search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐசிசி சர்பிராஸ் அகமதுக்கு தடை விதித்தது ஏமாற்றம் அளிக்கிறது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
    X

    ஐசிசி சர்பிராஸ் அகமதுக்கு தடை விதித்தது ஏமாற்றம் அளிக்கிறது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

    சர்பிராஸ் அகமதுக்கு ஐசிசி நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஏமாற்றம் அளிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #ICC #PCB
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோ நான்கு விக்கெட் வீழ்த்தியதுடன், அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

    37-வது ஓவரின்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த பெலுக்வாயோவை நோக்கி பாகிஸ்தான் அணி கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் அகமது இனவெறி குறித்து ஸ்லெட்ஜிங் செய்தார். ஸ்டம்பில் இருந்த மைக்கில் சர்பிராஸ் அகமதின் குரல் தெளிவாக பதிவாகியிருந்ததால் சர்ச்சை கிளம்பியது.

    தனது கருத்துக்கு டுவிட்டர் மூலம் மன்னிப்பு கேட்டார் சர்பிராஸ் அகமது. அத்துடன் பெலுக்வாயோவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அதேவேளையில் தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் சர்பிராஸ் அகமதை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்றார்.

    இதனால் பிரச்சனை அத்துடன் முடிந்துவிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நினைத்தது. ஆனால் போட்டி நடுவர் இந்த பிரச்சனையை ஐசிசி பார்வைக்கு கொண்டு சென்றார். ஐசிசி நான்கள் போட்டிகளில் விளையாட சர்பிராஸ் அகமதுக்கு தடைவிதித்தது.

    இந்நிலையில் ஐசிசி தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில் ‘‘சர்பிராஸ் அகமதுக்கு எதிரான ஐசிசி-யின் நடவடிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

    சர்பிராஸ் அகமது டுவிட்டர் மூலமாகவும், நேரடியாகவும் மன்னிப்பு கேட்டார். டு பிளிசிஸ் நாங்கள் மன்னித்து விட்டோம் என்று கூறினார். இதனால் வீரர்கள் மற்றும் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஏற்றுக் கொண்டதால் பிரச்சனை அத்துடன் முடிவடைந்து விட்டதாக எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்து கோரிக்கைகளும் ஐசிசி-யால் புறக்கணிக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது.
    Next Story
    ×