என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC Champions Trophy"

    • பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து பேசினார்
    • லாகூர் நகரத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது

    2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் வைத்து நடைபெற உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்புவதில் பிசிசிஐ தயக்கம் காட்டி வருகிறது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்காது என்ற சூழலே நிலவுகிறது.

    இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் [PCB] தீர்வு ஒன்றை முன்மொழிந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் இந்திய அணி தொடரில் பங்கேற்பதற்காக வழிவகைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

     

    அந்த வகையில் பிசிசிஐ -க்கு பிசிபி கூறிய திட்டம் என்னவென்றால், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால் தொடரில் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் இந்திய அணி இந்தியாவுக்கு திரும்பலாம். பின்னர் அடுத்த போட்டிக்கு மீண்டும் பாகிஸ்தான் வரலாம். இவ்வாறு ஒவ்வொரு போட்டியின்போதும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமாக சென்று சென்று வரும் திட்டத்தை பிசிபி கூறியுள்ளது.

    தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு இடையில் குறைந்தது ஒரு வார இடைவெளி இருப்பதால் இது சாதியாமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை முடித்துக்கொண்டு இந்திய அணி சண்டிகர் விமான நிலையம் அல்லது டெல்லி விமான நிலையம் திருப்ப ஏதுவாக இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கும் லாகூர் நகரத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திட்டத்தை பிசிசிஐ ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெறுகிறது.
    • பாகிஸ்தான் சென்று விளையாடமாட்டோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளதால் ஹைபிரிட் மாடல் தொடராக நடக்க வாய்ப்பு.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த வருடம் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் சென்று இந்தியா பங்கேற்குமா? என்பது குறித்து உறுதிப்படுத்தாமல் இருந்தது.

    இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாடாது. மற்ற இடங்களில் அதாவது பாகிஸ்தானுக்கு வெளியே போட்டி நடத்தப்பட்டால் பங்கேற்கும் எனக் கூறப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்பதற்காக நாங்கள் பாகிஸ்தான் செல்லமாட்டோம் எனக் கூறியதாக ஐ.சி.சி. எங்களிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    ஐசிசி எங்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளது. அதில் எங்கள் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிட்டுள்ளது.

    ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கான இந்த மெயிலை பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட தயக்கம் காட்டி வருவதால் ஹைபிரிட் மாடல் தொடராக இந்த தொடரை நடத்த வாய்ப்புள்ளதாக கருதப்பட்டு வந்தது.

    ஆனால் பாகிஸ்தானால் ஹைபிரிட் மாடல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நக்வி தெரிவித்துள்ளார்.

    இந்தியா கடந்த 2008-ம் ஆண்டுக்குப்பின் கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை. 2012-13-ல் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு இருநாடுகளுக்கு இடையில் ஒயிட்பால் தொடருக்காக இந்தியா வந்திருந்தது. அதன்பின் 2016 டி20 உலகக் கோப்பை, கடந்த வருடம் நடைபெறற் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்திருந்தது.

    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான பயணம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் காஷ்மீர் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் பிசிசிஐ கடும் எதிர்ப்பு.

    பாகிஸ்தானில் அடுத்த வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரை விளம்பரப்படுத்துவதற்கான ஐசிசி கோப்பை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படும்.

    அந்த வகையில் இன்று சாம்பியன்ஸ் டிராபி பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோப்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான ஸ்கார்டு, ஹன்சா, முசாபர்பாத் போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக இருந்தது.

    இதற்கு பிசிசிஐ கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இதனால் அப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படாது என ஐசிசி தெரிவித்துள்ளது.

    டாக்சிலா, கான்பூர், அபோதாபாத், முர்ரீ, நதியா கலி, கராச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நவம்பர் 26 முதல் 28-ந்தேதி வரை ஆப்கானிஸ்தானிலும், டிசம்பர் 10 முதல் 13-ந்தேதி வரை வங்கதேசத்திலும், டிசம்பர் 15 முதல் 22-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்காவிலும், டிசம்பர் 25-ந்தேதி முதல் ஜனவரி 5-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவிலும், ஜனவரி 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நியூசிலாந்திலும், ஜனவரி 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை இங்கிலாந்திலும், ஜனவரி 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை இந்தியாவிலும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

    • இந்த போட்டிக்கு தகுதி பெற்ற மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு வர தயாராக உள்ளன.
    • இந்திய அணிக்கு இங்கு வந்து விளையாடுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால், அவர்கள் எங்களிடம் பேசட்டும்.

    லாகூர்:

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. 1996-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்கும் முதல் ஐ.சி.சி. தொடர் இதுவாகும்.

    2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத இந்திய அணி, இப்போதும் அங்கு செல்ல மறுத்து விட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய இந்திய கிரிக்கெட் வாரியம் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதே நிலைமை ஏற்பட்ட போது, இந்திய அணியின் ஆட்டங்கள் இலங்கைக்கு மாற்றப்பட்டது.

    ஆனால் இந்த முறை இந்திய அணியின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. இந்திய அணி வராவிட்டால் ஐ.சி.சி. மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இன்னொரு பக்கம் போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி நேற்று லாகூரில் நிருபர்களிடம் கூறுகையில், 'பாகிஸ்தானுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று இந்தியா மறுத்தது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுதி உள்ளோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். விளையாட்டையும், அரசியலையும் தனித்தனியாக பார்க்க வேண்டும். எந்த நாடும் அவற்றை ஒன்றாக கலக்கக்கூடாது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் விஷயத்தில் எல்லாமே சரியாக நடக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

    மேலும் நக்வி கூறுகையில், 'எங்களை பொறுத்தவரை பாகிஸ்தானின் கவுரவமும், மதிப்பும் மிகவும் முக்கியம். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும். அவற்றில் ஒரு பகுதி ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

    இந்த போட்டிக்கு தகுதி பெற்ற மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு வர தயாராக உள்ளன. அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே இந்திய அணிக்கு இங்கு வந்து விளையாடுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால், அவர்கள் எங்களிடம் பேசட்டும். அவர்களின் கவலையை எங்களால் எளிதில் தீர்க்க முடியும். அவர்கள் இங்கு வராததற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.

    எனவே போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுவதில்லை என்ற எங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூடிய சீக்கிரம் போட்டி அட்டவணையை வெளியிடும்' என்றார்.

    • பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்பதை இந்தியா தெரிவித்துவிட்டது.
    • பாகிஸ்தானை விட்டு போட்டியை வேறு இடத்திற்கு மாற்றமாட்டோம் என பிசிபி உறுதி.

    பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்காது எனத் தெரிவித்துவிட்டது. அதேவேளையில் போட்டியை பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது இல்லை என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.

    இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி குறித்து இறுதி முடிவு எடுக்காமல் உள்ளது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் மற்றும் ஐசிசி சுமார் 844 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேரிடும் என சோயிக் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சோயிப் அக்தர் கூறுகையில் "பாகிஸ்தான் இந்தியாவை தனது மண்ணுக்குக்கு அல்லது பொதுவான இடத்திற்கு வரவழைத்து போட்டியில் விளையாட வைக்க முடியவில்லை என்றால் இரண்டு விசயங்கள் நடைபெறும்.

    முதலில் ஸ்பான்சர்சிப்பில் மூலம் பெறும் வருவாயில் ஐசிசி மற்றும் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் 100 மில்லியன் டாலர் (844 கோடி ரூபாய்) இழக்க நேரிடும். 2-வது இந்தியா பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து லாகூரில் விளையாடி தோற்றாலும் சரி வெற்றி பெற்றாலும் சரி, எது நடந்தாலும் சிறந்ததாக இருக்கும்" என்றார்.

    • பாகிஸ்தான் சென்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்தியா மறுப்பு.
    • நாளை நடைபெறும் ஐசிசி- பிசிபி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டது. அதேவேளையில் தொடரை ஹைபிரிட்டாக நடத்த பாகிஸ்தானும் மறுப்பு தெரிவித்து வருகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் ஐசிசி-க்கு சுமார் 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.

    இதனால் தொடரை ஹைபிரிட் மாடலாக நடத்துங்கள் ஊக்கத்தொகை தருகிறோம் என ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக நாளை ஐசிசி- பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு எடுக்க இருக்கிறது. அதன்பிறகு போட்டிக்கான அட்டவணை இறுதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் இனிமேல் பாகிஸ்தான் இந்தியா சென்று விளையாட வாய்ப்பில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நக்வி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி கூறுகையில் "இந்திய அதிகாரிகள் அவர்களுடைய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு வந்து விளையாட அனுப்ப தயாராக இல்லாதபோது, இந்தியாவில் நடைபெறும் அனைத்து தொடர்களிலும் பாகிஸ்தான் சென்று விளையாட வாய்ப்பில்லை.

    இந்திய அணி பாகிஸ்தான் வர மறுப்பு தெரிவிக்கும்போது, பாகிஸ்தான் அணி மட்டும் இந்தியா செல்லும் சமநிலையற்ற சூழ்நிலையை நாங்கள் கொண்டிருக்க முடியாது. ஐசிசி உடனான கூட்டத்தில் என்ன நடந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நல்ல செய்திகள் மற்றும் முடிவுகளுடன் நாங்கள் வெளிவருவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்றார்.

    • சமீபத்திய ஐ.சி.சி.யின் கூட்டம் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்தில் மாற்றுவதற்கு (ஹை பிரிட் மாடல்) பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டது.
    • நிபந்தனை 3 ஆண்டுகளுக்கா? அல்லது 2031 வரையிலான ஐ.சி.சி. சுழற்சி முறை போட்டிகள் வரையா? என்று தெரியவில்லை.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர் ராவல்பிண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இதை கூறிவிட்டது.

    இந்தியாவின் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்று பாகிஸ்தான் அறிவித்தது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    சமீபத்திய ஐ.சி.சி.யின் கூட்டம் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்தில் மாற்றுவதற்கு (ஹை பிரிட் மாடல்) பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டது. இதை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்கிடையே ஹைபிரிட் மாடலை ஏற்றுக்கொள்ள பாகிஸ்தான் புதிய நிபந்தனை விதித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் தங்களுக்கு உரிய ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என நிபந்தனை விதித்து உள்ளது.

    இதை ஏற்று உறுதியான எழுத்துப்பூர்வமான ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்த நிபந்தனை 3 ஆண்டுகளுக்கா? அல்லது 2031 வரையிலான ஐ.சி.சி. சுழற்சி முறை போட்டிகள் வரையா? என்று தெரியவில்லை.

    இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் 3 ஐ.சி.சி. போட்டிகள் தொடங்குகிறது. 2026 பிப்ரவரியில் 20 ஓவர் உலக கோப்பையை இலங்கையுடன் இணைந்து நடக்கிறது. 2029-ல் சாம்பியன்ஸ் டிராபி, 2031-ல் உலக கோப்பை போட்டிகளை நடத்துகிறது. 

    • இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் போட்டி துபாயில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்தியா தகுதி சுற்றுடன் வெளியேறினால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி முறையே லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும்.

    பாகிஸ்தானில் அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. இந்த தொடர் ஹைபிரிட் மாடலாக நடத்த உள்ளதாக ஐசிசி அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. அதன்படி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும். இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும் துபாயில் நடைபெறும் எனவும் ஐசிசி திட்டவட்டமாக கூறியுள்ளது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இதில் பங்கேற்கின்றனர். இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த தொடரில் இந்தியா தகுதி சுற்றுடன் வெளியேறினால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி முறையே லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும். இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் போட்டி துபாயில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை விவரம்:-

    பிப்ரவரி 19, 2025 2:30 PM கராச்சி பாகிஸ்தான் vs நியூசிலாந்து

    பிப்ரவரி 20, 2025 2:30 PM நடுநிலை பங்களாதேஷ் vs இந்தியா

    பிப்ரவரி 21, 2025 2:30 PM கராச்சி ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா

    பிப்ரவரி 22, 2025 2:30 PM லாகூர் ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

    பிப்ரவரி 23, 2025 2:30 PM நடுநிலை (துபாய்/கொழும்பு) பாகிஸ்தான் vs இந்தியா

    பிப்ரவரி 24, 2025 2:30 PM ராவல்பிண்டி பங்களாதேஷ் vs நியூசிலாந்து

    பிப்ரவரி 25, 2025 2:30 PM ராவல்பிண்டி ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா

    பிப்ரவரி 26, 2025 2:30 PM லாகூர் ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து

    பிப்ரவரி 27, 2025 2:30 PM ராவல்பிண்டி பாகிஸ்தான் vs பங்களாதேஷ்

    பிப்ரவரி 28, 2025 2:30 PM லாகூர் ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா

    மார்ச் 1, 2025 2:30 PM கராச்சி தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து

    மார்ச் 2, 2025 2:30 PM நியூட்ரல் நியூசிலாந்து vs இந்தியா

    மார்ச் 4, 2025 2:30 PM நடுநிலை அரையிறுதி (A1 vs B2)

    மார்ச் 5, 2025 2:30 PM நடுநிலை அரையிறுதி (B1 vs A2)

    மார்ச் 9, 2025 2:30 PM லாகூர் இறுதிப் போட்டி

    • பும்ரா விளையாடும் பட்சத்தில் துணை கேப்டன் பதவி வழங்கப்படாது.
    • உடல் தகுதி பெற்ற முகமது ஷமி அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது.

    அதை தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்துடன் சொந்த மண்ணில் ஐந்து 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. வருகிற 22-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை இங்கிலாந்தில் தொடர் நடக்கிறது.

    அதை தொடர்ந்து இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் 'டிராபி' போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்.

    இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி வருகிற 12-ந்தேதி தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15 பேர் கொண்ட அணியை ஜனவரி 12-ந்தேதிக்குள் அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. இதனால் அன்று அகர்கர் தலைமையிலான தேர்வு குழு வீரர்களை தேர்வு செய்கிறது.

    அணியில் மாற்றம் செய்ய பிப்ரவரி 13-ந்தேதி வரை ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.

    முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் அவர் பந்து வீசவில்லை. இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அவருக்கு இங்கிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வாய்ப்பு இல்லாததால் பும்ரா சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் ஆடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் விளையாடாமல் போனால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். 31 வயதான அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டை வீழ்த்தி சாதித்து இருந்தார். பும்ரா 89 ஒருநாள் போட்டியில் 149 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார். விராட் கோலியும் இடம்பெறுவார். சாம்பியன்ஸ் டிராபி போட்டி அவர்களது எதிர் காலத்தை நிர்ணயிக்கும்.

    பும்ரா விளையாடும் பட்சத்தில் துணை கேப்டன் பதவி வழங்கப்படாது. ஹர்திக் பாண்ட்யா, கே.எல். ராகுலுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. உடல் தகுதி பெற்ற முகமது ஷமி அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது.
    • பேட் கம்மின்ஸ்-க்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானும் இடம் பெற்றுள்ளன. பிப்.19-ந்தேதி கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்கேன் செய்ய உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    வருகிற 29-ந் தேதி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து கம்மின்ஸ் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா பெரிய தொடர்களில் எப்போதும் வெற்றியை பெறக்கூடிய ஒரு அணியாகவே இருக்கிறது.
    • இந்திய அணிக்கு பும்ரா விளையாடாமல் போனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும்.

    கராச்சி:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடரின் முக்கியமாக இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23-ந்தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. முன்னதாக பிப். 20-ந்தேதி வங்க தேசத்தையும், மார்ச் 2-ந்தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற பிரகாச வாய்ப்புள்ளதாக முகமது அமீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணிலும் தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணிலும் பாகிஸ்தான் வீழ்த்திய விதம் வெளிநாடுகளில் அவர்களுடைய பலத்தை காண்பிக்கிறது. அந்த சமீபத்திய செயல்பாடுகளை வைத்து இம்முறை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் கை ஓங்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதே சமயம் இந்தியா பெரிய தொடர்களில் எப்போதும் வெற்றியை பெறக்கூடிய ஒரு அணியாகவே இருக்கிறது.

    ஆனால் இந்திய அணி தங்களுடைய சமீபத்திய மோசமான தோல்விகளால் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து அழுத்தத்திற்குள் தவிக்கிறது. அப்படிப்பட்ட இந்திய அணிக்கு பும்ரா விளையாடாமல் போனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். இந்தியாவுக்கு அவர் சிறந்த பந்துவீச்சாளராக முன்னின்று அணியை வழி நடத்தி வருகிறார். அவர் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் அட்டாக்கின் பலம் 40 - 50 சதவீதமாக குறைந்து விடும்.

    என்று கூறினார்.

    • 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு கருண் நாயர் தேர்வு செய்யப்படுவார் என்று நினைக்கவில்லை.
    • இந்திய ஒருநாள் அணி ஏற்கனவே தயாராக உள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி முடிகிறது. இந்த போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற உள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்.

    இந்த தொடருக்கான அணியை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளை தவிர மற்ற அணிகள் தங்களுடைய அணியை அறிவித்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றனர். அந்த வகையில் விஜய் ஹசாரே டிராபியில் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவருக்கு சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என சமூக வலைதளங்களில் கருத்து வெளியாகி வருகிறது.

    இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபி தொடரில் அதிரடி காட்டி வரும் கருண் நாயர், இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு கருண் நாயர் தேர்வு செய்யப்படுவார் என்று நினைக்கவில்லை. இந்திய ஒருநாள் அணி ஏற்கனவே தயாராக உள்ளது. அதில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை.

    என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

    ×