search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றச்சாட்டு"

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக செல்லூர் ராஜூ குற்றம் சாட்டினார்.
    • மக்கள் திண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நரிமேடு பகுதியில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை யில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடை பெற் றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்குகிறார்கள். அப்போது வரை திராவிட முன்னேற்றக் கழகத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் எம்.ஜி.ஆர். நடித் தார். எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கிய பின்பு புது கட்சியை தொடங்கினார். அதற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் சூட்டினார் இரட்டை இலையை சின்னமாக அறி வித்தார். தற்போது இறந்தும் இறைவனாக எம்.ஜி.ஆர். வாழ்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி விவசாய குடும்பத்தில் உழ வர் மகனாக பிறந்தவர் அரசு பள்ளியில் படித்த வர். அ.தி.மு.க. ஆட்சியில் 100 நாட்கள் தாண்டாது என பேசினார். மு க ஸ்டாலின். அந்தப் பேச்சுக்களை தவிர்ப்படியாக்கிவிட்டு 4 1/2 வருஷம் சிறப்பாக ஆட்சி அமைத்தவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது இரண்டரை கோடி தொண் டர் களை அ.தி.மு.க.வில் வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி.

    மாணவர்களுக்கு கல்வி கடனை ரத்து செய்வேன், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என கூறினார்கள். அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் எனது தந்தை ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறி னார். ஆனால் எதையும் செய்யவில்லை.

    மாணவி அனிதா மரணத்தை வைத்து தி.மு.க. நாடகம் ஆடினார்கள்.

    தி.மு.க. இதுவரை சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியது இல்லை, மக்கள் வரிப்பணத்தில் திமுக தலைவர் கலைஞர் இலவச டி.வி. கொடுத்தார். கேபிள் கனெக்சனை கொண்டு வந்து ஐந்து வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தார்கள்.

    மதுக்கடைகளில் குவாட் டருக்கு ரூ. 10 அதிகமாக கொடுத்தால் தான் கிடைக் கும். இந்த பத்து ரூபாய் கரூர் கம்பெனிக்கு போனது தற் போது முதல்வருக்கு அந்த பத்து ரூபாய் செல்கிறது.

    ஊழல் செய்வதில் சிறந்த கட்சி தி.மு.க., தற்போது விலைவாசியை கட்டுப் படுத்தவில்லை.விலைவாசி உயர்வு அதிகரித்து மக்கள் திண்டாட்டத்தில் இருக்கி றார்கள்.

    தற்போது எங்கு பார்த் தாலும் போதை கஞ்சா தலை விரித்து ஆடுகிறது. கஞ்சா கடத்தலை தடுக்கி றோம் என காவல்துறை சொல்கிறது ஆனால் தடுக்க முடியவில்லை. தி.மு.க. கட்சிக்காரர்களே கஞ்சா விற்கிறார்கள். மதுரைக்கு எந்த ஒரு நல்ல திட்டமும் தி.மு.க. செயல் படுத்த வில்லை.

    1,296 கோடி மதிப்பில் மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைப்பதற்கு சிறப்பு திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. அதை 2023 நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் பேசினேன். என்னை தெர்மாகோல் என நக்கல் செய்தார்கள். அமைச்சர் துரைமுருகன் என்னை கிண்டல் செய்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து கட்டப்பஞ்சாயத்து அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது.

    இந்தியாவிலேயே முதல்முறையாக மாணவர் களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தியவர் ஜெயலலிதா.பெண்களுக்கு மாணவி களுக்கு மாதவிடாய் காலங் களில் துணியை வைக்கிறார் கள் அதனால் இலவசமாக நாப்கின் வழங்கினார்.பெண் குழந்தைகள் 12-வது படிக்கும் போது இலவசமாக லேப்டாப் கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. பெண் திருமணத்திற்கு தாலிக்கு நான்கு கிராம் தங்கம் கொடுத்தார். பெண்கள் 10-ம் வகுப்பு படித்தால் 25 ஆயிரம் ரூபாய் பட்டப் படிப்பு படித்தால் 50 ஆயி ரம் ரூபாய் திருமண உதவித் தொகை கொடுத்தது ஜெயல லிதா. அதன் பின்பு பெண் களுக்கு சமுதாய வளை காப்பு நடத்தி சீர்வரிசை கொடுத்தவர் ஜெயலலிதா.

    அதனைத் தொடர்ந்து குழந்தை பிறக்கும்போது சத்தான புராத பவுடர்கள் கொடுத்து 18,000 பணம் கொடுத்தார்.குழந்தை பிறந்த பின்பு 16 வகையான பொருட்கள் அடங்கிய தாய் சேய் நல பெட்டியை கொடுத்தவர் ஜெயலலிதா.

    பெண்களுக்கு இலவச மாக மிக்ஸி கிரைண்டர் மின்விரிசி கொடுத்தவர் ஜெயலலிதா.

    வேலைக்கு பணி புரியும் பெண்களுக்கு இரண்டு சக்கர வாகனம் மானிய விலையில் கொடுத்தார்.மகளிர் பிரச்சினையை தீர்ப் பதற்கு மகளிர் காவல் நிலை யங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.பெண்கள் கமெண்ட்டோ படை கொண்டு வந்தார்.உள் ளாட்சித் தேர்தலில் பெண் கள் 50 சதவீதம் போட்டியிட வேண்டும் என சட்டம் நிறைவேற்றியவர் ஜெயலலி தா.

    நாட்டில் பசி இருக்கக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு ரேஷன் அட்டை தாரர்களுக்கும் விலை யில்லா அரிசி கொடுத்தார்.இது போன்ற ஏதாவது ஒரு திட்டத்தை திமுக கொண்டு வந்ததா?

    எனவே மீண்டும் எடப் பாடியார் தலைமையில் நல்லாட்சி விரைவில் அமை யும். அப்போது இந்த திட்டங் கள் எல்லாம் மக்களுக்கு மீண்டும் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கூடுதல் பஸ் இயக்கப்படுமென உத்தரவாதம் அளித்தனர்.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடலூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு ஷேர் ஆட்டோ கவிழ்ந்து மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 8-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து கல்லூரி நேரத்தில் கூடுதலாக அரசு பஸ் விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கூடுதல் பஸ் இயக்கப்படுமென உத்தரவாதம் அளித்தனர். இதனையடுத்து ஷேர் ஆட்டோக்களை தவிர்த்த மாணவர்கள், கடந்த சில தினங்களாக அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்தனர்.

    இன்று காலை கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதற்காக மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே காத்திருந்தனர். ஆனால், நீண்ட நேரமாக மாணவர்கள் காத்திருந்தும் அரசு பஸ் வரவில்லை. நேரம் ஆக, ஆக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அந்த பகுதி பரபரப்பானது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பஸ் வரவில்லை என மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டும் எழுந்தது. அப்போது ஒரு மணி நேரம் தாமதமாக அரசு பஸ் வந்தது. அதில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். வருங்காலங்களில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்களை குறித்த நேரத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்.
    • தி.மு.க ஆட்சியின் ஒரே சாதனை ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை கடன் வாங்கியது தான்.

    கோவை,

    அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி சார்பில் செல்வபுரம் தெலுங்குபாளையம் முத்துமாரியம்மன் கோவில் அருகே பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு 76-வது வட்ட செயலாளர் கேபிள் கருப்புசாமி தலைமை தாங்கினார்.

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் டி.கருப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் டிபி.வேலுசாமி, ராஜா என்ற ராமமூர்த்தி, டி.சக்திவேல், பகுதி செயலாளர்கள் தி.மதனகோபால், வி.குலசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி மற்றும் கொள்கை பரப்பு துணை செயலாளரும், திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ரவி மரியா, பழக்கடை மூர்த்தி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் டி.லட்சுமி–காந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முன்னதாக விழாவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதா வது:-

    எடப்பாடியார் பழனி சாமி முதல்-அமைச்சராக இருந்த போது கோவை மாவட்டத்திற்கு கேட்ட திட்டங்களை எல்லாம் தந்தார்.

    அ.தி.மு.க ஆட்சியில் கோவைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் 2½ ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் எந்த திட்டங்களையும் கோவைக்கு கொண்டு வரவில்லை.

    தி.மு.க ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி உயர்வு என அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டனர்.காவிரி பிரச்சினைக்காக திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராடாமல் உள்ளனர்.

    கடந்த தேர்தலில் திமுகவிற்கு ஏமாந்து வாக்களித்ததாக மக்கள் கூறுகிறார்கள். தி.மு.க ஆட்சியின் ஒரே சாதனை ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை கடன் வாங்கியது தான்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம். எப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 200 தொகுதிக்கு மேல் வென்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் என்.கே.செல்வ துரை, எஸ்.மணிமேகலை, என்.எஸ்.கருப்புசாமி, ஜிகே.விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ.சந்திரசேகர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் டி.சி.பிரதீப், பொதுக்குழு உறுப்பினர் சுசிலா மாணிக்கராஜ், பேரூராட்சி கழக செயலாளர்கள் ஜெகநாதன், கே.கிருஷ்ணராஜ், ஏ.சுந்தர் ராஜ், ரவி(எ) காளிச்சாமி, ஆடலரசு, கே.எஸ்.ஷங்கர், ஏ.விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.மோகன்ராஜ், ஏ.செல்வராஜ், டி.கே.கார்த்திகா பிரகாஷ், பி.கனகராஜ், மற்றும் சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் சிவகுமார், மாணிக்கராஜ், பாசறை நிஷ்கலன், ஆவின் எஸ்.முருகன், செபி செபாஸ்டியன், முத்துஇள ங்கோவன், சுரேஷ்குமார், அப்துல்ரகுமான், வட்ட கழக செயலாளர்கள் சித்திரை செல்வராஜ், ஏ.செல்லப்பன், ஜூனியர் ராஜா, எம்.புல்கான், கே.பி.பாஸ்கரன், எம்.ஜெகதீசன், விவேகானந்தன், எஸ்.ஜெகதீஷ், மணல் நாராயணன், எஸ்டி.கதிரேசன், ரவி நடராஜன், கே.சுப்பிரமணியம், சி.ஜனார்த்தனன், எஸ்.சி.செல்வராஜ், ஹரி, பிரகாஷ், வினோத், கே.ஏ.காட்டுத் துரை, கேபிள் ஐ.பஷீர், என்.வேலுமயில், மு.குஞ்சாலி, கரும்புக்கடை முஜி, தங்கம் ரகூப், கேபிள் சரவணன், சி.கே.விஸ்வநாதன், பத்மநாபன், டி.கே.கண்ணையன், சி.தர்மராஜ் மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பகுதி துணை செயலாளர் கவுதம் நன்றி கூறினார்.

    • ஊழியர்களின் சம்பளம் மற்றும் திருப்பதியின் வளர்ச்சிக்கு பாஜக எதிரானது அல்ல.
    • மக்கள் மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் வரி செலுத்தி வந்தனர். அந்தப் பணம் எங்கே போனது?

    திருப்பதி:

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது பட்ஜெட்டில் 1சதவீத நிதியை திருப்பதி மாநகர வளர்ச்சிக்காக செலவிட முடிவு செய்துள்ளது.

    இதற்கு பா. ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா கூறியதாவது:-

    கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கோவிலுக்கு நன்கொடையாக அளிக்கும் இந்துக்களின் உணர்வுகளை திருப்பதி தேவஸ்தானம் புண்படுத்துகிறது.

    திருப்பதி கோவிலின் புனிதத்தைப் பாதுகாத்து ஆன்மீக மையமாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, கோவிலை பணம் புரளும் பொருளாக மாற்ற கூடாது. பக்தர்கள் மற்றும் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் ஒரு நாளும் கழிவதில்லை.

    தேவஸ்தான விதிகளின்படி 1 சதவீதம் செலவழிக்க வாய்ப்பு இல்லை.

    இப்போது 1 சதவீதம் என்கிறார்கள், நாளை அது 10 அல்லது 50 சதவீதமாக அதிகரிக்கும். திருமலையில் தூப தீப நைவேத்யத்திற்கான செலவுகளைச் சமாளிக்க தேவஸ்தானகருவூலம் வறண்டுவிடும்.

    அதன் வசம் எந்த நிதியும் இருக்காது என்று பக்தர்கள் அஞ்சுகின்றனர். இதே போக்கு மற்ற கோவில்களிலும் தொடர்ந்தால், பக்தர்கள் கொடுக்கும் நன்கொடைக்கு யார் பொறுப்பு?

    ஊழியர்களின் சம்பளம் மற்றும் திருப்பதியின் வளர்ச்சிக்கு பாஜக எதிரானது அல்ல.

    ஆனால், கோவில் நிதியை ஏன் பயன்படுத்த வேண்டும்? மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் நிதியை விடுவித்து வருகிறது.

    மேலும், மக்கள் மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் வரி செலுத்தி வந்தனர். அந்தப் பணம் எங்கே போனது? பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு கோவில் நிதியை ஊழியர்களுக்காக பயன்படுத்தியதாக அரசு வாதிடுகிறது.

    உண்மையில், திருப்பதியில் ஆயிரக்கணக்கான கோடி வணிகம் மற்றும் அது வசூலிக்கும் வரிகளை கருத்தில் கொள்ள வேண்டு மானால், அரசாங்கம் தான் பணம் கோவிலுக்கு செலுத்த வேண்டும்.

    திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் அறக்கட்டளை வாரிய நியமனங்கள் அரசியல் மறுவாழ்வு மையங்களாக மாறிவிட்டன. மேலும் அவர்களின் முடிவுகள் ஏற்கத்தக்கதாக இல்லை.

    பா.ஜனதா இந்த முடிவுகளை எதிர்க்கும், அதற்கு எதிராக போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மயிலாப்பூர் நாகேஸ்வர பூங்கா அருகே உள்ள சமுதாய கூடத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 300 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    • புதுப்பேட்டை சமுதாய கூடத்திலும் தண்ணீர் வசதி இல்லை என ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சென்னை:

    கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சென்னையில் பல்வேறு சமுதாய கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

    மயிலாப்பூர் நாகேஸ்வர பூங்கா அருகே உள்ள சமுதாய கூடத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 300 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு கழிவறையில் தண்ணீர் வரவில்லை. குடிப்பதற்கு குடிநீர் இல்லை என ஆசிரியர்கள் மனம் குமுறினர்.

    இதுபற்றி மாநில துணை செயலாளர் வேல்முருகன் கூறியதாவது:-

    அதிகாலையில் கைது செய்து இங்கு அழைத்து வந்தனர். பெண்கள் கைக் குழந்தைகள் உள்ள நிலையில் அடிப்படை வசதிகள் கூட இங்கில்லை. கழிவறையில் தண்ணீர் இல்லை.

    பெண்கள் கழிவறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆசிரியர்களை தரம் தாழ்த்தி வழிநடத்துகின்றனர். நாங்கள் உணவு கேட்கவில்லை. 300 பேர் உள்ள இடத்தில் 30 பேருக்கு மட்டும் உணவு கொடுத்தால் எப்படி? அதனால் தான் நாங்கள் யாரும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறோம்.

    குழந்தைகளுக்கு மட்டும் பிஸ்கெட் வாங்கி கொடுத்தோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இந்த சமுதாய கூடத்திலும் 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல புதுப்பேட்டை சமுதாய கூடத்திலும் தண்ணீர் வசதி இல்லை என ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • அரசியல் செய்வதற்காக கர்நாடக பா.ஜ.க. காவிரி பிரச்சினையை தூண்டி விடுகிறது.
    • மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டினார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி யின் 155-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தெற்குத்தெரு பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கிறாரோ அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். காவிரி பிரச்சினைக்கு முதல் கார ணம் பா.ஜ.க. குழந் தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி வருகின்றனர். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முதல் 15 நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் கொடுத்து வந்தார். ஆனால் போராட்டத்தை தூண்டியது பா.ஜனதா தான்.

    கர்நாடக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் தருவது அம்மாநில மக்களி டையே பெரும் வரவேற்பினை பெற்று உள்ளது. இதை திசை திருப்புவதற்காக பா.ஜனதா அரசியல் செய்கிறது. இங்குள்ள பா.ஜனதா இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்?. தற்போது டெல்லி சென்றுள்ள பா.ஜனதா தலைவர் அண்ணாமலை காவிரி பிரச்சினையில் கர்நாடக முன்னாள் முத லமைச்சர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் தலை யிடக்கூடாது என்று கட்சி மேலிடத்தில் கூறுவாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மா பட்டி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம், நகர் காங்கிரஸ் தலைவர் கரிசல்பட்டி சவுந்தரபாண்டி, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜா தேசிங், நகர்மன்ற கவுன்சிலர் அமுதா சரவணன், பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பி னர்கள் உலகநாதன், ராஜ்குமார், பழனிக்குமார், வட்டார தலைவர்கள் முரு கேசன், தளபதி சேகர், கள்ளிக்குடி பாண்டியன், வீரபத்திரன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பணி செய்த போது ஒரு பணியாளர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
    • கூட்டத்தில் பல்வேறு அடிப்படை பணிகள் மேற்கொள்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகராட்சி விக்டோரியோ அரங்கில் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றி செல்வன், துணை கமிஷனர் செல்வ சுரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு வேலைகளையும் சரியாக செய்வதில்லை என குற்றச்சாட்டை எழுப்பினர்.

    வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பணி செய்த போது ஒரு பணியாளர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இதுவரை அவரை எந்த அதிகாரியும் சென்று பார்க்கவில்லை.

    குப்பை கிடங்கில் என்ன சம்பவங்கள் நடக்கிறது என்பது தெரியவில்லை என்ற குற்றச்சாட்டையும் கவுன்சிலர்கள் எழுப்பினர்.

    இதற்கு மேயர் பதிலளித்து பேசியதாவது:-

    வெள்ளலூர் குப்பை கிடங்கில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கே தெரியவில்லை.

    அது கோவை மாநகராட்சி குப்பை கிடங்கா அல்லது வேறு மாநகராட்சி குப்பை கிடங்கா. அதிகாரிகள் யாருமே சரியாக தகவல் தெரிவிப்பதில்லை.

    எனவே அந்த குப்பை கிடங்கு ஒப்பந்ததாரரை உடனடியாக மாற்ற வேண்டும். அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக தமிழகத்தில் உள்ள மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை அறிவித்து செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு அடிப்படை பணிகள் மேற்கொள்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகையை தி.மு.க. அரசு வழங்குகிறது.
    • வருகிற நாடாளு மன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு வழங்கி வெற்றிபெறசெய்ய வேண்டும்.

    மதுரை

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் அ.தி.மு.க. சார்பில் டி.எம்.கோர்ட் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    இந்த நாட்டின் பொதுக்களத்தில் நிற்கும் உரிமை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் அண்ணா, பெரியார். பெண்கள் பொது வாழ்க்கையில் வரவும் வித்திட்டவர்கள் இவர்கள்தான். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை உருவாக்கியவர் அண்ணா. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பெயர் பெற்றவர். தி.மு.க. அண்ணாவால் உருவாக்கப்பட்டது. ஐம்பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்டது தி.மு.க.

    அண்ணா இருக்கும் வரை கலைஞரை முன்னி லைப்படுத்தவில்லை. தாய் எப்படி அனைத்து பிள்ளை களையும் ஒரே மாதிரி வளர்ப்பாரோ அதுபோல் தான் அண்ணா அனை வரையும் ஒன்றாக நினைத்தார். பல தலைவர்களை உருவாக்கிய பெருமை அண்ணாவிற்கு உண்டு.

    தற்போது அரசியல் தலைவர்கள் நட்சத்திர விடுதிகளில் தங்கி பிரசாரம் செய்கிறார்கள், சுற்றுப் பயணம் செய்கிறார்கள். ஆனால் பட்டினி கிடந்து தொண்டர் வீட்டில் தங்கி கட்சியை வளர்த்தவர் அண்ணா. தி.மு.க.வை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்த பிறகு அ.தி.மு.க.வை உருவாக்கினார். இருப்பினும் அண்ணாவை நினைவு கூறும் வகையில் அ.தி.மு.க.வின் கொடியில் அண்ணா உருவ படத்தை பொறித்தார். இறந்தும் இறைவனாக எம்.ஜி.ஆர். இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

    அண்ணா, எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா யாரும் வாரிசு அரசியல் செய்யவில்லை. தன்னுடைய வாரிசுகளை கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் தற்போது தி.மு.க. ஆட்சியில் மூடு விழா கண்டுள்ளது.

    மதுரையில் 2 அமைச்சர்கள் இருக்கி றார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கலாம். 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்காகத்தான் கொடுக்கிறார்கள்.

    வாக்குறுதிகள் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பாராளுமன்ற தேர்தலுக்காகவே பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமையை தொகையை தி.மு.க. அரசு வழங்குகிறது. பொம்மை முதலமைச்சராகவே அவர் இருக்கிறார். பிறர் எழுதிக் கொடுப்பதை பேசுகிறார்.

    தி.முக. ஆட்சியை விரைவில் பொதுமக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வருகிற நாடாளு மன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை யான வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு வழங்கி வெற்றிபெறசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    • அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து மாநகராட்சியாக கடந்த 2021-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி மேயராக மகாலட்சுமி உள்ளார்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சி திட்டங்கள் முழுமை அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

    கலெக்டர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த பெருநகராட்சி என்ற பெயர் பலகைகள் கூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளன. மாநகராட்சி என்று பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் பூங்கா முழுவதும் புதர் மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. அங்குள்ள விளையாட்டு சாதனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு காட்சி அளிக்கின்றன. இதனால் இந்த பூங்காவுக்கு செல்வதையே பெரும்பாலானோர் தவிர்த்து வருகிறார்கள்.

    இந்த பூங்கா கடந்த 2017-ம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பூங்கா சரிவர சீரமைக்கப்படாமல் அலங்கோலமாக காட்சிஅளிப்பதால் இங்கு வரும் பொதுமக்கள் முகம்சுளித்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கூட்டத்திலும் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்த கூட்டத்திலும் இந்த பூங்காவை சீரமைக்க ரூ.2 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    ஆனாலும் இதுவரை பூங்காவை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காஞ்சிபுரம் பெருநகராட்சி என்ற பெயர் பலகையும் மாநகராட்சியாக தரம் உயராமல் அப்படியே காட்சி அளிப்பதால் இதனை பார்த்து செல்லும் மக்கள் பூங்காவில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆவது எப்போது? என்ற கேள்வியுடனே செல்கிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சிப்பணிகளில் மாறவில்லை. போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவை சீரமைக்க மாநகராட்சி கூட்டத்தின் போது அனுமதி அளிக்கப்பட்டாலும் இதுவரை பணிகள் நடைபெறவில்லை.இதற்காக காரணம் என்ன என்று தெரிவியவில்லை.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மண்டல குழு அலுவலகங்கள் புதிதாக புனரமைக்க வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது.
    • ஏராளமான விவசாயிகள் அவர்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டம் பொ ள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூர், பெரியநாய க்கன்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், ஆகிய பகுதிகளை சார்ந்து இருக்கும் நீர் நிலைகளான குளம், குட்டை, ஏரி, பள்ளம், ஆறு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கலந்து நீர் மாசடைந்து வருகிறது.

    ஆகையால் நீர்நிலை சார்ந்த தொழிற்சாலை கழிவுநீர்களும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற கழிவுநீர்களும் சில இடங்களில் கலந்து நீரின் தன்மை கெட்டு நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயமும் பொதுமக்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் கிராமப்புற சாலைகளில் வீட்டு கழிவுகளை கொட்டப்படுவதால் பொது சாலை விவசாயத்திற்கு இடையூறாக இருந்து வருவதாலும், சுற்றுச்சூழல் மாசுபட்டு மக்களுக்கு நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மேலும் இந்த கூட்ட த்தில் கலந்து கொண்ட ஏராளமான விவசாயிகள் அவர்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். 

    • கீழக்கரையில் வெறி நாய்கள் நடமாட்டத்தால் மாணவ-மாணவிகள் பீதியடைந்துள்ளனர்.
    • கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் வழக்கமாக பள்ளிக்கு நடந்து சென்று வந்தனர், தற்போது கீழக்கரையில் அனைத்து பகுதிகளிலும் வெறி நாய் வலம் வருவதால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பி விடுகின்றனர்.

    மக்களை அச்சுறுத்தும் வெறி நாய்களை அப்புறப்படுத்த கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், கீழக்கரை நகர் மக்களை நாய் கடி தொல்லையில் இருந்து பாதுகாக்க தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கீழக்கரை பொதுமக்கள்

    100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
    • காரைக்குடியில் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

    காரைக்குடி

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடத்தி வரும் ஊழல் எதிர்ப்பு பாதயாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று மாலை காரைக்குடி அருகே கோவிலூருக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    டி.டி.நகரில் திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழ் மொழியை, அதன் தொன்மையை, தமிழர்களின் பாரம்பரிய சிறப்புகளை உலகெங்கும் எடுத்துக்கூறி தமிழுக்கு பெருமை சேர்த்து வருபவர் பிரதமர் மோடி. காசியில் தமிழ் சங்கமம் நடத்தினார். செட்டிநாட்டு பகுதியி னருக்கு சொந்தமாக காசி யில் இருந்த இடத்தை அப்போைதய ஆளும் அரசு அபகரித்தது.

    அதனை தற்போதைய பா.ஜ.க. அரசு மீட்டுக்கொடுத்துள்ளது. தமிழக அரசு மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதாக கூறிவிட்டு விற்பனையை அதிகரிக்க பாக்கெட்டு களிலும் மது விற்க முடிவு செய்துள்ளனர்.

    தமிழக அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட ரூ.7 லட்சத்து 56 ஆயிரம் கோடி கடனை அடைக்க இனிமேல் கடனே வாங்காமல் இருப்ப தோடு வாங்கிய கடனை வட்டியும், அசலுமாகமாக செலுத்தவே 27 ஆண்டுகள் ஆகும். டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வரும் வருமானத்தை விட, இரு மடங்கு மதுபான தொழிற் சாலை களை நடத்தி வரும் தி.மு.க.வினரும், தரகர்களும் பெறுகின்றனர்.

    தேர்தல் நேரத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு அளித்த தேர்தல் வாக்குறுதி களை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் உறுப்பி னர் தேர்ந்தெடு க்கப்பட்டு இத்தொகுதியின் மேம்பாட்டுக்காக குரல் கொடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் தலைவர் சோழன் சித பழனிசாமி, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, மாநில விவசாயிகள் பிரிவு தலைவர் நாகராஜன், மாநில விவசாயிகள் பிரிவு துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாநில இளைஞரணி துணை செயலாளர் பாண்டித்துரை.

    மாவட்ட துணை தலைவர் நாராய ணன், மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், மாநில பொதுக்குழு குழு உறுப்பினர் காசிராஜா, இதர பிற்படுத்தப்பட்டோர் மாவட்ட பொதுச்செய லாளர் ராஜா சேதுபதி, மாநில செயற்குழு உறுப்பி னர் சிதம்பரம்.

    மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் துரை பாண்டியன், மாவட்ட தலைவர் பூப்பாண்டி, காரைக்குடி நகர வடக்கு தலைவர் பாண்டியன், தெற்கு தலைவர் மலைக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×