search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPL 2024"

    • டி. நடராஜனை 11.25 லட்சம் ரூபாய்க்கு திருப்பூர் தமிழன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
    • ஆர். சஞ்சய் யாதவை 22 லட்சம் ரூப்ய் கொடுத்து திருச்சி அணி எடுத்துள்ளது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபிஷேக் தன்வரை 12.2 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. ஏற்கனவே அணியில் விளையாடிய ஜி. பெரியசாமியை 8.8 லட்சம் ரூபாய் கொடுத்து மீண்டும் அணியில் இணைத்துள்ளது.

    மேலும், ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்:-

    1. ஆர். விவேக் (ரூ. 11 லட்சம்)- சேலம் ஸ்பார்டன்ஸ்

    2. எஸ். ஹரிஷ் குமார் (ரூ. 15.4 லட்சம்)- சேலம் ஸ்பார்டன்ஸ்

    3. ஆர். சஞ்சய் யாதவ் (ரூ. 22 லட்சம்)- திருச்சி கிராண்ட் சோலாஸ்

    4. டி. நடராஜன் (ரூ.11.25 லட்சம்)- திருப்பூர் தமிழன்ஸ்

    5. சந்தீப் வாரியார் (ரூ. 10.5 லட்சம்)- திண்டுக்கல் டிராகன்ஸ்

    6. சாய் கிஷோர் (ரூ. 22 லட்சம்)- திருப்பூர் தமிழன்ஸ்

    • டி.என்.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்துள்ளது.
    • நடப்பு சாம்பியனான கோவை கிங்ஸ் அதிகபட்சமாக 17 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் 'லீக்' என்று அழைக்கப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இதுவரை 7 சீசன்கள் முடிந்து விட்டது. இந்த ஆண்டு நடைபெறும் டி.என்.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடக்கிறது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள், டி.என்.பி.எல். போட்டியில் விளையாட தகுதி பெற்றவர்கள் ஏலத்துக்கான இணையதளத்தில் பதிவு செய்து இருந்தனர். ஏலப்பட்டியலில் 690 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 62 வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    டி.என்.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணிகளும் தக்க வைத்துக் கொண்ட வீரர்களையும், விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரத்தையும் ஏற்கனவே அறிவித்து விட்டன. 8 அணிகளும் மொத்தம் 98 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

    டி.என்.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்துள்ளது. பி.அபராஜித், என்.ஜெகதீசன், அருணாச் சலம், அய்யப்பன், ஜிதேந்தர் குமார், லோகேஷ் ராஜ், மதன்குமார், பிரதோஷ் ரஞ்சன் பவுல், ரஹீல்ஷா, சிபி, சிலம்பரசன் ஆகி யோரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்காக ரூ.28.70 லட்சம் செலவழித்து உள்ளது. 8 வீரர்களை விடுவித்துள்ளது.

    நடப்பு சாம்பியனான கோவை கிங்ஸ் அதிகபட்சமாக 17 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு அணியும் 20 வீரர்களை தேர்வு செய்யலாம். இதற்காக ரூ.70 லட்சம் செலவழிக்கலாம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கைவசம் ரூ.41.30 லட்சம் இருக்கிறது. அந்த அணி ஏலத்தில் 9 வீரர்களை தேர்வு செய்யலாம்.

    சேலம் அணியில் தான் அதிகபட்சமாக 11 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். அந்த அணியின் கைவசம் தான் அதிகபட்சமாக ரூ.46.70 லட்சம் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக திருப்பூர் அணியிடம் ரூ.45.90 லட்சம் உள்ளது. அந்த அணி 10 வீரர்களை தேர்வு செய்யலாம்.

    ×