search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summon"

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் 10-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #MinisterVijayabaskar
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதுவரையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பணியாளர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது.

    விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராக வேண்டும் என ஏற்கனவே ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

    சசிகலா தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜா செந்தூர் பாண்டி ஆணையத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். குட்கா வழக்கில் ஆஜராக வேண்டியிருப்பதால் 7, 8-ந் தேதிகளில் ஆஜராக வேண்டும் என்பதை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அதன் அடிப்படையில் விசாரணையின் தேதியினை தள்ளி வைத்து சம்மன் அனுப்பியது. அமைச்சர் விஜயபாஸ்கர் 10-ந்தேதி காலை 9.30 மணிக்கும், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை 11-ந் தேதி ஆஜராக வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #MinisterVijayabaskar


    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் 20-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. #ArumugasamyCommission #OPS
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    இதில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள், டிரைவர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.



    அதை ஏற்று டிசம்பர் 20-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

    இதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், அமைப்பு செயலாளருமான சி.பொன்னையன் ஆகியோர் 18-ந்தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. #ArumugasamyCommission #OPS

    நிலமுறைகேட்டில் சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை 2-வது முறையாக சம்மன் அனுப்பியது. #RobertVadra
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு தொடர்புள்ள நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் 2015-ம் ஆண்டு முறைகேடாக நிலம் வாங்கியது. இதுதொடர்பாக ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். 374.44 ஹெக்டேர் நிலம் தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தையும் அரசு ரத்து செய்தது.

    பின்னர் அமலாக்கத்துறை இந்த நில முறைகேட்டில் பெரிய அளவில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்தது. வதேராவுக்கு தொடர்புள்ள மகேஷ் நாகர் போன்ற சிலரது இடங்களில் சோதனை நடத்தியது. கடந்த வருடம் நாகரின் நெருங்கிய கூட்டாளி அசோக்குமார், ஜெய்பிரகாஷ் பாகார்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரிகள் உள்பட சிலரது ரூ.1.18 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத்துறை இந்த வழக்கில் இணைத்தது. அமலாக்கத்துறை இந்த வழக்கில் வதேரா பெயரை சேர்க்கவில்லை. அரசு அதிகாரிகள் மற்றும் சில நில மோசடிதாரர்கள் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.

    நவம்பர் மாத தொடக்கத்தில் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை முதல்முறையாக சம்மன் அனுப்பியது. அதில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி கூறப்பட்டு இருந்தது. ஆனால் ராபர்ட் வதேரா ஆஜராகவில்லை.



    எனவே நேற்று மீண்டும் அமலாக்கத்துறை ராபர்ட் வதேராவுக்கு 2-வது முறையாக சம்மன் அனுப்பியது. அதில், சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் உங்களிடம் வாக்குமூலம் வாங்க வேண்டும். அதற்காக அடுத்த வாரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா கூறும்போது, “பா.ஜனதா அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றை அழுக்கு தந்திர துறைகளாக பயன்படுத்தி வருகிறது. பா.ஜனதா 5 வருடங்களாக இதுபோன்ற பொய்யான, போலியான தகவல்களை விசாரணை அலுவலகங்களை பயன்படுத்தி வெளியிட்டு வருகிறது. தேர்தலுக்காக இப்போது மக்களை திசைதிருப்ப நினைக்கிறது. இதில் பா.ஜனதா வெற்றி பெற முடியாது” என்றார். #RobertVadra
    சர்வதேச எல்லையில் இந்திய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் தனது கண்டனத்தை பதிவு செய்தது. #Pakistan #Summon #India
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு இந்திய வீரர்களும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் அங்கு இந்திய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தானின் பிம்பர் பகுதியை சேர்ந்த முனாசா பிபி (வயது 22) என்ற இளம்பெண் உயிரிழந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

    இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதர் ஜே.பி.சிங்குக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல், அவரிடம் நேரிலும் கண்டனத்தை பதிவு செய்தார்.

    பாகிஸ்தான் எல்லையில் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் இந்திய வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும், இது சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானது எனவும் பைசல் கூறினார். இந்தியாவின் அத்துமீறிய தாக்குதல்கள் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும் அவர் தெரிவித்தார். #Pakistan #Summon #India 
    ரெயில்வே ஓட்டல் ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பி உள்ளது. #LaluPrasadYadav #IRCTCcase
    டெல்லி:

    பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ராஞ்சி மற்றும் பூரி நகரில் உள்ள ரெயில்வேக்கு சொந்தமான 2 ஓட்டல்களின் நிர்வாகத்தையும் விஜய் கோச்சார், வினய் கோச்சார் குழுமத்துக்கு சொந்தமான சுஜாதா ஓட்டல் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தற்கு கைமாறாக பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பினாமி நிறுவனத்துக்கு 3 ஏக்கர் வீட்டுமனை லஞ்சமாக பெறப்பட்டதாக புகார் எழுந்தது.

    இந்த விவகாரம் முடிந்த பின்னர் வேறொருவருக்கு சொந்தமாக இருந்த அந்த பினாமி நிறுவனம் லாலுவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் பெயரில் மாற்றப்பட்டது. 2010 முதல் 2014-ம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த பரிமாற்றங்கள் முடிவடைதற்குள் ரெயில்வே மந்திரி பதவியை லாலு ராஜினாமா செய்தார்.



    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ராப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

    ஏற்கனவே கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #LaluPrasadYadav #IRCTCcase
    நெல்லை பழவூர் நாறும்பூநாதர் கோவில் சிலை கடத்தப்பட்ட வழக்கில் ஆஜராக மாதாவரம் இன்ஸ்பென்க்டர் ஜீவானந்தம், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி காசிப், சஸ்பெண்ட் ஆன டி.எஸ்.பி காதர் பாட்ஷா 19-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #IdolSmuggling #IGPonmanikavel
    சென்னை:

    நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த சிலைகளின் மதிப்பு ரூ.30 கோடியாகும்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை வழக்கு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளில் ஆடல் நடராஜன், சிவகாமி அம்மாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திரதேவர், வெயில் காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் என 9 சிலைகள் மீட்கப்பட்டன.

    மற்ற சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டதாக தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சிலர் தப்ப விடப்பட்டு இருப்பதாகவும், வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் வழக்கில் சேர்க்கப்படாமல் இருப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மனு செய்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட்டு மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிட்டது.

    அதோடு இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். அவர் விசாரணையை தொடங்கியதும் 13 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் பழவூர் கோவிலுக்கு வந்து பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சாமி சிலைகளை போட்டோ எடுத்தது தெரிய வந்தது. அவர் அவ்வாறு போட்டோ எடுத்து சென்றபிறகுதான் 13 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பதை பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்தார்.

    மேலும் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் சென்னை, டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிறகு மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளன என்பதும் தெரிய வந்தது. அதோடு 4 சிலைகளில் இருந்த தங்கத்தை பிரித்தெடுக்க அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் அமிலம் ஊற்றி அழித்து விட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து மேலும் 8 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே சுபாஷ்கபூர் போலீசாரிடம் சிக்கினார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வல்லப்பிரகாஷ், ஆதித்திய பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேர் ஏற்கனவே ஜெயிலில் உள்ளனர்.

    சிலை கடத்தலில் தொடர்புடைய மேலும் 6 பேர் வெளிநாடுகளில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்கிடையே பழவூர் சாமி சிலைகள் கடத்தப்பட்டது பற்றி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களை சம்மன் அனுப்பி வரவழைத்து அவர் விசாரித்து வருகிறார்.

    அந்த வகையில் இந்த வழக்கில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. காசிப் மற்றொரு டி.எஸ்.பி. காதர்பாட்சா, மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மூவரையும் விசாரணைக்கு வருமாறு தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இந்த 3 போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற உள்ளது. ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேரிடையாக இவர்களிடம் விசாரணை நடத்த உள்ளார்.

    சிலைகள் கடத்தப்பட்ட போது போலீஸ் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டது பற்றிய தகவல்களை உரிய முறையில் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதுபற்றி விசாரணை நடைபெற உள்ளது.

    இதுமட்டுமின்றி பழவூர் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகளை செய்து வைத்து பிரச்சனையை தீர்த்து விடலாம் என்று போலீஸ் அதிகாரிகள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றியும் 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜீவானந்த்திடம் அதிரடி விசாரணை நடத்த பொன்.மாணிக்கவேல் முடிவு செய்துள்ளார்.

    இந்த விசாரணைக்கு பிறகு பழவூர் கோவில் சாமி சிலைகள் கடத்தல் வழக்கில் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IdolSmuggling #IGPonmanikavel
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமி‌ஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது. #JayaDeathProbe #OPanneerSelvam
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவர் சிகிச்சை தொடர்பாக முடிவு செய்தவர்கள் பற்றியும் மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    இந்த மர்மங்களுக்கு விடை காண்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த விசாரணை கமி‌ஷன் விசாரணையை நடத்தி வருகிறது.

    அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதியுடன் இந்த விசாரணை கமி‌ஷனின் பதவி காலம் நிறைவு பெற உள்ளது. ஆனால் இன்னமும் விசாரணை முடியவில்லை. எனவே விசாரணை கமி‌ஷனின் பதவி காலத்தை நீட்டிக்க செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும் வாக்குமூலங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஜெயலலிதா உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், அவர்களது உதவியாளர்கள், ஜெயலலிதாவுக்கு அரசு பணிகளில் உதவியாக இருந்த அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், சிகிச்சை அளித்த டாக்டர்கள், அரசு டாக்டர்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    அந்த வாக்குமூலங்களில் மிகுந்த முரண்பாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக சசிகலா உறவினர்களும், டாக்டர்களும் சொல்லும் தகவல்களுக்கு நிறைய வித்தியாசம் உள்ளது. எனவே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கலாமோ என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.


    இந்த விவகாரத்தில் முக்கியமாக கருதப்படுபவர் சசிகலாதான். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான இவர் தான் சிகிச்சை தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுத்தார். ஜெயலலிதாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தது முதல் அடக்கம் செய்தது வரை அருகில் இருந்தது சசிகலா மட்டுமே.

    எனவே சசிகலா சொல்லும் தகவல்கள் இந்த விவகாரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.

    தற்போது சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சென்னைக்கு வரவழைத்து விசாரிப்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    எனவே பெங்களூர் சிறைக்கே சென்று விசாரணை நடத்தலாமா? என்று ஆறுமுகசாமி கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. சசிகலாவிடம் நேரில் விசாரிக்க அனுமதி கிடைக்காத பட்சத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதுபோல ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சிங்கப்பூர் டாக்டர்களிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    சசிகலாவிடம் விசாரணை நடத்திய பிறகு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடமும் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமி‌ஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது.

    இவர்கள் தவிர அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரிடமும் விசாரிக்க விசாரணை கமி‌ஷன் திட்டமிட்டுள்ளது. தேவைப்பட் டால் அப்பல்லோ டாக்டர்களை மீண்டும் அழைத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த விசாரணைகள் அனைத்தும் முடிந்த பிறகே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறதா? என்பது தெரிய வரும். #JayaDeathProbe #OPanneerSelvam #Vijayabaskar #Arumugasamycommission
    வருமான வரித்துறை சோதனையில் ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில், காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. #SPKgroup #ITRaid #IncomeTaxRaid
    சென்னை:

    வருமான வரித்துறை சோதனையில் ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில், காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த அரசு முதல்நிலை காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.174 கோடி, 105 கிலோ தங்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் கிடைக்காததால் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.



    குறிப்பாக சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனையை தொடர்ந்தனர்.

    கடந்த 3 நாட்களாக நடந்து வரும் வருமான வரித்துறையினர் சோதனையின்போது, செய்யாத்துரை மற்றும் அவருடைய மகன் நாகராஜ் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி லாக்கர் சாவிகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    செய்யாத்துரை கணக்கு வைத்துள்ள வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் செய்துள்ள பணபரிமாற்ற விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வங்கிகளில் இருந்து பெற்றுள்ளனர். அத்துடன் செய்யாத்துரை, அவரது மகன்கள் மற்றும் துணை நிறுவன நிர்வாகிகளின் வங்கி லாக்கர்களையும் திறந்து சோதனையிட வங்கி அதிகாரிகளிடம் முறையான அனுமதியை பெற்று வருகின்றனர்.

    இதுதவிர சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தில் செய்யாத்துரை தொடர்பான ஆவணங்களை தேடியபோது, ரூ.4 கோடி சிக்கியது. இந்த பணம் செய்யாத்துரைக்கு சொந்தமானதா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலரை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

    அத்துடன் செய்யாத்துரை, அவருடைய மகன் நாகராஜ் மற்றும் அவர்களது நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள், இயக்குனர்களிடம் நேரில் விசாரணை நடத்த வருமான வரித்துறை எண்ணியுள்ளது. இதற்காக செய்யாத்துரை உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப வருமான வரித்துறை தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இந்த விசாரணையின்போது மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    செய்யாத்துரை மற்றும் அவரது நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கத்தை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பினாமி சொத்துகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    செய்யாத்துரை, நாகராஜிக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளிட்ட 3 நிறுவனங்களும் தலா ரூ.10 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இந்த 3 நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.54 கோடியே 70 லட்சமாகும். இப்படி இருக்க தற்போது வரை எப்படி ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் இவர்களுக்கு வந்தது? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.

    செய்யாத்துரை மற்றும் நாகராஜிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் சில தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இவர்களை சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அத்துடன் செய்யாத்துரைக்கு தொழில் ரீதியாக மிக நெருக்கமாக இருப்பவர்களின் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதால், அவர்களையும் விசாரணைக்கு அழைப்பதற்காக அனைவருக்கும் சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணி ஓரிரு நாட்களில் நடைபெறும். இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

    காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனம் மற்றும் டி.வி.எச். நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது தீபக் என்பவருக்கு சொந்தமான கோவிலாம்பாக்கத்தில் உள்ள எவால்வு குளோத்திங் கம்பெனியிலும் வருமான வரி சோதனை நடந்ததாக தவறாக செய்தி வெளியானது. எவால்வு குளோத்திங் நிறுவனத்தின் உரிமையாளர் தீபக் இல்லை என்றும், எவால்வு குளோத்திங் நிறுவனத்துக்கும், எஸ்.பி.கே. அல்லது டி.வி.எச். நிறுவனங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்றும் எவால்வு குளோத்திங் நிறுவன வக்கீல் டி.மோகன் தெரிவித்து உள்ளார்.

    மயிலாப்பூர் வீரபெருமாள் கோவில் தெருவில் உள்ள நாகராஜின் உதவியாளர் பூமிநாதன் வீட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களையும், பணத்தையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    அவருடைய பெற்றோரிடம் விசாரித்ததில், தனது மகன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வரும்போது பைகளை எடுத்து வருவார். கம்பெனிக்கு சொந்தமான பொருட்கள் என்பதால் அவற்றை நாங்கள் என்ன ஏது என்று கேட்கவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக பெரிய பைகளையும், சூட்கேசுகளையும் கொண்டுவந்தார். அதில் என்ன இருக்கிறது என்று நாங்கள் கேட்கவில்லை என்று அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அந்த தெருவில் வசிப்பவர்களும் பூமிநாதன் பெரிய பைகளையும், சூட்கேசுகளையும் கொண்டு வந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர்.

    மயிலாப்பூர், பங்கார அம்மாள் கோவில் தெருவில் வசித்து வரும் காரைக்குடியை சேர்ந்த நகை ஆசாரி முத்தையா என்பவர், பிரபல நகை கடைகளுக்கும், வெளிமாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கும் நகைகளை செய்து கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருடைய வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இங்கிருந்து ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  #SPKgroup #ITRaid #IncomeTaxRaid
    வருகிற 20-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக எஸ்.வி.சேகரிடம் சம்மன் கொடுக்கப்பட்டது. எதிர்ப்பை சமாளிக்க அல்லிகுளம் கோர்ட்டு வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
    சென்னை:

    காமெடி நடிகரும், பா.ஜனதா பிரமுகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

    அதற்கு மாறாக எஸ்.வி.சேகருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எஸ்.வி.சேகரை கைது செய்ய கோரி போராட்டங்களும் நடைபெற்றன.

    கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக எஸ்.வி.சேகர் அளித்த முன்ஜாமீன் மனுக்கள் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் போலீசார் சென்ட்ரல் அருகே உள்ள எழும்பூர் அல்லிகுளம் கோர்ட்டில் எஸ்.வி.சேகர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து வருகிற 20-ந்தேதி எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

    இதற்கான சம்மனை வழங்குவதற்காக மயிலாப்பூரில் உள்ள எஸ்.வி.சேகரின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். எஸ்.வி.சேகர் சம்மனை வாங்க மறுத்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அவரது வீட்டில் சம்மன் வழங்கப்பட்டது. இதனை ஏற்று எஸ்.வி.சேகர் 20-ந்தேதி கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜர் ஆவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    அன்றைய தினம் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அல்லிகுளம் கோர்ட்டு வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்தே அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே 20-ந்தேதி அவர் கோர்ட்டில் ஆஜராகும் போது பலத்த எதிர்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் 25-ந் தேதி ஆஜராகும்படி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சசிகலா உறவினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், போயஸ் கார்டன் இல்லத்தில் வேலை பார்த்த நிர்வாகிகள் என அனைத்து தரப்பினருக்கும் விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது. சம்மனை பெற்றுக்கொண்டவர்கள் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், டாக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் விசாரணை கமிஷனில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். 9-ந் தேதி அப்பல்லோ டாக்டர் சாந்தாராம் விசாரணையில் பங்கேற்றார். இடையில் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது வரும் 25-ந் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடங்க இருக்கிறது.

    அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சசிகலா உதவியாளர் கே.பி.கார்த்திகேயன், ஜெயலலிதா தோழியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதர்சயத் ஆகியோர் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் 25-ந் தேதி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை ஆணையத்திடம் தெரிவிக்க இருக்கின்றனர். ஜெயலலிதாவின் பள்ளி தோழி என்பதால் பதர்சயத் ஆணையத்திடம் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து தனக்கு தெரிந்த பரபரப்பு தகவல்களை வெளியிடுவார் என்று தெரிகிறது. இதில் சசிகலா உதவியாளர் கே.பி.கார்த்திகேயன் மறு விசாரணைக்காக ஆஜர் ஆகிறார்.

    அதேவேளையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருக்கும் பொன்.மாணிக்கவேலும் முதல் முறையாக விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி, விளக்கமளிக்கிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, கடந்த 2012-ம் ஆண்டு பொன்.மாணிக்கவேல் மாநில உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி உள்ளார். எனவே அவர் அந்த பதவியில் இருந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற விஷயங்கள் குறித்து அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்த இருக்கிறார். எந்தவொரு கருத்தையும் வெளிப்படையாக தெரிவித்து வரும் ஐ.ஜி. பொன்.மணிக்கவேல், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையிலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது.

    இதனை தொடர்ந்து 26-ந் தேதி சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்த இருக்கிறார். அப்போது ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கூடுதல் டி.எஸ்.பி. வீரபெருமாள், கவர்னர் மாளிகை உதவி பிரிவு அலுவலர் ஆர்.சீனிவாசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ஆகியோர் நேரில் ஆஜராகி, குறுக்கு விசாரணையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். இதற்கான சம்மன் அவர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
    ×