search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலியுறுத்தல்"

    • பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் நிறைவு செய்யப்பட்டது.

    உடுமலை:

    பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து நீர் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு கோடை மற்றும் திட்ட தொகுப்பு அணைகளுக்கு அதிக பயன் அளிக்கும் தென் மேற்கு பருவ மழையும் ஏமாற்றியதால் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் போதிய நீர்இருப்பு இல்லை.இதனால் பி.ஏ.பி., 4ம் மண்டல பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு முழுமையான சுற்றுக்கள் நீர் வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டது.

    பாசன நிலங்களிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கடந்த செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 11ந் தேதி வரை, 21 நாட்களுக்குள் ஒரு சுற்றுக்கு மொத்தம், 2 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் திருமூர்த்தி அணையிலிருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் பிரதான கால்வாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் வீணாணதோடு கால்வாய் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் பாசன நிலங்களுக்கு நிறுத்தப்பட்ட 6 நாட்கள் மீண்டும் நீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மேலும், 6 நாட்கள் நீர் திறக்க அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் நிறைவு செய்யப்பட்டது.

    திருப்பூர் பிரிவு கால்வாய்க்கு மட்டும் நேற்று முன்தினம் நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. 135 நாட்கள் மண்டல பாசன காலமாகக்கொண்டு 5 சுற்றுக்கள் வரை நீர் வழங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால் பாசன காலம் உயிர்த்தண்ணீர் சுற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.வட கிழக்கு பருவ மழையும் தற்போது துவங்கியுள்ளதால், 4ம் மண்டல பாசன நிலங்களுக்கு நீர் இருப்பை பொருத்து, நவம்பர் மாதத்தில் கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மாவட்டத்திலுள்ள ரேஷன்கடைகளுக்கு அனைத்து பொருட்களும் உரிய நேரத்தில் அனுப்பி வைக்கப்படுவதில்லை.
    • பி.எச்.எச்., கார்டுகளுக்கு சில மாதங்களாகவே குறைந்த அளவே அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர்,:

    ரேஷன் கடைகளுக்கு உரிய நேரத்தில் அனைத்து பொருட்களையும் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் சார்பில், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள ரேஷன்கடைகளுக்கு அனைத்து பொருட்களும் உரிய நேரத்தில் அனுப்பி வைக்கப்படுவதில்லை. தொடர்ந்து பல மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் ஆகியன மாத இறுதி நாட்களிலேயே வழங்கப்படுகிறது.இதனால் ரேஷன் விற்பனையாளர் - பொதுமக்களிடையே வீண் பிரச்னைகள் ஏற்படுகின்றன. மிகுந்த மன உளைச்சலுக்கு ரேஷன் பணியாளர் தள்ளப்படுகின்றனர். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. இந்நிலையில், இம்மாதமும் குடோன்களில் துவரம்பருப்பு, பாமாயில் இல்லாமலேயே, ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. பி.எச்.எச்., கார்டுகளுக்கு சில மாதங்களாகவே குறைந்த அளவே அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

    ரேஷன் கடைகளுக்கு அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் மாநாடு
    • ஆற்றில் நீர் எடுத்து விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், பவானி நதி நீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு சார்பில் பவானி ஆற்றில் நீர் பாசன திட்டம், நீர்ப்பாசன அனுமதி கேட்டு விவசாயிகள் மாநாடு நடைபெற்றது.

    பவானி ஆற்று நீர்பாசன விவசாயிகள் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் பி.என்.ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். பவானி நதிநீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு தலைவர் டி.டி.அரங்கசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் ஆகியோர் சிறபு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    கூட்ட்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    பவானி ஆற்றில் ஆண்டுக்கு 70 டி.எம்.சி தண்ணீர் வருகிறது. இதில் குடிநீர், மற்ற தேவைகளுக்கு 10 டி.எம்.சி நீர் போக மீதமுள்ள 60 டி.எம்.சி தண்ணீரில் 6 லட்சம் ஏக்கர் விவசாயம் மேற்கொள்ளலாம். அதன்படி நெல்லித்துறை முதல் பெத்திக்குட்டை வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 80 ஆண்டுக்கும் மேலாக பவானி ஆற்றின் நீரை கொண்டு விவசாயம் செய்து வருகிறோம்.

    கடந்த 2017-ல் பவானி ஆற்றில் தண்ணீர் வற்றவே, பம்ப் மோட்டார் மூலம் ஆற்றில் தண்ணீர் எடுக்க அரசு தடை விதித்தது. இதையடுத்து அப்போதைய எம்.பியும், தற்போதைய எம்.எல்.ஏவுமான ஏ.கே.செல்வராஜ், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பேசி விவசாயிகளுக்காக உரிய நடவடிக்கை எடுத்தார்.

    இந்த நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் பவானி ஆற்றில் மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெத்திக்குட்டை பகுதியில் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் வறட்சி காலங்களில் கூட விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வராது.

    நதியின் கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு நதியில் பாயும் தண்ணீரை பயன்படுத்த உரிமை உண்டு என சட்டம் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு எந்த பாசன வசதியும் ஏற்படுத்தி கொடுக்க அரசு முன் வருவது இல்லை.

    எனவே பவானி ஆற்றில் பாசனத்திற்கு அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுத்து விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதோடு இப்பகுதி மற்ற விவசாயிகளுக்கும் பாசன திட்டத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    ஆற்றில் நீர் எடுத்து விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு ஆற்றில் தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அரசு இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதில் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ பா.அருண்குமார், காரமடை தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் பிரஸ்குமார் என்ற சிவக்குமார், தொழில் அதிபர் நந்தக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பை அகற்றி விபத்தை தடுக்க வலியுறுத்த வேண்டும்.
    • தடுப்பு சுவர் தேவையா என்பதை பரிசீலிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வலுத்து வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகு திக்குள் நுழையும் வழியில் பிரசித்தி பெற்ற மடவார் வளாகம் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையான மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை எல். ஐ.சி. அலுவலக திருப்பத்தில் மிகக் குறுகிய தேசிய நெடுஞ்சாலையாகவும், அதில் சென்டர் மீடியன் தடுப்புச் சுவரும் அமைக்கப் பட்டுள்ளது.

    இந்த தடுப்பு சுவர் அமைக்கப்படுவதற்கு முன் னால் பல ஆண்டுகளாக பெரும்பாலும் விபத்துக்கள் நடைபெற்றது இல்லை. ஆனால் இந்த தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதுக்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களில் 10-க்கும் மேற்கட்ட கனரக லாரிகள் தடுப்புச் சுவரில் மோதி திருப்ப முடியாமல் விபத்துக்களில் சிக்கியுள் ளன.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பாக அந்த திருப்பத்தில் தடுப்புச் சுவர் இருப்பது தெரியாமல் வெளி மாநி லத்திலிருந்து வந்திருந்த லாரி மோதி பலத்த சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த தடுப்பு சுவர் தேவையா என்பதை பரிசீலிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வலுத்து வருகி றது.

    அவ்வாறு தேவை எனில் ஒளிரும் விளக்குகளும், முக் கியமான திருப்பத்தில் தடுப்புச் சுவர் உள்ளது என்ற தெளிவான விளம்பர பலகையும் தேசிய நெடுஞ் சாலை நிர்வாகத்தால் கன ரக ஓட்டுநர்களின் பார்வை யில் படும்படி விளம்பரப்ப டுத்த வேண்டும். காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கடந்த இரண்டு ஆண்டுகளில் பரிசீலித்தால் இதன் விபத் துக்கள் குறித்த விவரம் தெரிய வரும்.

    தேசிய நெடுஞ்சாலையின் பராமரிப்பில் இருந்த இந்த சாலை ஆணையத்தால் தற் போது பராமரிக்கப்படு கிறது. ஆனால் சாலைகளில் குண்டும் குழியும் ஏற்படும் போது உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. கடும் நிர்ப்பந்தத்தால் ஒரு சில நேரங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் சாலை தற்காலிகமாக சரி செய்யப் படுகிறது. இந்த தொடர் விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அக்கறை செலுத்துவது இல்லை என்று குற்றச்சாட் டும் நிலவுகிறது.

    போதிய நிதி இல்லை, சாலை பணியாளர்கள் இல்லை என்ற காரணங்கள் கூறப்படுகிறது. மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலை யில் பெரியகுளம் கண்மாய் தடுப்புச் சுவர் உள்ளது. இந்த கண்மாய் கரை மூல மாக மழை காலங்களில் வடியும் மழை நீர் செல்வ தற்கு தேசிய நெடுஞ்சாலை யில் வடிகால் வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை.

    கலெக்டர் பரிசீலனை

    இதனால் செங்கோட்டை பகுதியில் இருந்து மதுரை நோக்கி வரும் சாலையில் இருசக்கர பயணிகள் ஒதுங் குவதற்கு இடம் இல்லாமல் மழைநீர் தேங்கி கடந்த காலங்களில் விலைமதிப் பற்ற உயிர்கள் பறிபோகி யுள்ளது. எனவே விருதுநகர் மாவட்ட கலெக்டர் இப்பகு தியில் அமைக்கப்பட் டுள்ள தடுப்புச் சுவர் தேவைதானா என்பதை பரிசீலிக்கவும், தொடர் விபத்து நடக்காமல் நிரந்தர தீர்வு காணவும் உடனடி நடவடிக்கை எடுக்க ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் சேவை மைய அமைப்பு சார் பில் அதன் செயல் தலை வர் பாலகிருஷ்ணன் கேட் டுக்கொண்டுள்ளார்.

    • 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும்.
    • மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராம னுக்கு எழுதியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணி களை ஆய்வு செய்ததோடு பணியாளர்களுடன் கலந்து ரையாடி அவர்களது குறைக ளையும் கேட்ட றிந்தேன். பல்வேறு பகுதி களில் 100 நாட்க ளுக்கு குறைவாகவே வேலை அளிப்பதாகவும் கடந்த ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் 9 வாரங்களாக ஊதிய பட்டு வாடா வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் நோக் கமே கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும், கிராமப்புற பெண்களின் பொருளாதாரம் மேம்பாட்டு அடைய வேண்டும் என்பதற்காக தான்.

    இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டுக்கு ரூ.83 ஆயிரம் கோடி நிதி தேவைப் படும் நிலையில் தற்போது ரூ.69 ஆயி ரம்கோடி நிதி மட்டுமே ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நிதி ஆண் டில் ரூ. 17 ஆயிரம் கோடி நிலுவை உள்ள நிலையில் திட்ட பயனாளிகளுக்கு முழுமையாக ஊதிய பட்டுவாடா செய்ய முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. இதனால் அவர்கள் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணி யாளர்களுக்கு கடந்த 9 வாரங்களாக நிலுவையில் உள்ள ஊதி யத்தை உடனடி யாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

    திட்டத்தின் கீழ் தாமதம் இல்லாமல் ஊதிய பட்டு வாடா செய்ய வேண்டியது சட்டபூர்வ கடமை மட்டுமல் லாது பயனாளிகளின் வாழ் வாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய தார்மீக கடமையு மாகும்.

    எனவே பயனாளிகளுக்கு ஊதிய பட்டுவாடா செய்வ தற்கான நடவடிக்கையை துரி தப்படுத்த வேண்டு கிறேன். இந்த பிரச்சினையில் தங்கள் உடனடி கவனம் செலுத்துவது இந்த ஏழை குடும்பங்களில் நிதிச் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல் பண் டிகை காலத்தில் அவர்களுக்கு நிவாரணமாக இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழக அரசு விருந்தினர் மாளிகையில், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தற்காலிகமாக கட்டப்பட்டு வரும் ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைகளின் தற்போதைய நிலை குறித்தும், குன்னூர் பஸ் நிலைய விரிவாக்க பணிகள் குறித்தும், குன்னூர் வாகன நிறுத்துமிடம் அமைக்க இடம் தேர்வு செய்தல் தொடர்பாகவும் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளின் மூலம் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். முதல்-அமைச்சர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சித்திட்ட பணிகளை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளார்கள்.

    அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு துறையின் வாயிலான நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், நடைபெறவுள்ள வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைகள் அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொண்டு, அதனை சம்மந்தப்பட்ட வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

    மேலும் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பணிகள் தரமான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனப்பிரியா(பொது), மணிகண்டன் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கமுதியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
    • கூட்டத்தில் ஒன்றிய தலைவர் வலியுறுத்தினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போல் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை முன்னிலை வகித்தார்.மேலாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் பேசுகையில், மழை காலம் தொடங்கிவிட்டன. ஆனால் போதுமான மழை பெய்யவில்லை. விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கிராமப்பகுதிகளில் காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது. கமுதி யூனியனில் 30 பேரை சுகாதார பணியாளர்களாக நியமனம் செய்துள்ளோம். அவர்கள் வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிகளை வார்டு கவுன்சிலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.

    • அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி ரூ.1,657 கோடி செலவில் நடந்து முடிந்துள்ளது.
    • வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கும் அளவுக்கு பெய்யாது.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி ரூ.1,657 கோடி செலவில் நடந்து முடிந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம், காலிங்கராயன் அணைக்கட்டில் நிரம்பி, வெளியேறும் உபரிநீர் தான் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் பருவமழையை நம்பிதான் திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

    இது குறித்து நீர்வளத்துறையினர் கூறுகையில், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென் மேற்கு பருவமழையை கணக்கிட்டு திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில் தென் மேற்கு பருவமழை பொய்த்தது. வட கிழக்கு பருவமழையின் போது போதிய மழை பெய்து, நீர் வரத்து இருக்கும் போது தான் திட்டத்தை செயலாக்கத்திற்கு கொண்டு வர முடியும் என்றனர்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறுகையில், கடந்த ஆண்டே இத்திட்டம் 90 சதவீதம் முடிந்துவிட்டது.கடந்த நான்காண்டாக நீலகிரி உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து பவானியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கடந்தாண்டு 620 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. அப்போதே வெள்ளோட்டம் முடித்து திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாம். வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கும் அளவுக்கு பெய்யாது. நீலகிரி மலைத்தொடரில் பெருமழை பெய்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே உபரி நீர்வெளியேறும். அதன் வாயிலாக திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறுகையில், நீலகிரி மலையில் பெய்யும் மழையை நம்பியே திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இடைபட்ட நேரத்தில் திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

    • தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அரியலூர் பாமக வலியுறுத்தி உள்ளது
    • அரியலூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

    அரியலூர்,

    அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமையில் நடைபெற்றது.மாநில வன்னியர்சங்க செயலாளர் வைத்தி, மாவட்ட தலைவர் அசோகன், மாவட்ட வன்னியர்சங்க செயலாளர் தர்மபிரகாஷ், பெரம்பலூர்மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராமதாஸ், மாவட்ட பொருளாளர் வெற்றிச்செல்வி, மகளிர் அணி துணை செயலாளர் செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை, மாணவர் அணி சங்கசெயலாளர் ஆளவந்தான், மாநிலபொதுக்குழு உறுப்பினர் ரவிசங்கர், ஒன்றிய செயலாளர் செம்மலை, நகரசெயலாளர் விஜய் உட்பட அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரியலூர் அரசு மரு த்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள் மற்றும் போதிய உயர்சிகிச்சை உபகரணங்கள் மற்றும் உபகரண கையாளுனர்களை உடனடியாக நியமனம் செய்திட வேண்டும். மாவட்டத்தில் இயங்கிவரும் சிமெண்ட் ஆலைக்கு அதிக பாரங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமப்புற பகுதிகளில் உள்ள மதுபான  கடைகளை உடனடியாக மூட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை அரியலூர் மாவட்டத்தில் முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்களவைத் தேர்தலுக்காக பாமக மற்றும் அதன் துணை அமைப்புகள் கிராமம் கிராமமாகச் சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபடுவது.வாக்குச் சாவடி முகவர்கள், கிளை நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது மற்றும்சுண்ணாம்பு சுரங்கள் முறைகேடாக அதிக ஆழத்திற்கு வெட்ட படுவதைக் கண்டித்தும், சுரங்கங்களில் வெடி வைத்து தகர்த்து சுண்ணாம்பு பாறைகள் வெட்டப்படுவதைக் கண்டித்து, பாமக-வன்னியர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கால்நடை மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
    • விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் கால்நடை மருத்துவமனை கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. இந்த கால்நடை மருத்துவ மனையில் சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பசுமாடு, காளை மாடு, ஆடுகள், பூனைகள், நாய்கள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை சிகிச்சை அழைத்து வரு கின்றனர்.

    இங்கு கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய தொற்று நோய் மற்றும் மர்ம நோய்க்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இதற்கான தடுப்பூசியும் இங்கு போடப்படுகிறது. இந்த கால்நடை மருத்துவ மனையின் கட்டிட முன்பகுதி உட்பட பல பகுதி மேற்கூரை கள் சிமெண்ட் பெயர்ந்து கீழே விழுந்து கம்பி தெரிகிறது.

    எந்த நேரம் இந்த மேல் கூரை இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது. இடிந்து விழுந் தால் இங்கு சிகிச்சைக்கு வரக்கூடிய கால்நடைக ளுக்கும், அழைத்து வரக் கூடிய பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.

    விபரீதம் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இடிந்து விழக்கூடிய நிலை யில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டடத்தை கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • ராமேசுவரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
    • தினமும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை யிலான பக்தா்கள், சுற்று லாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் இந்தியாவின் தேசிய புனிதத் தலமாகவும் சுற்றுலாப் பகுதியாகவும், இருந்து வரு கிறது. தினமும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை யிலான பக்தா்கள், சுற்று லாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா். மேலும், விடுமுறை நாள்கள், அமாவாசை நாள்க ளில் ஆயிரக்கணக்கா னோா் வந்து செல்கின்றனா். பாம்பன் ெரயில் பாலம் சேதமடைந்த நிலையில் ராமேசுவரத்துக்கு ெரயில் போக்குவரத்து நிறுத் தப்பட்டது.

    இதனால் ெரயில்களில் வந்து கொண்டிருந்த 8 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பயணி கள் தற்போது ராமநாதபுரத்தி லிருந்து ராமேசுவரத்துக்கு வருவதற்கு அரசு பஸ், சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனங்களை பயன்படுத்தும் நிலை உள் ளது. தனியாா் பஸ் வசதி இல்லாத நிலையில், முழு மையாக அரசு பஸ்களை நம்பி பய ணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

    இதே போல, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் இருந்து 5 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்களின் சொந்த பணி, வியாபாரம், மருத்து வம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிமித்தமாக ராம நாதபுரத்துக்கு வந்து செல் கின்றனா்.

    ராமேசுவரத்தி லிருந்து ராமநாதபுரத்துக்கும்,

    ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரத்துக்கும் இயக்க படும் பஸ்கள் வழக்கமான எண்ணிக்கையில் இயக்கப் படுவதால், ஒவ்வொரு பஸ் சிலும் 80 முதல் 90 போ் வரை கடும் நெடுக்கடிக்கு இடையே பயணம் செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

    இதனால், ராமேசுவரம்-ராமநாதபுரம் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர் கள் கோரிக்கை விடுத்தனா்.

    • நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என எச்சரித்தனர்.
    • கிராம சபை கூட்டத்தில் 73 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை ஊராட்சி சார்பில் நஞ்சப்பசத்திரத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் தலைவர் மஞ்சுளா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக குன்னூர் சிறப்பு தாசில்தார் சீனிவாசன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் மழை நீர் சேகரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் பராமரிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் ஏற்படும் வகையில் உள்ள பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து சோலடா மட்டம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊருக்கு ரேஷன் கடை அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். அங்குள்ள நூலக கட்டிடத்தில் இந்த கடையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. சோலடா மட்டத்தில் 290 குடும்ப அட்டைகள் உள்ளது.

    அனைவரும் அருகே உள்ள கோடமலை பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி சுமந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் இன எச்சரித்தனர்.

    தொடர்ந்து குன்னூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் இப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது இந்த கிராம சபை கூட்டத்தில் 73 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    ×