search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector action"

    • டெல்லி குழுவினர் ஆய்வு
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்தவும், வறட்சியை செழிப்பாக்கவும், விவசாயங்களை மேம்படுத்தவும், குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் நடவடிக்கை எடுக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 204 ஊராட்சிகளில் 1,400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் இந்தப் பணி ஆனது தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும்தான் அதிக அளவில் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாவட்ட முழுவதும் பண்ணை குட்டைகள் வெட்டப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து வந்துள்ள குழுவினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து மாவட்ட முழுவதும் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலையில் ஊராட்சியில் 6 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெற்று வரும் பணியை டெல்லியில் இருந்து வந்த டாக்டர் எஸ்வந்த் சாய் ஆய்வு செய்தார்.

    அப்போது பண்ணை குட்டையில் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை அளவீடு செய்தனர். அப்போது பண்ணை குட்டைகள் அமைப்பதால் நிலத்தடி நீர் உயர்வதோடு, குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும், விவசாயம் செழிக்கும், வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இதனால் பண்ணை குட்டை பயனுள்ள ஒன்று என ஆய்வு மேற்கொண்டவர்கள் அங்குள்ள பொது மக்களுக்கு தெரிவித்தனர்.

    மேலும் இந்த ஆய்வின் போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார், உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • அரி சியின் தரத்தினை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சிக்கு ட்பட்ட தனலட்சுமி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 15-ந்தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பான ரூ.1000, 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, 1 முழு நீள கரும்பினை வழங்கிட ஏதுவாக வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் மோகன் அங்கு சென்று டோக்கன் பணியை ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில்:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழர் திருநா ளாம் பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடிடும் பொருட்டு ரேசன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000, 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, 1 முழு நீள கரும்பு வழங்கப்படும் எனவும் கிராமப்புற ரேசன் கடைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்களுக்கும் நகர்புற ரேசன் கடைகளின் மூலம் 300 டோக்கன்கள் நியாயவிலை கடை விற்பனையாளர்கள் மூலம் 3-ந் தேதி முதல் 8-ந்தேதி வரை வீடு வீடாக சென்று ரேசன் கடை விற்பனையாளர்கள் டோக்கன் வழங்கிடவும் 9.01.2023 முதல் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டார். 

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 6,15,020 குடும்ப அட்டைத்தாரர்கள் 434 இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என மொத்தம் 6,15,454 குடும்ப அட்டை தாரர்களுக்கு கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் 982 முழுநேர ரேசன் கடைகள் 245 பகுதி நேர கடைகள் மகளிர் சுயதஉவிக்குழுவின் மூலம் இயங்கும் 27 முழுநேர கடைகள் என மொத்தம் 1,254 ரேசன் கடைகள் மூலம் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்குகின்றனர். மேலும் டோக்கன் வழங்கும் பணியினை கண்காணிக்கும் வகையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஒவ்வொரு நாளும் டோக்கன் வழங்கிய விவரத்தினை கூட்டுறவு த்துறை அலுவலருக்கு தெரிவி த்திடவும் உத்தர விட்டுள்ளார். எனவே குடும்ப அட்டை தாரர்கள் டோக்கனில் குறிப்பி டப்பட்டநாள் மற்றும் நேரத்தில் வந்து பொங்கல் பரிசு தொகுப்பினை கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியிட்டு குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் வந்து பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

    இதன் பின்னர் தனல ட்சுமி கார்டன் ரங்கநாதன் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் திரு நாளை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொ குப்பில் வழங்கப்படவுள்ள அரி சியின் தரத்தினை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் யசோதா தேவி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகா ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • விழுப்புரம் கடலூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது.
    • விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்காத வண்ணம் உள்ளது.

    விழுப்புரம்:

    தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  அதன்படி விழுப்புரம் கடலூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது. புதுவை மாநிலத்திலும் இந்த மழை நீடித்தது. நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதனை அடுத்து இரவு நேரத்தில் கனமழை பெய்ய வானிலை சாதகமாக இருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை 3 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 6.30மணி வரை நீடித்தது. சுமார் 3.30 மணி வரை பெய்த கனமழையால் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் இந்த மழை விழுப்புரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளான அரசூர், இருவேல் பட்டு, திருவெண்ணைநல்லூர், ஏனாதிமங்கலம், கோலியனூர், வளவனூர், கண்டமங்கலம் ,வடக்குறிச்சி, பாக்கம், அரகண்டநல்லூர், காணை, பெரும்பாக்கம், அய்யூர் அகரம், வீடூர், விக்கிரவாண்டி, கூட்டேரிப்பட்டு, செஞ்சி, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த வண்ணம் இருந்தது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக கனமழை பெய்தால் விழுப்புரத்தில் உள்ள புதிய பஸ் நிலையம் மழைநீர் வெள்ளம் சூழ்ந்து காணப்படும். இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். ஆனால் தற்போது விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் சேர்மன் தமிழ்ச்செல்வி மற்றும் மாவட்ட அமைச்சர்கள் ஆகியோர் எடுத்த நடவடிக்கையால் விழுப்புரம் மாவட்டத்தில் எவ்வளவு பெரிய கனமழை பெய்தாலும் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்காத வண்ணம் உள்ளது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    டெங்கு கொசு உருவாக காரணமானவர்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் நடவடிக்கை எடுத்தார்.
    கரூர்:

    கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 29-வது வார்டு திருமாநிலையூர் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்புப்பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன், நேற்று வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போது வீடுகளுக்குள் வைக்கப்பட்டிருந்த குடிநீர்த்தொட்டி, குளிர்சாதனப்பெட்டியின் பின்புறம் நீர் இருக்கும் டப்பாக்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கான வாய்ப்பினை கலெக்டர் சுட்டி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியில் பழைய சாயப்பட்டறை இருந்த இடத்தில் தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மட்டைகள், கழிவுப்பொருட்கள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட மாவட்ட கலெக்டர், இதுபோன்ற கழிவு பொருட்களில் மழைநீர் தேங்கினால் டெங்கு கொசு உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும் என கூறியும் இதனை அப்புறப்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களே?. இனி அபராத நடவடிக்கை எடுத்தால் தான் சரிபட்டு வரும் என அந்த இடத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். பின்னர் அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப் பட்டது.

    இதேபோல் ஆட்டோவிற்கான உதிரிபாகங்கள், டயர்கள் போன்ற கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் சாலையின் ஓரம் போட்டு வைத்திருந்த நபருக்கும், வீடுகளில் உள்ள தண்ணீர்த்தொட்டியில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் உரிய பராமரிப்பின்றி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் இருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.2,000 அபராதத்தொகையாக வசூலிக்க நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், அடுத்த முறை ஆய்வுக்கு வரும்போது இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட நபர் களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், அங்கு தேவையில்லாத டயர்களை மழைநீரில் நனையாமலும், நீர் தேங்காமலும் அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் நிர்மல்சன், நகர்நல அதிகாரி ஆனந்தகுமார், வட்டாட்சியர் ஈஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
    திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். #Tasmac #plasticban
    சென்னை:

    வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

    அதன் அடிப்படையில் இப்போதே ஒரு சில மாவட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    முதல் கட்டமாக டாஸ்மாக் மதுக்கடைகள், மதுபான கூடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருவதால் அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

    டாஸ்மாக் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்கள். ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

    அதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

    பார் உரிமையாளர்களை அழைத்து டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக காகிதங்கள் அல்லது கண்ணாடி டம்ளர் போன்றவற்றை பயன்படுத்துமாறு எடுத்துரைத்துள்ளனர். அதனால் வருகிற 1-ந்தேதி முதல் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    படிப்படியாக அனைத்து மாவட்டத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. #Tasmac #plasticban

    பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர் சிவஞானம் 12 வாகனங்களின் தகுதி சான்றிதழை ரத்து செய்தார்.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்களும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குழு ஆய்வு மேற்கொள்ள தனித்தனியே நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நேற்று விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 44 பள்ளிகளின் 172 வாகனங்கள் மற்றும் அருப்புக்கோட்டை போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 32 பள்ளிகளின் 160 வாகனங்கள் ஆக மொத்தம் 76 பள்ளிகளைச் சேர்ந்த 332 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பணியினை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்து வாகனங்களில் அவசர கால வழிகள், இருக்கைகள், வாகனங்களின் தரைத்தளம், ஓட்டுனர்களின் உரிமம், வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள், தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா போன்ற 21 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

    அனைத்து இனங்களும் சரியான முறையில் உள்ள வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படும் என்றார். பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி 21 பாதுகாப்பு அம்சங்களும் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    தீயணைப்பு துறையின் மூலம் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு வாகனத்தில் உள்ள தீயணைப்புக்கருவிகளை அவசர காலங்களில் எவ்வாறு இயக்குவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 21 அம்சங்களையும் முறையாக பராமரிக்காத 12 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்றிதழை நீக்கி கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.

    இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 
    ×