search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPL 2024"

    • திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • அஸ்வின் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதிலில் களமிறங்கிய கோவை அணி பேட்டர்கள் துவக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது.

    கோவை அணி சார்பில் ராம் அரவிந்த் 27, அத்தீக் உர் ரஹ்மான் 25 மற்றும் சுஜய் 22 ரன்களை எடுத்தனர். திண்டுக்கல் அணி சார்பில் விக்னேஷ் புத்துர், சந்தீப் வாரியர் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு வழக்கம்போல ரவிசந்திரன் அஸ்வின் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய மற்ற வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    திண்டுக்கல் அணி சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 52, பாபா இந்திரஜித் 32 மற்றும் சரத் குமார் 27 ரன்களை எடுத்தனர். கோவை அணி சார்பில் சித்தார்த், வல்லியப்பன் யுதீஸ்வரன் மற்றும் கௌதம் தாமரை கண்ணன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டிஎன்பிஎல் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 

    • டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய கோவை அணி 129 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை:

    டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன.

    மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுஜய் அதிரடியாக ஆடி 12 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ராம் அர்விந்த் 27 ரன்னும், அதிக் உர் ரகுமான் 25 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    திண்டுக்கல் சார்பில் சந்தீப் வாரியர், விக்னேஷ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.

    • டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
    • டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    சென்னை:

    டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன.

    மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி கோவை அணி முதலில் களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய திருப்பூர் 108 ரன்னில் சுருண்டது.

    சென்னை:

    டிஎன்பிஎல் தொடரின் குவலிபையர் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே திண்டுக்கல் அணி வீரர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 19.4 ஓவரில் 108 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மான் பாப்னா அதிகமாக 26 ரன்கள் எடுத்தார்.

    திண்டுக்கல் அணி சார்பில் விக்னேஷ் 3 விக்கெட்டும், சுபோத் பாதி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.

    • இறுதியில் அபராஜித் - அபிஷேக் தன்வார் சிறப்பாக ஆடினர்.
    • ரவிசந்திரன் அஸ்வின் 35 பந்துகளில் 57 ரன்களை விளாசினர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    சேப்பாக் அணிக்கு துவக்க வீரர்களான சந்தோஷ் குமார், ஜெகதீசன் ஜோடி களமிறங்கியது. சந்தோஷ் 1 ரன்னில் அவுட் ஆக ஜெகதீசன் மற்றும் அபராஜித் நிதானமாக ஆடினர். ஜெகதீசன் 25 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்த வந்த பிரதோஷ் (19), டேரில் ஃபெராரியோ (4), சித்தார்த் (7) என சேப்பாக் அணி அடுத்தத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது.

    இறுதியில் அபராஜித் - அபிஷேக் தன்வார் சிறப்பாக ஆடினர். இருவரும் முறையே 72 மற்றும் 22 ரன்களை விளாசினர். இதனால் சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்களை சேர்த்தது.

    எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு துவக்க வீரரான விமல் குமார் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சிவம் சிங் 49 பந்துகளில் 64 ரன்களையும், ரவிசந்திரன் அஸ்வின் 35 பந்துகளில் 57 ரன்களையும் விளாசினர். அடுத்து வந்தவர்களில் சரத்குமார் மற்றும் சுபோத் பாட்டி முறையே 12 மற்றும் 14 ரன்களை எடுத்தனர்.

    இதனால் திண்டுக்கல் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் திண்டுக்கல் அணி குவாலிபயர் சுற்றின் 2 ஆவது போட்டிக்கு முன்னேறி உள்ளது. எலிமினேட்டர் சுற்று போட்டியில் தோல்வியை தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    டிஎன்பிஎல் குவாலிபயர் 2 சுற்றில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற 4 ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் கோவை லைகா கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும். 

    • சேப்பாக் அணி தரப்பில் அபராஜித் அரை சதம் விளாசினார்.
    • திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக சந்தோஷ் குமார் - ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். இதில் சந்தோஷ் 1 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஜெகதீசன் - அபராஜித் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். அதிரடியாக விளையாடிய ஜெகதீசன் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த பிரதோஷ் 19, டேரில் ஃபெராரியோ 4, சித்தார்த் 7 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபராஜித் அரை சதம் கடந்தார்.

    இறுதியில் அபராஜித் - அபிஷேக் தன்வர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.

    திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, விக்னேஷ், சுபோத் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இதில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திருப்பூர் அணியுடன் மோதும்.
    • 2-வது தகுதி சுற்று ஆட்டம் வருகிற 2-ந் தேதி சென்னையில் நடக்கிறது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    லீக் சுற்று முடிவில் 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஏற்கனவே திண்டுக்கல் டிராகன்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

    இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இதில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திருப்பூர் தமிழன்சுடன் வருகிற 2-ம் தேதி சென்னையில் மோதும். தோற்கும் அணி வெளியேறும். 

    • அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது.
    • கோவை அணிக்கு சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 ரன்களை விளாசினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபையர் போட்டி திண்டுக்கல்லில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலத் இரண்டு இடங்களை பிடித்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    திருப்பூர் அணிக்கு துவக்க வீரர்களான அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி அபாரமாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது. இதில் அமித் (67), துஷார் (55) ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆகினர். அசுத்து வந்த பாலசந்தர் அனிருத் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்களை குவித்தது. முகமது அலி 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கோவை சார்பில் ஷாருக் கான் மற்றும் ஜதாவத் சுப்ரமணியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    201 எனும் கடின இலக்கை துரத்திய கோவை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஜிவி விக்னேஷ் ரன் ஏதும் எடுக்காமலும், சுஜய் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாய் சுதர்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரை தொடர்ந்து வந்த சுரேஷ் குமார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    பிறகு சாய் சுதர்சன் மற்றும் முகிலேஷ் ஜோடி இணைந்து திருப்பூர் அணியின் பந்துவீச்சை பதம் பார்க்க ஆரம்பித்தது. சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 ரன்களை விளாச, முகிலேஷ் 31 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். இதனால் கோவை அணி 185 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கோவை லைகா கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

    • டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 1 போட்டி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
    • டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 1 போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அமித் சாத்விக், துஷார் ரஹேஜா இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் துஷார் ரஹேஜா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அமித் சாத்விக் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். பாலச்சந்தர் அனிருத் 21 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களைக் குவித்துள்ளது. முகமது அலி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்குகிறது.

    • திண்டுக்கல் அணிக்கு எதிராக நெல்லை அணி வெற்றி பெற்றது.
    • நெல்லை வீரர் மோகன் அஸ்வினை மன்கட் எச்சரிக்கை கொடுத்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    டிஎன்பிஎல் தொடரின் நேற்று நடந்த ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 19.4 ஓவரில் 136 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைதொடர்ந்து விளையாடிய நெல்லை அணி 17.5 ஓவரில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    முன்னதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் செய்த போது 15-வது ஓவரை நெல்லை வீரர் மோகன் பிரசாத் வீசினார். அப்போது ஸ்டிரைக்கில் சிவம் சிங்கும் எதிர் முனையில் அந்த அணியின் கேப்டன் அஸ்வினும் இருந்தனர்.

    மோகன் முதல் பந்தை வீச வந்த போது அஸ்வினை மன்கட் முறையில் அவுட் செய்ய முயற்சித்தார். பிறகு நடுவரிடம் எச்சரிக்கை கொடுத்தார். அவர் மன்கட் அவுட் செய்ய முயன்ற போது ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தினர்.

    அஸ்வின் பலரை மன்கட் முறையில் அவுட் செய்துள்ளார். அவரையே நெல்லை வீரர் மோகம் மன்கட் முறையில் அவுட் செய்ய முயன்றது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சோனு யாதவ் 3.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • நெல்லை சார்பில் அருண் கார்த்திக் 45 ரன்களை விளாசினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் கடைசி கட்ட போட்டிகள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய திண்டுக்கல் அணி 19.4 ஓவர்களில் 136 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. திண்டுக்கல் அணிக்கு சிவம் சிங் 59 பந்துகளில் 70 ரன்களையும், அஸ்வின் 13 பந்துகளில் 15 ரன்களையும் சரத் குமார் 8 பந்துகளில் 9 ரன்களையும் எடுத்தனர்.

    நெல்லை சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோனு யாதவ் 3.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹரிஷ் மற்றும் சிலம்பரசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய நெல்லை அணி 17.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. நெல்லை சார்பில் அருண் கார்த்திக் 45 ரன்கள், அஜிதேஷ் 43 ரன்கள் மற்றும் என்எஸ் ஹரிஷ் 22 ரன்களை விளாசினர்.

    திண்டுக்கல் சார்பில் வருண் சக்கரவர்த்தி, ரவிசந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், திரன் 1 விக்கெட் வீழ்த்தினர். 

    • திருப்பூர் தமிழன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது.
    • அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் கடைசி கட்ட போட்டிகள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது. திருப்பூர் சார்பில் மான் பாப்னா 50 ரன்களை எடுத்தார். 170 ரன்களை துரத்திய திருச்சி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது.

    அந்த அணியின் வசீம் அகமது, ராஜ்குமார் முறையே 10 மற்றும் 8 ரன் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த ஷியாம் சுந்தர் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் திருச்சி அணி 16.5 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதன் மூலம் திருப்பூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருப்பூர் சார்பில் நடராஜன் மற்றும் அஜித் ராம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூம் திருப்பூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

    ×