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று  கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    விழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து  செப்பு கேடயத்தில் சவுந்தரி அம்பாள்  கைலாசநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

    அதனைத் தொடர்ந்து கொடிப்பட்டம் பல்லக்கில் ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 

    பஞ்ச வாத்தியங்கள் இசைக்கப்பட்டு கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.  தொடர்ந்து பால், தயிர் , இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான பஞ்சமூர்த்திகள் வீதி உலா வருகிற 2-ந்தேதியும், தேரோட்டம் வருகிற 7-ந் தேதியும் நடைபெறுகிறது.

    Next Story
    ×