search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பை அகற்றி விபத்தை தடுக்க வலியுறுத்தல்
    X

    சாலை தடுப்புச்சுவரில் மோதி நிற்கும் வடமாநில லாரி.

    மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பை அகற்றி விபத்தை தடுக்க வலியுறுத்தல்

    • மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பை அகற்றி விபத்தை தடுக்க வலியுறுத்த வேண்டும்.
    • தடுப்பு சுவர் தேவையா என்பதை பரிசீலிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வலுத்து வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகு திக்குள் நுழையும் வழியில் பிரசித்தி பெற்ற மடவார் வளாகம் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையான மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை எல். ஐ.சி. அலுவலக திருப்பத்தில் மிகக் குறுகிய தேசிய நெடுஞ்சாலையாகவும், அதில் சென்டர் மீடியன் தடுப்புச் சுவரும் அமைக்கப் பட்டுள்ளது.

    இந்த தடுப்பு சுவர் அமைக்கப்படுவதற்கு முன் னால் பல ஆண்டுகளாக பெரும்பாலும் விபத்துக்கள் நடைபெற்றது இல்லை. ஆனால் இந்த தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதுக்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களில் 10-க்கும் மேற்கட்ட கனரக லாரிகள் தடுப்புச் சுவரில் மோதி திருப்ப முடியாமல் விபத்துக்களில் சிக்கியுள் ளன.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பாக அந்த திருப்பத்தில் தடுப்புச் சுவர் இருப்பது தெரியாமல் வெளி மாநி லத்திலிருந்து வந்திருந்த லாரி மோதி பலத்த சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த தடுப்பு சுவர் தேவையா என்பதை பரிசீலிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வலுத்து வருகி றது.

    அவ்வாறு தேவை எனில் ஒளிரும் விளக்குகளும், முக் கியமான திருப்பத்தில் தடுப்புச் சுவர் உள்ளது என்ற தெளிவான விளம்பர பலகையும் தேசிய நெடுஞ் சாலை நிர்வாகத்தால் கன ரக ஓட்டுநர்களின் பார்வை யில் படும்படி விளம்பரப்ப டுத்த வேண்டும். காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கடந்த இரண்டு ஆண்டுகளில் பரிசீலித்தால் இதன் விபத் துக்கள் குறித்த விவரம் தெரிய வரும்.

    தேசிய நெடுஞ்சாலையின் பராமரிப்பில் இருந்த இந்த சாலை ஆணையத்தால் தற் போது பராமரிக்கப்படு கிறது. ஆனால் சாலைகளில் குண்டும் குழியும் ஏற்படும் போது உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. கடும் நிர்ப்பந்தத்தால் ஒரு சில நேரங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் சாலை தற்காலிகமாக சரி செய்யப் படுகிறது. இந்த தொடர் விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அக்கறை செலுத்துவது இல்லை என்று குற்றச்சாட் டும் நிலவுகிறது.

    போதிய நிதி இல்லை, சாலை பணியாளர்கள் இல்லை என்ற காரணங்கள் கூறப்படுகிறது. மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலை யில் பெரியகுளம் கண்மாய் தடுப்புச் சுவர் உள்ளது. இந்த கண்மாய் கரை மூல மாக மழை காலங்களில் வடியும் மழை நீர் செல்வ தற்கு தேசிய நெடுஞ்சாலை யில் வடிகால் வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை.

    கலெக்டர் பரிசீலனை

    இதனால் செங்கோட்டை பகுதியில் இருந்து மதுரை நோக்கி வரும் சாலையில் இருசக்கர பயணிகள் ஒதுங் குவதற்கு இடம் இல்லாமல் மழைநீர் தேங்கி கடந்த காலங்களில் விலைமதிப் பற்ற உயிர்கள் பறிபோகி யுள்ளது. எனவே விருதுநகர் மாவட்ட கலெக்டர் இப்பகு தியில் அமைக்கப்பட் டுள்ள தடுப்புச் சுவர் தேவைதானா என்பதை பரிசீலிக்கவும், தொடர் விபத்து நடக்காமல் நிரந்தர தீர்வு காணவும் உடனடி நடவடிக்கை எடுக்க ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் சேவை மைய அமைப்பு சார் பில் அதன் செயல் தலை வர் பாலகிருஷ்ணன் கேட் டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×