search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஸ்வரன்"

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது
    • திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.

    அதன்படி திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி (51) அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

    10 ஆண்டுகள் கொமதேக தலைமை நிலைய செயலாளராகவும், 7 ஆண்டுகள் மாநில இளைஞரணி செயலாளராகவும் இருந்தவர் சூரியமூர்த்தி. அவர் 2001 மற்றும் 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியிலும், 2006-ல் வெள்ளக்கோவில் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாமக்கல் தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தான் திமுக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

    • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • ஈஸ்வரன் "40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும்" என தெரிவித்தார்

    சென்னை:

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு முடிவானது

    கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் நாமக்கல் தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தான் திமுக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. 

    • 50 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த அரசு சார்பில் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டு செயல்படுகிறது.
    • பல்வேறு மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்திலே பேசி அவற்றை நிறைவேற்றுகின்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன்.

    திருச்செங்கோடு:

    தமிழகம் முழுவதும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின்போது பொதுமக்களை சந்தித்து பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுகிறார். குறிப்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் மாலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சட்டமன்ற உரைகளை பற்றியும், தொகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் விமர்சித்து இருந்தார்.

    இதற்கு பதிலளித்து ஈஸ்வரன் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 30 மாதங்களில் பலமுறை நான் சட்டமன்றத்திலே பேசியிருக்கிறேன். திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைப்பதை பற்றி சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். ரோப் கார் என்பது சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டு திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைக்க முடியுமா என்பதை ஒரு குழு ஆய்வு செய்து சாத்தியக்கூறு இல்லை என்பதை அறிவித்த பின் இந்து சமய அறநிலையத்துறை மாற்று சாலையை அமைப்பதற்கு நெடுஞ்சாலை துறையிடம் கருத்துரு அனுப்பி இருக்கிறது. இது நெடுஞ்சாலைத்துறை ஆய்வில் தற்போது இருக்கிறது.

    50 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த அரசு சார்பில் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டு செயல்படுகிறது. திருச்செங்கோடு புறவழிச்சாலை 50 சதவீதம் முடிக்கப்பட்டு மீதி பகுதிகளுக்கு ஒப்பந்ததாரர் பணிகளை தொடங்க இருக்கிறார். 9 கோடி ரூபாய் செலவில் வாரச்சந்தை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 5 கோடி ரூபாய் செலவில் தினசரி சந்தை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 17 வழித்தடங்களில் புதிதாக பஸ்கள் விடப்பட்டு இருக்கின்றன.

    இன்னும் பல்வேறு பணிகள் தொகுதி முழுவதும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இன்னும் பல்வேறு மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்திலே பேசி அவற்றை நிறைவேற்றுகின்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன்.

    எதுவுமே தெரியாமல் திருச்செங்கோட்டிலே வந்து பொய்யான கருத்துக்களை பேசி இருப்பது நியாயமா? என்னுடைய செயல்பாடுகளை கேள்வி கேட்க ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை இருக்கிறது. அதே சமயம் பதில் சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது.

    என்னுடைய சட்டமன்ற உரைகளைப் பற்றியும் சட்டமன்ற உறுப்பினராக என் செயல்பாடுகள் பற்றியும் அண்ணாமலை என்னோடு விவாதிக்க தயாரா? தேதியையும், நேரமும், இடமும் குறிப்பிடுங்கள் விவாதத்திற்கு நான் தயார்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்.
    • நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம்.

    நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம்.

    உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்.

    தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே,

    அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது.

    நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி

    சிவசக்தியாக ஐக்கிய ரூபிணியாக அர்த்த நாரீசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.

    இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும்.

    முதல் மூன்று நாட்கள் மகேஸ்வரி கவுமாரி, வராஹி என துர்காதேவியாகவும், அடுத்த மூன்று நாட்களில் மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும்,

    நிறைவுறும் மூன்று தினங்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குவது நல்லது.

    இந்த நாட்களில் நைவேத்யங்களைப் படைத்து கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை

    பாடி, ஆடி பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்ட வரத்தை சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.


    • அங்கு சென்று சரஸ்வதி தேவியை வழிபட்டு சிறந்த கல்வியையும் ஞானத்தையும் பெறலாம்.
    • பனையம்பள்ளியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாராயிபாளையத்தில் உள்ளது.

    நாகூர்

    நாகப்பட்டினத்திற்கருகில் உள்ள நாகூர் என்னும் ஊரில் நாகராசா கோவிலில் சரஸ்வதியின் செப்புத் திருமேனி உள்ளது.

    அங்கும் சென்று சரஸ்வதி தேவியை வழிபட்டு சிறந்த கல்வியையும் ஞானத்தையும் பெறலாம்.

    மு.ஈ.ச. மலை

    பவானிசாகர் அருகில் மாதம்பாளையம் ஊராட்சியில் மாராயிபாளையம் என்னும் கிராமத்தில் ஒரு சிறு மலையில்

    முருகன், ஈஸ்வரன், சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் தனித் தனி மூலஸ்தான கோவில்கள் உள்ளது.

    புதியதாக கட்டப்பட்ட இக்கோவில் மலை புஞ்சை புளியம்பட்டியிலிருந்து பவானிசாகர் செல்லும் வழியில்

    பனையம்பள்ளியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாராயிபாளையத்தில் உள்ளது.

    இக்கோவிலுக்குச் செல்ல 800 படிகள் கொண்ட பாதையும், கனரக வாகனங்கள் செல்ல தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

    வடநாட்டில் புஷ்கரத்திற்கு அடுத்து தமிழ்நாட்டில் மலைமீது சரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பட்ட கோவில் இது ஒன்றே.

    • தமிழகம்-சிங்கப்பூர் இடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை.
    • ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தியதாக முதலமைச்சர் தகவல்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அவரது முகாம் இல்லத்தில்,  சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்புத்துறை மந்திரி ஈஸ்வரன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சிங்கப்பூர் நாட்டு துணை தூதர் எட்கர் பாங்க் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 


    பின்னர் இந்த சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு அமைச்சர் ஈஸ்வரன் அவர்களை சந்தித்தது ஒரு அற்புதமான தருணம். தமிழ்நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பண்பாடு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திறம்பட செயல்பட வேண்டுமானால் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பது நல்ல தீர்வாக இருக்கும்.
    • தற்போது உள்ள இரட்டை தலைமை அந்தக்கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கான தலைமையாக இருக்கலாம்.

    அனுப்பர்பாளையம்:

    1970-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர் பெருமாநல்லூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களது நினைவிடம் பெருமாநல்லூர் ஈரோடு சாலையில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய அமைப்பினர் மற்றும் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, இந்து மக்கள் கட்சியினர் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினர்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க.) சார்பில் அதன் நிறுவனர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் மலர்வளையம் வைத்து ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளும் இந்த நினைவு ஸ்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியின்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திறம்பட செயல்பட வேண்டுமானால் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பது நல்ல தீர்வாக இருக்கும். தற்போது உள்ள இரட்டை தலைமை அந்தக்கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கான தலைமையாக இருக்கலாம். ஆனால் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே திறமையாக செயல்பட முடியும். எனவே அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பதே நிரந்தர தீர்வாக அமையும்.

    தற்போது மத்திய அரசின் திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ள சூழ்நிலையில் அந்த திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கான திட்டத்தை நிறைவேற்றும் போது அதில் உள்ள குறைபாடுகளை எதிர்த்து போராடிய விவசாயிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அதன்பிறகு அந்த சட்டத்தை திரும்பப் பெற்று இருக்கக்கூடிய மத்திய அரசு தற்போது அக்னிபாத் திட்டத்திற்கு நிலவிவரும் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு உயிர் சேதம் ஏற்படும் முன் அந்த திட்டத்திற்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×