search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dengue awareness"

    • திண்டுக்கல்லில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தி யாகும் கொசுக்களால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
    • நமது இடத்தை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகளை சுத்தமாகவும், காற்று புகாதபடி மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டு ள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தி யாகும் கொசுக்களால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதற்காக தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சுகாதாரம் மற்றும் டெங்கு விழிப்பு ணர்வு குறித்து மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் ஆர்.எம். காலனி, ராமநாதபுரம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதியில் இன்று காலை வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது மக்கும், மக்கா குப்பைகள் தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும். நமது இடத்தை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகளை சுத்தமாகவும், காற்று புகாதபடி மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பள்ளி குழந்தைகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி சக மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும் குடியிருப்பு பகுதிகளில் புகை தெளி ப்பான் மூலம் கொசுக்களை ஒழிக்கும் பணியை பார்வையிட்டார். வீட்டில் மாடி தோட்டம், காலி இடங்களில் காய்கறி தோட்டம் அமைத்த வர்களுக்கு மாநகராட்சி உரங்களை பயன்படுத்த வலியுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் ராஜ்மோகன், உதவி கமிஷனர் வில்லியம் சகாயராஜ், மண்டல தலைவர் ஆனந்த், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணா மூர்த்தி, பாலமுருகன், தங்கவேல், முகமது ஹனீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொசு உற்பத்தி யாலும், கழிவு நீர் ஆறாக தெருக்களில் ஓடுவதாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    நேற்று முன் தினம் காய்ச்சலால் 31 பேர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று 41 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப் பட்டனர். இதில் 11 பேருக்கு ரத்தப்பரிசோதனை செய்ததில் டெங்கு அறிகுறி ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 30 வயது வாலிபருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப் பட்டார். மேலும் மண்டபத்தை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு பரமக்குடி அரசு மருத்து வமனையில் அனுமதிக் கப்பட்டார்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் பல்வேறு இடங்களில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் நகர், பரமக்குடி, ராமேசுவரம், திருப்புல் லாணி, ஏர்வாடி, கீழக்கரை ஆகிய பகுதிகளில் சுகாதார சீர்கேட்டால் கொசுத் தொல்லை அதிகரித் துள்ளது. இதனால் இங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு டெங்கு பாதிப்பு அறிகுறிகளும் உள்ளன. எனவே மாவட்டத்தில் டெங்கு பரவலை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • கமுதியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
    • கூட்டத்தில் ஒன்றிய தலைவர் வலியுறுத்தினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போல் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை முன்னிலை வகித்தார்.மேலாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் பேசுகையில், மழை காலம் தொடங்கிவிட்டன. ஆனால் போதுமான மழை பெய்யவில்லை. விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கிராமப்பகுதிகளில் காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது. கமுதி யூனியனில் 30 பேரை சுகாதார பணியாளர்களாக நியமனம் செய்துள்ளோம். அவர்கள் வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிகளை வார்டு கவுன்சிலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.

    • திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெங்கு எவ்வாறு உருவாகிறது என்று கண்காட்சி நடத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. தேங்கும் மழைநீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் அதிகளவு உற்பத்தி ஆகிறது. இதன் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக இன்று திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெங்கு எவ்வாறு உருவாகிறது அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கம் மற்றும் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த முகாமில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேயர் இளமதி பேசுகையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்பொழுது ஒருவருக்கு கூட டெங்கு காய்ச்சல் கிடையாது.

    மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தான் வீட்டில் மாணவர்கள் டெங்கு ஒழிப்பினை பெற்றோர்களுக்கு எடுத்து கூறி முறையாக செயல் படுத்துவார்கள். அதனால் தான் மாணவர்கள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைய மாணவர்கள் பங்கு முக்கியமானது. நாட்டை பாதுகாப்பது மாணவர்களின் கடமை போல், டெங்கு தடுப்பு விழிப்புணர்விலும் மாணவர்களின் கடமை இன்றியமையானது என பேசினார் .

    இதில் மாநகர நல அலுவலர் செபாஸ்டின், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் ஜான் பீட்டர், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், லாவண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஆலங்குடி:

    திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலங்குடிசட்ட மன்ற உறுப்பினர் சிவ மெய்ய நாதன் தலைமை வகித்தார்.

    மேற்கு ஒன்றியச் செய லாளர் தங்கமணி, நகரச் செயலாளர் பழனிகுமார், ஒன்றிய விவசாய அணி செய லாளர் விஜயன், கவுன்சிலர் மூர்த்தி, கருணாஸ், ஒன்றிய பிரதிநிதி அருளாந்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணி சந்தைபேட்டையில் உள்ள தி.மு.க அலுவலகத்திலிருந்து புறப் பட்டு கலைஞர் சாலை, திருவள்ளுவர் சாலை, காந்தி சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. முன்னதாக கட்சி அலுவல கம், வடகாடு முக்கம் பஸ் நிறுத்தம், அரச மரம் பஸ் நிறுத்தம், காமராஜ் சிலை, பேருந்து நிலையம், ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்திருந்த நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. சிவமெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் டெங்கு ஒழிப்பு பற்றிய வாசகங்கள் அடங்கிய துண்டுச்பிரசுரங் கள் வழங்கியும், இலவச நிலவேம்பு கசாயம் வழங்கியும், முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான தி.மு.க கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
    டெங்கு கொசு உருவாக காரணமானவர்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் நடவடிக்கை எடுத்தார்.
    கரூர்:

    கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 29-வது வார்டு திருமாநிலையூர் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்புப்பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன், நேற்று வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போது வீடுகளுக்குள் வைக்கப்பட்டிருந்த குடிநீர்த்தொட்டி, குளிர்சாதனப்பெட்டியின் பின்புறம் நீர் இருக்கும் டப்பாக்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கான வாய்ப்பினை கலெக்டர் சுட்டி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியில் பழைய சாயப்பட்டறை இருந்த இடத்தில் தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மட்டைகள், கழிவுப்பொருட்கள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட மாவட்ட கலெக்டர், இதுபோன்ற கழிவு பொருட்களில் மழைநீர் தேங்கினால் டெங்கு கொசு உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும் என கூறியும் இதனை அப்புறப்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களே?. இனி அபராத நடவடிக்கை எடுத்தால் தான் சரிபட்டு வரும் என அந்த இடத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். பின்னர் அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப் பட்டது.

    இதேபோல் ஆட்டோவிற்கான உதிரிபாகங்கள், டயர்கள் போன்ற கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் சாலையின் ஓரம் போட்டு வைத்திருந்த நபருக்கும், வீடுகளில் உள்ள தண்ணீர்த்தொட்டியில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் உரிய பராமரிப்பின்றி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் இருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.2,000 அபராதத்தொகையாக வசூலிக்க நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், அடுத்த முறை ஆய்வுக்கு வரும்போது இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட நபர் களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், அங்கு தேவையில்லாத டயர்களை மழைநீரில் நனையாமலும், நீர் தேங்காமலும் அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் நிர்மல்சன், நகர்நல அதிகாரி ஆனந்தகுமார், வட்டாட்சியர் ஈஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
    கானாடுகாத்தான், மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம் பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    மானாமதுரை:

    மானாமதுரை பேரூராட்சியில் ஒ.வெ.செ. மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கி பார்த்திபனூர் ரஸ்தா, கடைவீதி, அண்ணாசிலை வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், மகளிர்சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் டெங்கு, சிக்குன்குனியா நோய்கள் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய விழிப்புணர்வு குறித்து ஆட்டோ, மைக்செட் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. பேரூராட்சி பரப்புரையாளர்கள் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். முன்னதாக ஊர்வலத்தை மானாமதுரை தாசில்தார் யாஸ்மின் சகர்பான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜான்முகமது, துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பாலசுப்பிரமணியன், குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    கானாடுகாத்தான் பேரூராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எம்.சிடி.எம். மேல்நிலைப் பள்ளி மற்றும் சிவி.சிடி.வி. மீனாட்சி ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் துண்டு பிரசுரங்கள் கொடுத்தும், பேரூராட்சிகள் மூலம் வாகன விளம்பரம் செய்து பொது மக்களிடம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வெளிநாட்டினர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் சிங்கம்புணரி தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் இருந்து திண்டுக்கல் சாலை வழியாக சிங்கம்புணரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளிக்கு ஊர்வலம் வந்தனர். சிங்கம்புணரி தேர்வு நிலைப் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், இளநிலை உதவியாளர் ஹபீப் ராஜா ஆகியோர் ஊர்வலத்தை தொடக்கி வைத்தனர். பேரூராட்சி அதிகாரி சேரல தரன், துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், துணை மேற்பார்வையாளர் தென்னரசு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன் ஆய்வாளர்கள் மதியரசன், எழில்மாறன், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியர் அன்பு உள்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கலந்து கொண்டார்.

    திருப்புவனம் யூனியனை சேர்ந்த மடப்புரத்தில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் யூனியன் ஆணையாளர் முத்துக்குமார், மேலாளர் சுகுமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், ஊராட்சி எழுத்தர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல திருப்புவனம் யூனியனை சேர்ந்த 45 ஊராட்சிகளிலும் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஜஹாங்கீர் உள்பட அலுவலகப்பணியாளர்கள் செய்திருந்தனர். 
    ×