search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sarfraz Ahmed"

    சர்பிராஸ் அகமதுக்கு ஐசிசி நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஏமாற்றம் அளிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #ICC #PCB
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோ நான்கு விக்கெட் வீழ்த்தியதுடன், அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

    37-வது ஓவரின்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த பெலுக்வாயோவை நோக்கி பாகிஸ்தான் அணி கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் அகமது இனவெறி குறித்து ஸ்லெட்ஜிங் செய்தார். ஸ்டம்பில் இருந்த மைக்கில் சர்பிராஸ் அகமதின் குரல் தெளிவாக பதிவாகியிருந்ததால் சர்ச்சை கிளம்பியது.

    தனது கருத்துக்கு டுவிட்டர் மூலம் மன்னிப்பு கேட்டார் சர்பிராஸ் அகமது. அத்துடன் பெலுக்வாயோவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அதேவேளையில் தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் சர்பிராஸ் அகமதை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்றார்.

    இதனால் பிரச்சனை அத்துடன் முடிந்துவிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நினைத்தது. ஆனால் போட்டி நடுவர் இந்த பிரச்சனையை ஐசிசி பார்வைக்கு கொண்டு சென்றார். ஐசிசி நான்கள் போட்டிகளில் விளையாட சர்பிராஸ் அகமதுக்கு தடைவிதித்தது.

    இந்நிலையில் ஐசிசி தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில் ‘‘சர்பிராஸ் அகமதுக்கு எதிரான ஐசிசி-யின் நடவடிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

    சர்பிராஸ் அகமது டுவிட்டர் மூலமாகவும், நேரடியாகவும் மன்னிப்பு கேட்டார். டு பிளிசிஸ் நாங்கள் மன்னித்து விட்டோம் என்று கூறினார். இதனால் வீரர்கள் மற்றும் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஏற்றுக் கொண்டதால் பிரச்சனை அத்துடன் முடிவடைந்து விட்டதாக எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்து கோரிக்கைகளும் ஐசிசி-யால் புறக்கணிக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது.
    பெலுக்வாயோ குறித்து சர்பிராஸ் அகமது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்று தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் மோதிய 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா சேஸிங் செய்யும்போது, பெலுக்வாயோ பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தென் பெலுக்வாயோவை இனவெறியுடன் பேசினார்.



    இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் கூறும்போது, ‘‘சர்பிராஸ் அகமது தனது பேச்சு குறித்து மன்னிப்பு கேட்டுவிட்டார். அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே அவரை நாங்கள் மன்னித்து விட்டோம்’’ என்றார்.
    சர்பிராஸ் அகமதுவின் இனவெறி பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில் தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். #SarfrazAhmed #SAvPAK
    டர்பனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின்போது, பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ப்ராஸ் அகமது, எதிரணி வீரர் பெலக்வாயோவை இனவெறியுடன் விமர்சனம் செய்தார். அவரை நோக்கி, சர்ப்ராஸ் அகமது “ஏய் கருப்பு வீரரே. இன்று உங்கள் அம்மா எங்கு இருக்கிறார். உனக்காக அவர் என்ன பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்’ என்று கூறி சீண்டினார்.

    இதனால் சர்ச்சை கிளம்பிய நிலையில் தனது பேச்சுக்கு சர்ப்ராஸ் அகமது மன்னிப்பு கேட்டுள்ளார். ‘விரக்தியில் நான் வெளிப்படுத்திய வார்த்தைகளை யாரும் தவறாக எடுத்து இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. எனது வார்த்தைகளை எதிரணி வீரர்களோ, கிரிக்கெட் ரசிகர்களோ புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நான் பேசவில்லை’ என்று சர்ப்ராஸ் கூறியுள்ளார். #SarfrazAhmed #SAvPAK
    சர்பிராஸ் அகமதுவின் இனவெறி பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவருக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளது. #SarfrazAhmed #SAvPAK
    டர்பன்:

    பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி டர்பனில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 204 ரன் இலக்கை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 80 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது.

    பெலக்வாயோ- வான்டெர் துஸ்சென் ஜோடி அபாரமாக விளையாடி வெற்றி பெற வைத்தது. இந்த ஆட்டத்தின் போது பெலக் வாயோவை பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது இன வெறியுடன் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



    இதற்கிடையே சர்பிராஸ் அகமது டுவிட்டரில் மன்னிப்பு கேட்டு உள்ளார். அதில் எனது பேச்சு மூலம் யாராவது மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் யாரையும் குறிப்பிட்டும் நேரடியாகவும் எனது வார்த்தைகளை கூறவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் சர்பிராஸ் அகமதுவின் இனவெறியுடனான பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விசாரணை நடத்துகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சர்பிராஸ் அகமதுவுக்கு 4 முதல் 8 வரை சஸ்பெண்டு புள்ளிகள் வழங்கப்படும்.

    2 சஸ்பெண்டு புள்ளி பெறும் வீரருக்கு ஒரு டெஸ்ட் போட்டி அல்லது ஒரு நாள் போட்டிக்கு தடை விதிக்கும் வகையில் விதி உள்ளது. இதனால் சர்பிராஸ் அகமதுவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. #SarfrazAhmed #SAvPAK
    பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் அவரை ஆதரித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊக்கப்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். #SarfrazAhmed #SouravGanguly
    புதுடெல்லி :

    14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குரூப் பிரிவு ஆட்டத்திலும் பாகிஸ்தான் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது.

    இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களில் சிலர் கூறும்போது, நான் ஒருவனே இந்திய வீரர்களின் 10 விக்கெட்டையும் கைப்பற்றுவேன், கோலி இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவு என வெற்று வாய் சவடால் விட்டனர். ஆனால் நிஜத்தில் நடந்ததோ வேறு, இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளையும் சேர்த்து அவர்கள் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.

    மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் போராடி கடைசி ஓவரில் தான் வெற்றி பெற்றனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி வீரர்கள் மீதும், கேப்டன் சர்பராஸ் அகமது மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் என புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

    சர்பிராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன், அவரை போன்ற வீரர்கள் தினம் தினம் பிறந்து வர மாட்டார்கள். கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வென்ற அவர் ஒரு தைரியமான வீரர்.

    ஆசிய கோப்பை தோல்விகளால் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், முன்னாள் வீரர்களும் சேர்ந்து அவரை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும் என கங்குலி கூறினார். #SarfrazAhmed #SouravGanguly
    இந்திய வீரர்கள் எங்களைவிட திறமையானவர்கள் என ஆசிய கோப்பை போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார். #AsiaCup2018 #INDvPAK
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    எங்களது பந்து வீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக பந்து வீசினார்கள். தவானின் பேட்டிங் அபாரமாக இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து எங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-



    நாங்கள் சிறப்பாகவே ஆடினோம். ஆனால் 20 முதல் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டோம். இது மாதிரி கேட்சுகளை தவறவிட்டால் வெற்றி பெறுவது கடினம்.

    நாங்கள் தொடக்கத்லேயே சில விக்கெட்டுகளை வீழ்த்த நினைத்தோம். இது தொடர்பாக பந்து வீச்சாளர்களிடம் பேசினேன். ஆனால் தவான் ரோகித் போன்ற வீரர்களை ‘அவுட்’ செய்ய முடியவில்லை. அவர்கள் திறமைசாலிகள்.

    எங்களைவிட இந்திய வீரர்கள் திறமையானவர்கள் அடுத்த ஆட்டம் எங்களுக்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதனால் அதில் சிறப்பாக செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுவது பாகிஸ்தானா? வங்காளதேசமா? என்பது இரு அணிகள் நாளை மோதும் ஆட்டத்தின் முடிவு மூலம் தெரிய வரும்.

    இந்திய அணி நாளைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. #AsiaCup2018 #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஹாங் காங் அணி 116 ரன்னில் சுருண்டது #AsiaCup2018 #HKvPAK #PAKvHK
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (15.09.2018) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் வங்காள தேசம் இலங்கையை வீழ்த்தியது.

    இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங் காங் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹாங் காங் அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி ஹாங் காங் அணியின் நிஜாகட் கான், அன்ஷுமான் ராத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நிஜாகட் கான் 11 பந்தில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ராத் 34 பந்தில் 19 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த ஹயத் 7 ரன்னிலும், கார்ட்டெர் 2 ரன்னிலும் வெளியேறினார்கள்.


    ரன்அவுட் ஆகிய ஹாங் காங் தொடக்க பேட்ஸ்மேன்

    ஒரு கட்டத்தில் ஹாங் காங் 44 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்க சின்சிட் ஷா உடன் ஐஜாஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்தது. ஐஜாஸ் கான் 97 ரன்கள் எடுத்திருக்கும்போது 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அவர் ஆட்டமிழந்ததும் அடுத்து வந்த மெக்கென்சி (0), அஃப்ஜல் (0) ரன்ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்தும், கின்சிட் ஷா 26 ரன்னிலும் வெளியேற ஹாங் காங் 99 ரன்களுக்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது.


    சதாப் கான்

    கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நவாஸ் (9), நதீம் அகமது (9) 17 ரன்கள் சேர்க்க ஹாங் காங் 35.1 ஓவரில் 116 எடுத்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் உஸ்மான் கான் 3 விக்கெட்டும், ஹசன் அலி, சதாப் கான் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்க இருக்கிறது.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹாங் காங் முதலில் பேட்டிங் செய்கிறது. #AsiaCup2018 #HKvPAK #PAKvHK
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (15.09.2018) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் வங்காள தேசம் இலங்கையை வீழ்த்தியது.

    இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங் காங் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஹாங் காங் அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    டாஸ் தோற்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘‘நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். ஆனால், அது நமது கையில் இல்லை. பெரிய தொடரில் விளையாடும் ஹாங் காங் அணிக்கு வாழ்த்துக்கள்’’ என்றார்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற சனிக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. 19-ந்தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடக்கிறது. கடைசியாக இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

    இந்நிலையில் ஆசிய கோப்பையில் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘‘எங்களுடைய முன்னேற்பாடுகள் (preparation) மிகவும் சிறப்பாக உள்ளது. இந்தியா உடன் மோதுவதற்கு கிடைக்கும் ஓய்வு நாட்களை சிறப்பாக மாற்ற முயற்சி செய்வோம்.

    இந்தியாவிற்கு எதிராக நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு முதல் பெரிய ஆட்டம். அதனால் உத்வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்வோம். இந்தியாவிற்கு எதிராக முழுத்திறமையை வெளிப்படுத்துவோம்.



    பெரிய தொடரின்போது உத்வேகம் முக்கியமானது. உத்வேகம்தான் முக்கியமான ரோலாக இருக்கும். அணி அதிகமான நம்பிக்கையில் உள்ளது. மனஉறுதியும் சிறப்பாக உள்ளது. ஆக, முதல் போட்டியில் இருந்தே உத்வேகத்தை அதிகரித்து, அதை கடைசி வரை கொண்டு செல்வோம்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆடுகளத்தை பார்த்தீர்கள் என்றால், பொதுவாகவே ஸ்லோ பிட்ச் ஆகத்தான் இருக்கும். ஆகவே, ஸ்பின்னர்கள் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால், 300 ரன்களுக்கு மேல் டார்கெட் நிர்ணயிக்க வேண்டும். அப்படி செய்தால், எங்களது பந்து வீச்சாளர்கள் எதிரணியை சாய்த்து விடுவார்கள்’’ என்றார்.
    ×