search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "swine flu"

    டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு 27 பேர் இறந்துள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. #HCMaduraiBench #Dengue #SwineFlu
    மதுரை:

    தமிழகத்தில் டெங்கு, பன்றிகாய்ச்சல் உள்ளிட்ட உயிரை பாதிக்கும் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருவதாகவும், இதில் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்துள்ளனர்.

    எனவே டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல்களை கட்டுபடுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

    அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைப்பதை உறுதிப்படுத்துவதோடு, சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலில் எத்தனை பேர் இறந்துள்ளனர்? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நவம்பர் 19-ந் தேதி வரை தமிழகத்தில் டெங்குவால் 13 பேரும், பன்றிக்காய்ச்சலால் 27 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் டெங்கு காய்ச்சலால் 3,440 பேரும், பன்றி காய்ச்சலால் 1,745 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்றும் தமிழக அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

    இதனையடுத்து அருகாமையில் உள்ள கோழிக்கோடு, காளகஸ்தி உள்ளிட்ட இடங்களில் டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த எது மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்து, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் மேற்கொள்ளலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    பின்னர் தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல்களை கட்டுப்படுத்த, தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #HCMaduraiBench #Dengue #SwineFlu
    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 14 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #SwineFlu
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

    பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறை அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுத்தனர். நோய் பாதித்த பகுதிகளில் தடுப்பு மாத்திரைகளும் வினியோகிக்கப்பட்டது.

    என்றாலும் நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை தெரசா மற்றும் கர்ப்பிணி பெண் என 6 பேர் பலியானார்கள். இது மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    பன்றி காய்ச்சல் நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. அங்கு நோய் அறிகுறி உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர் களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    தற்போது ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றி காய்ச்சல் வார்டில் 14 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 2 பேர் ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் சிகிச்சையில் உள்ளனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில், ராணித்தோட்டம், தடி டெப்போ பகுதியை சேர்ந்த மூதாட்டி கமலம் (வயது70) என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பன்றி காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி கமலம் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இவரையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து சுகாதாரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. மாவட்டத்தின் அனைத்து நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சுகாதார பணியாளர்கள் நோய் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நோய் அறிகுறி உள்ளவர் களை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறவும் அறிவுரை வழங்கி வருகிறார்கள். இது தவிர துப்புரவு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.  #SwineFlu



    திண்டுக்கல் அருகே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இளம்பெண் பரிதாபமாக பலியானார். #swineflu

    குள்ளனம்பட்டி:

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் பன்றிகாய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது.

    பழனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜான்சி என்பவர் பன்றிகாய்ச்சலால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அழகாபுரியை சேர்ந்த குமசேரன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் பொதுமக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் அருகே மருனூத்து ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சுல்தான்பேகம் (வயது27). காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ரத்த மாதிரி பரிசோதனையில் பன்றிகாய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சுல்தான் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார். #swineflu

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் சானார்பட்டியைச் சேர்ந்தவர் சேக்இப்ராகிம். இவரது மகள் சுல்தான் பேகம் (வயது28). சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். காய்ச்சல் குணமாகவில்லை.

    எனவே மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் சுல்தான்பேகம் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    எனவே அவரை தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சுல்தான்பேகம் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    பன்றிகாய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Swineflu
    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #SwineFlu
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டு 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த நோயை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நோய் பாதித்தவர்கள் கண்டிறியப்பட்டு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து காய்ச்சல், இருமல், வாந்தி இருந்தால் அவர்கள் டாக்டரை அணுகி சிகிச்சை பெறவும் அறிவுறுத்தி வருகின்றனர். டெங்கு கொசு புழு உற்பத்தி ஆவதை தடுக்க வீடுகளில் சென்று தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். டெங்கு கொசு புழு உற்பத்தி ஆவதை கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு நகராட்சி அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண்கள் 2 பேரும், பெண்கள் 9 பேரும், சிறுவர்கள் 6 பேர் உள்பட 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தனியார் ஆஸ்பத்திரியில் பெரியவர்கள், சிறியவர்கள் என 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டாக்டர்கள் பன்றி காய்ச்சல் பாதித்தவர்களை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #SwineFlu

    மன்னார்குடி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு குழந்தை பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #swineflu

    மன்னார்குடி:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு- பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழப்பு எண்ணிக் கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி. இவர்களது மகள் நித்தியஸ்ரீ (வயது 3).

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மயிலாடு துறையில் உள்ள சுகந்தி தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு நித்தியஸ்ரீக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

    உடனே அவர்கள் மயிலாடு துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று காட்டினர். அங்கு நித்தியஸ்ரீயை பரிசோதித்த டாக்டர் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே மேல் சிகிச்சை தேவைப்படும் என்று தெரிவித்தனர்.

    அதன் பின்னர் ஜெகநாதன் , மகள் நித்திய ஸ்ரீயை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த போது பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தனி சிறப்பு வார்டில் சிறுமிக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிறுமி நித்தியஸ்ரீ சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    பன்றிக்காய்ச்சலுக்கு குழந்தை பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் தற்போது ஜெகநாதனுக்கும், அவரது மனைவி சுகந்திக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பன்றி காய்ச்சலுக்கு மகளை பறிகொடுத்த பெற்றோர்களும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதால் நீடாமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #swineflu

    நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல், மர்ம காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொசு ஒழிப்பு, சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஏற்கனவே டெங்கு , பன்றி காய்ச்சல் காரணமாக இதுவரை 16 பேர் பலியானார்கள். இந்த நிலையில் பாளை சாந்திநகரை சேர்ந்த ஜான்வரதன்(48) என்பவர் மர்ம காய்ச்சலுக்கு பலியானார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிகாய்ச்சல் அறிகுறியுடன் 22 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் நெல்லையில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியானார். பாளை ரெயில்வே காலனியை சேர்ந்தவர் ஆறுமுகநயி னார்(வயது45). ரெயில்வே ஊழியர். கடந்த சில நாட்களாக இவருக்கு காய்ச்சல் இருந்தது. அவர் நெல்லையில் ஒரு தானியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

    இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும், சுகாதாரதுறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில்வே காலனி பகுதியில் சுகாதார துறை அதிகாரிகள் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் தூத்துக்குடியில் பள்ளி மாணவன் பன்றி காய்ச்சலுக்கு பலியானான். தூத்துக்குடி குறிஞ்சிநகரை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி. இவரது மகன் சக்தி கபிலன்(13), இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி சக்தி கபிலனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

    அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தான். ரத்த பரிசோதனையில் அவனுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் இன்று சக்தி கபிலன் சிகிச்சை பலனின்றி இறந்தான். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 82 பேர் இதுவரை டெங்கு-பன்றி காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். #DenguFever #Swinflu
    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை பகுதி மட்டும் இல்லாமல் சுற்று வட்டார பகுதி மக்களும் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த நிலையில் லேசான காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மேற்கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 82 பேர் இதுவரை காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் 4 பெண்கள் உள்பட 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிபடுத்தப்பட்டதால் அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் குழு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

    அது போன்று 3 பெண்கள் உள்பட 6 பேர் பன்றிக்காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை சிறப்பு டாக்டர்கள் குழு தினமும் கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையை அளித்து வருகின்றனர். #DenguFever #Swinflu
    தண்டராம்பட்டு அருகே பன்றி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். குடியாத்தத்தில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் இறந்துள்ளார். #swineflu

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள காம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கந்தன். இவரது மகள் சவுமியா (வயது 4). அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

    சிறுமி சவுமியா கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து திருவண்ணா மலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிறுமிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிறுமி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாணபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் முக்குன்றம் காலனியை சேர்ந்த ராஜாமணி மகன் தர்மராஜ் (வயது 25) கூலி தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

    தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தர்மராஜ் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது.

    இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் தர்மராஜ் இறந்து விட்டார்.

    மர்மகாய்ச்சலுக்கு தர்மராஜ் இறந்ததையடுத்து சுகாதார குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். #swineflu

    உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் இன்றைக்கு டெங்கு போன்று காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவுவதாக ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். #DengueFever
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கொ.ம.தே.க. ஆலோசனை கூட்டம் அந்தியூரில் நடந்தது.

    இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தகுந்த நேரத்தில் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குவதுதான் பொது மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதாகும். தமிழகத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் அது சுயநலத்தோடு தள்ளிப்போடப்படுகிறது என்ற ஐயம் இன்றைக்கு மக்களிடையே இருக்கிறது.

    ஆண்டுக்கணக்கில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் மழையை காரணம் காட்டி ஒத்தி வைத்திருப்பது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளில் ஓராண்டு ஆகப்போகிறது ஆனால் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே அந்த தொகுதி மக்கள் அரசால் ஏமாற்றப்படுகிறார்கள் .

    உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் இன்றைக்கு டெங்கு போன்று காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் இடமில்லாத அளவுக்கு இன்றைக்கு நோயாளிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

    உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் இது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். அந்த வகையிலே நாம் ஏமாற்றப்படுகிறோம்.

    உள்ளாட்சி தேர்தலை எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக தமிழக அரசு நடத்த வேண்டும், 20 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தலை தாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

    சிவகாசியில் அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கிறது. தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும் ஒரு நிரந்தரமான தீர்வு கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. அடுத்த வருடம் என்ன நடக்கும், சிவகாசி தொழிற்சாலைகள் பட்டாசுகளை உற்பத்தி செய்வதா? வேண்டாமா? என்று எந்தவிதமான தெளிவும் இல்லாமல் இன்றைக்கு தொழிற்சாலையை மூடுகின்ற நிலைக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.

    தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் போடப்பட்ட வழக்குகள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்தியா முழுவதும் இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வழக்கு போடப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் பட்டாசு வெடித்ததற்காக 2,400 பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது

    பவானி ஆற்றில் கலக்கின்றன சாயக்கழிவு தொடர்ந்து கலந்து கொண்டே இருக்கிறது.

    இவ்வாறு ஈஸ்வரன் கூறினார். #DengueFever
    ஆண்டிப்பட்டி அருகே பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி ஜீவராணி (வயது 34). இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதனையடுத்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு காய்ச்சல் குணமாகாததால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜீவராணிக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஜீவராணி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஜீவராணிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆண்டிப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகா தேவி என்ற பெண் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தார். தற்போது மீண்டும் ஒரு பெண் பலியாகி இருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு நேற்று 2 பேர் பலியாகி உள்ள நிலையில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளதாகவும் 22 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். #swineflu
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பன்றி காய்ச்சலுக்கு 4 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் திங்கள் சந்தை கண்டன்விளையைச் சேர்ந்த எஸ்தர் கிங் (வயது 46), அஞ்சுகிராமம் சுப்பிரமணிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சண்முகவேல் (68) ஆகிய இருவரும் பலியானார்கள். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் வார்டில் நேற்று 12 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து பன்றி காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு மேலும் 4 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 10 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரி களில் 12 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சையில் உள்ளனர்.

    இது குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 22 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #swineflu
    ×