என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sourav Ganguly"
- இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நான் ஒரு பெங்காலி என்று பாராட்டப்பட்டது நன்றாக இருந்தது.
- கங்குலி தனது 50-வது பிறந்தநாளை கடந்த ஜூலை 8-ம் தேதி லண்டனில் பயின்று வரும் தனது மகளுடன் கொண்டாடினார்.
லண்டன்:
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான், லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் ஒரு நாள் கோப்பையை அவர் இந்தியாவுக்காக வென்று கொடுத்தார். இது குறித்து கங்குலி கூறியதாவது:- இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நான் ஒரு பெங்காலி என்று பாராட்டப்பட்டது நன்றாக இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் என்னை தொடர்பு கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த விருதை வழங்குகிறார்கள். இந்த முறை நான் அதைப் பெற்றேன் என்றார்.
முன்னதாக கங்குலி தனது 50-வது பிறந்தநாளை கடந்த ஜூலை 8-ம் தேதி லண்டனில் பயின்று வரும் தனது மகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியா, இங்கிலாந்து அணியிடம் இழந்த போதிலும், டி-20 தொடரை போல, இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியில் விராட்கோலியின் கேப்டன்ஷிப் செயல்பாட்டை இந்திய அணியின் கேப்டன்ஷிப்புடன் ஒப்பிடக்கூடாது. இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். துணைகேப்டன் ரோகித் சர்மா, டோனி ஆகியோர் அவருக்கு நல்ல ஆதரவாக இருப்பார்கள். ஹர்திக் பாண்ட்யா நல்ல பார்மில் இருக்கிறார். அவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு முக்கிய பங்களிப்பாளராக இருப்பார்.
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் உலக கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறும். இங்கிலாந்து மண்ணில் உலக போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் சிறப்பானதாகும். அங்கு 2017-ம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 2009-ம் ஆண்டில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி நன்றாகவே ரன் குவித்து வருகிறது.
உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வலுவானதாகும். இந்திய அணியை வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி கண்ட இந்திய அணியை, தற்போதைய இந்திய அணியுடன் ஒப்பிடக் கூடாது. இரு அணிகளும் வெவ்வேறு கால கட்டத்தை சேர்ந்ததாகும். தற்போதைய இந்திய அணி உலக கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன்.
இந்திய அணிக்கு நெருக்கடி இருப்பது நல்லது தான். நெருக்கடியில் இந்திய அணி சிறப்பாக செயல்படும். மற்ற அணிகளுக்கும் நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது. உலக கோப்பை போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக் காது.
இவ்வாறு கங்குலி கூறினார்.
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த போட்டிக்கான அணிகளின் உத்தேச பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. அதில் இருந்து 15 பேர் கொண்ட இறுதி அணியை ஏப்ரல் 23-ந்தேதிக்குள் அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘கெடு’ விதித்துள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை இன்னும் ஒரு சில இடத்திற்கு யாரை சேர்ப்பது என்பது பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக பேட்டிங்கில் 4-வது வரிசையில் யாரை ஆட வைப்பது என்ற குழப்பம் நிலவுகிறது. அம்பத்தி ராயுடு இந்த வரிசைக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் அவரது பேட்டிங் மெச்சும்படி இல்லை. இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அந்த இடத்தை பிடிப்பாரா? என்பதிலும் உறுதி இல்லை. இதனால் இந்திய அணியின் 4-வது வரிசையில் ஆடப்போவது யார்? என்பது மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த சீசனை எடுத்துக் கொண்டால் ரிஷப் பந்த் (டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்) சிறப்பாக ஆடினார். அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் அவர் 2-வது இடத்தை பிடித்தார். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. மூத்த விக்கெட் கீப்பர் டோனி இருப்பதால் ரிஷப் பந்த் சேர்க்கப்படுவதும், நீக்கப்படுவதுமாக இருக்கிறார். நிலையான இடம் கிடைக்காததால் ஒரு நாள் போட்டியில் அவரால் முத்திரை பதிக்க முடியவில்லை. ஆனால் ரிஷப் பந்துக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மூன்று வடிவிலான போட்டிகளில் இருந்தும் அவரிடம் நிறைய எதிர்பார்க்கலாம். அவரிடம் அபாரமான திறமை இருக்கிறது. கடின உழைப்பாளி. கடந்த 4 ஆண்டுகளாக அவரை வலை பயிற்சியில் கவனித்து வருகிறேன். பயிற்சிக்கு முதலிலேயே வந்து நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபடுவார். நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய சொத்தாக இருப்பார்.
இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசைக்கு பலரது பெயர் பரிசீலிக்கப்படலாம். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டு தான் அந்த வரிசைக்கு சரியான வீரர் யார் என்பதை முடிவு செய்ய உதவும் என்று நினைக்கிறேன். புஜாராவை கூட அந்த வரிசையில் இறக்கலாம் என்று ஏற்கனவே யோசனை சொன்னேன். ஏனெனில் அவர் நல்ல பார்மில் இருக்கிறார். நான் கேப்டனாக இருந்தபோது, ராகுல் டிராவிட் இந்த பணியை செய்தார். வேறு எந்த வழியும் இல்லை என்றால் புஜாராவை வைத்து பரிசோதித்து பார்க்கலாம். ரிஷப் பந்த் அல்லது அம்பத்தி ராயுடு இதற்கான வாய்ப்பில் இருக்கலாம். நாங்கள் கருத்து தான் சொல்ல முடியும். ஆனால் அந்த வரிசைக்கு யார் இறக்கப்பட வேண்டும் என்பது கேப்டன் கோலிக்கு தான் தெரியும்.
விராட் கோலி எந்த வரிசையில் விளையாடினாலும் ரன்கள் குவிப்பார். என்னை பொறுத்தவரை அவர் 2-வது விக்கெட்டுக்கு இறங்க வேண்டும்.
இவ்வாறு கங்குலி கூறினார்.
பேட்டியின் போது உடன் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனுமான ரிக்கிபாண்டிங் கூறுகையில், ‘நானாக இருந்தால் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் ரிஷப் பந்தை தேர்வு செய்வேன். அவரை 4-வது வரிசைக்கு பயன்படுத்துவேன். அவரிடம் இருக்கும் திறமைக்கு அவரால் உலக கோப்பையை வென்று தர முடியும். அவர் துருப்பு சீட்டாக இருப்பார்’ என்றார். #IPL #SouravGanguly #WorldCup2019
கிரிக்கெட் வீரர் டோனி மோட்டார்சைக்கிள்கள் மீது அதிக பிரியம் கொண்டவர்.
அவரிடம் சுமார் 20 அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றன. கிரிக்கெட் போட்டி இல்லாத நாட்களில் மோட்டார் சைக்கிளில் உலாவருவது அவருக்கு பிடித்த பொழுது போக்காக உள்ளது.
டோனி போலவே மேலும் சில கிரிக்கெட் வீரர்களும் மோட்டார்சைக்கிள்கள் மீது ஆர்வத்துடன் உள்ளனர். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு பி.எம்.டபிள்யூ ரக மோட்டார்சைக்கிளை வாங்கினார்.
அந்த மோட்டார்சைக்கிளின் விலை சுமார் ரூ.3 லட்சம் ஆகும். 3 ஆண்டுகள் வாரண்டி கொண்ட அந்த மோட்டார்சைக்கிள் அதி நவீன வசதிகள் கொண்டவையாகும்.
தற்போது முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலியும் இதே ரக புதிய மோட்டார்சைக்கிள் வாங்கி உள்ளார். இந்த மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.3 லட்சத்து 49 ஆயிரம் ஆகும்.
313 சி.சி. சக்தி கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் அதிநவீன வசதிகள் கொண்டது. பி.எம்.டபிள்யூ மோட்டார் சைக்கிள்கள் ஜெர்மனி, தாய்லாந்து, பிரேசில் நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Yuvrajsingh #SouravGanguly #MSDhoni
In Barcelona .. dad and Sana ... pic.twitter.com/Ic3U8KPTgs
— Sourav Ganguly (@SGanguly99) December 22, 2018
இவரை ஸ்பெயின் நாட்டின் லா லிகா தொடரில் விளையாடும் முன்னணி அணியான பார்சிலோனா அழைத்து, அந்த அணியின் ஜெர்சியில் ‘DADA’ எனக் குறிப்பிட்டு பரிசளித்துள்ளது. கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகள் சானாவுடன் அமர்ந்து இருக்கும் படத்தை வெளியிட்டு ‘‘பார்சிலோனாவில் அப்பா, சானா’’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வருகிறார்கள். 2 டெஸ்டிலும் சேர்த்து நாதன் லயன் 16 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
இந்த நிலையில் நாதன் லயன் பந்து வீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்க முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
லயன் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஷேன் வார்னே, முரளீதரன், சுவான் ஆகியோர் போல் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #AUSvIND #SouravGanguly #NathanLyon
இதில் பங்குபெற்ற இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறியது. இந்தப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜை அணியில் சேர்க்காதது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மிதாலியின் மேனேஜரும், "இந்திய கேப்டன் பிரீத் கவூரை கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர்" என்று விமர்சித்தார். இந்நிலையில், இந்திய ஆண்கள் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இது குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
‘மிதாலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள். வாய்ப்பு தானாக வரும். அதனால் மிதாலியின் நீக்கத்துக்கு நான் வருந்தவில்லை. ஆனால் இந்தியா இவ்வளவு தூரம் உலகக் கோப்பையில் தோற்காமல் வந்து, கோப்பையை நூலிழையில் தோற்றதுக்கு வருந்துகிறேன்" என்றும் கங்குலி கூறியுள்ளார்.
கிரேக் சேப்பல் காலத்தில் ஒருநாள் போட்டியின் சிறந்த வீரராக விளங்கிய கங்குலி 15 மாதங்கள் அணியில் இடம்பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. #SouravGanguly #MithaliRaj
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
20 ஓவர் தொடர் 21-ந்தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடியெல்டுவில் தொடங்குகிறது.
70 ஆண்டுகளில் இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது இல்லை.
2003-04-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்ததே ஆஸ்திரேலியாவில் சிறந்த நிலையாகும்.
இந்த சுற்றுப்பயணத்தில் தொடரை வெல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா கடைசி டெஸ்டில் சிறப்பாக வெற்றி பெற்றது. பிரிஸ்பேரில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
அடிலெய்டுவில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. மெல்போர்ன் டெஸ்டை வென்று ஆஸ்திரேலியா சமன் செய்தது.
தற்போது ஆஸ்திரேலியா செல்லும் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடரை கைப்பற்ற நல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான, சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நமது பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தால் வேகப்பந்து வீரர்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்த இயலும். வேகப்பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படி நிகழும் பட்சத்தில் இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்லும்.
11 பேர் கொண்ட அணியில் 3 வேகப்பந்து வீரர்கள் இடம் பெறுவார்கள். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.
என்னை பொறுத்தவரை ரோகித்சர்மாவை 11 பேர் கொண்ட அணியில் சேர்க்க வேண்டும். தற்போது பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கும் அவர் 6-வது வீரர் வரிசைக்கு பொறுத்தமானவர். மற்றொரு வாய்ப்புக்கு அவர் தகுதியானவர்.
இவ்வாறு கங்குலி கூறியுள்ளார். #AUSvIND #RohitSharma #souravganguly
முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்த பிரித்வி ஷா ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து செஞ்சூரி அடித்தார். பெரிய போட்டி, முதல் ஆட்டம், அவருக்கு தெரிந்த விளையாட்டை எளிதாக ஆடினார். நேர்மறையான, சிறந்த மனோநிலை, திறமையான ஆட்டம் மிகவும் அபாரம். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையிலும், இந்தியாவிற்கான போட்டியிலும் அவரது ஆட்டம் முற்றிலும் மாறுபட்டுள்ளது.
பிரித்வி ஷா ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாட முடியும். இன்னும் ஒரு மாதத்தில் பிரித்வி ஷா ஆஸ்திரேலியா செல்ல வேண்டியுள்ளது. அவர் ஒரு சிறந்த பேக்-புட் வீரர் என்பதாபல் அங்கு சிறப்பாக விளையாடுவது உறுதி’’ என்றார்.
இந்த புத்தகத்தின் வெளியிட்டு விழா சிம்பியோசிஸ் இன்டர்நேஷனலில் நடைபெற்றது. அப்போது கங்குலி கூறுகையில் ‘‘கிரிக்கெட் கால்பந்து போட்டி போன்றது அல்ல.
தற்போதுள்ள பெரும்பாலான பயிற்சியாளர்கள் கால்பந்தை பயிற்சியாளர்கள் இயக்குவது போல் இயக்கலாம் என்ற நினைப்பில் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், கிரிக்கெட் கேப்டன்களின் விளையாட்டு. பயிற்சியாளர் பின் சீட்டில்தான் இருக்க வேண்டும். இதுதான் முக்கியமானது’’ என்றார்.
14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குரூப் பிரிவு ஆட்டத்திலும் பாகிஸ்தான் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களில் சிலர் கூறும்போது, நான் ஒருவனே இந்திய வீரர்களின் 10 விக்கெட்டையும் கைப்பற்றுவேன், கோலி இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவு என வெற்று வாய் சவடால் விட்டனர். ஆனால் நிஜத்தில் நடந்ததோ வேறு, இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளையும் சேர்த்து அவர்கள் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.
மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் போராடி கடைசி ஓவரில் தான் வெற்றி பெற்றனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி வீரர்கள் மீதும், கேப்டன் சர்பராஸ் அகமது மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் என புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
சர்பிராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன், அவரை போன்ற வீரர்கள் தினம் தினம் பிறந்து வர மாட்டார்கள். கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வென்ற அவர் ஒரு தைரியமான வீரர்.
ஆசிய கோப்பை தோல்விகளால் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், முன்னாள் வீரர்களும் சேர்ந்து அவரை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும் என கங்குலி கூறினார். #SarfrazAhmed #SouravGanguly
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இருப்பினும் முன்னாள் வீரர்கள் பலரும் விராட்கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, கேப்டன் விராட்கோலிக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியில் உள்ள திறமையான வீரர்களை அங்கீகரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். எந்தவொரு அணியும் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் இதனை செய்ய வேண்டியது அவசியமானதாகும். புஜாரா, ரஹானே, லோகேஷ் ராகுல் ஆகியோர் இங்கிலாந்து போட்டி தொடரில் வெளிப்படுத்திய பேட்டிங் திறன் 10 மடங்கு சிறந்ததாக இருந்தது.
இந்திய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ரிஷாப் பான்ட் ஆட்டத்தை குறிப்பிடலாம். திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து சிறந்த திறனை வெளிக்கொணர வேண்டியது கேப்டனின் முக்கிய பொறுப்பாகும். கேப்டன் வீரர்களின் தோளில் கை போட்டு அரவணைத்து பேசினால் அணி தானாகவே முன்னேற்றம் காணும்’ என்று தெரிவித்தார். #SouravGanguly #ViratKohli
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்