search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "apologises"

    இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை முன்னர் எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாததற்கு அந்நாட்டு மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது. #SriLankablasts #SriLankaapologises #intelligencetipoff #Easterblasts
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று நாடு முழுவதும் தேசிய துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது. பலியானவர்கள் ஆன்மா சாந்தியடைவதற்காக நாட்டு மக்கள் அனைவரும் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை முன்னர் எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாததற்கு அந்நாட்டு மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.



    ‘இதுதொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. சில தகவல்களும் அளிக்கப்பட்டிருந்தது. நாங்கள் மிக, மிக வருந்துகிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் அமைப்புகளுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது.

    இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீண்டும் கட்டித் தரப்படும்’ என இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும் அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரியுமான ரஜித சேனரத்னே தெரிவித்துள்ளார்.

    முன்னதாக இந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக இலங்கை அரசு நேற்று அறிவித்திருந்தது. இறந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு என தனியாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். #SriLankablasts #SriLankaapologises #intelligencetipoff #Easterblasts
    சர்பிராஸ் அகமதுவின் இனவெறி பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில் தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். #SarfrazAhmed #SAvPAK
    டர்பனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின்போது, பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ப்ராஸ் அகமது, எதிரணி வீரர் பெலக்வாயோவை இனவெறியுடன் விமர்சனம் செய்தார். அவரை நோக்கி, சர்ப்ராஸ் அகமது “ஏய் கருப்பு வீரரே. இன்று உங்கள் அம்மா எங்கு இருக்கிறார். உனக்காக அவர் என்ன பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்’ என்று கூறி சீண்டினார்.

    இதனால் சர்ச்சை கிளம்பிய நிலையில் தனது பேச்சுக்கு சர்ப்ராஸ் அகமது மன்னிப்பு கேட்டுள்ளார். ‘விரக்தியில் நான் வெளிப்படுத்திய வார்த்தைகளை யாரும் தவறாக எடுத்து இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. எனது வார்த்தைகளை எதிரணி வீரர்களோ, கிரிக்கெட் ரசிகர்களோ புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நான் பேசவில்லை’ என்று சர்ப்ராஸ் கூறியுள்ளார். #SarfrazAhmed #SAvPAK
    நான் ஒரு மந்திரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே வருத்தம் தெரிவித்தார். #FuelPriceHike #RamdasAthawale
    மும்பை:

    நாடு முழுவதும் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல். டீசல் விலை குறித்து மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே, ‘நான் ஒரு மந்திரி. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை. மந்திரி பதவியை இழந்தால் நான் விலைஉயர்வால் பாதிக்கப்படலாம்’ என்று நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மந்திரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து ராம்தாஸ் அதவாலே நேற்று வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக மும்பையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பெட்ரோல், டீசல் விலைஉயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை நான் அறிவேன். சாமானிய மக்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை’ என்று கூறியுள்ளார்.  #RamdasAthawale #UnionMinister
    கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக கருத்து கேட்ட பத்திரிகையாளரிடம் எரிந்து விழுந்ததற்காக நடிகர் மோகன் லால் மன்னிப்பு கேட்டார். #Mohanlalapologises #Mohanlaljourno
    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான மோகன் லால் விஸ்வசாந்தி அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். 

    கேரள மாநிலத்தில் பல்வேறு சமூகநலச் சேவைகளில் விஸ்வசாந்தி அறக்கட்டளையின் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியவர்களுக்கான புதிய மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    சமீபத்தில் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தை புனரமைப்பதற்காக  வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் பங்கேற்கும் வட்டமேஜை கருத்தரங்கம் ஒன்றுக்கும் மோகன் லால் ஏற்பாடு செய்தார்.

    கேரள வெள்ள நிவாரணத்துக்கு பொருட்களை அனுப்புவது தொடர்பாக நேற்று விஸ்வசாந்தி அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு மோகன் லால் பேட்டியளித்தார். அந்த பேட்டியின்போது, கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் எரிச்சல் அடைந்த மோகன் லால் அந்த செய்தியாளரை கடிந்து கொண்டார்.

    வெள்ள நிவாரண உதவி செய்வது தொடர்பான உன்னத நோக்கம் பற்றி பேசி கொண்டிருக்கும்போது, இதைப்போன்ற அவசியமற்ற கேள்விகளை கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? வெள்ள நிவாரணத்துக்கும் கன்னியாஸ்திரி புகாருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்று மோகன் லால் எதிர் கேள்வி கேட்டார். 

    இந்த விவகாரம் செய்தியாக வெளியானதும் சமூக வலைத்தளங்களில் மோகன் லாலுக்கு எதிராக பலர் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டனர். 
        
    இதைதொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக மோகன் லால் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளார். சமயம் அறியாமல் அந்த பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வி தன்னை கோபப்படுத்தியதாக அவர் குறிப்பிடுள்ளார்.

    ‘அந்த செய்தியாளர் கேட்ட கேள்வி கேரள மாநிலத்தில் தற்போது மிகுந்த பரபரப்புக்குள்ளான ஒரு விவகாரம் தொடர்பானதுதான். ஆனால், அப்போது அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் மனநிலையில் நான் இல்லை. நான் வேறொரு மனநிலையில் இருந்ததால் நிருபருக்கு அப்படி பதில் அளிக்க நேர்ந்தது.

    ஒரு நிறுவனத்தையோ, பத்திரிகையாளர்களையோ, தனிநபரையோ அவமதிக்கும் வகையில் நான் அப்படி பதில் அளிக்கவில்லை. எனது பதிலால் அந்த கேள்வியை எழுப்பியவரின் மனம் காயப்பட்டிருந்தால், தயவு செய்து என்னை உங்களது மூத்த சகோதரராக நினைத்து எனது மன்னிப்பை ஏற்குமாறு கேட்டு கொள்கிறேன்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். #Mohanlalapologises #Mohanlaljourno
    நாடாளுமன்ற மக்களவையில் திருநங்கையரை பற்றி ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டார். #ManekaGandhi #OtherOnes #Transgender
    புதுடெல்லி:

    மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, நாடாளுமன்ற மக்களவையில், ஆள் கடத்தல் தடுப்பு மசோதா பற்றிய விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது, திருநங்கையரை பற்றி ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டார். அதற்கு எம்.பி.க்களிடையே சிரிப்பொலி எழுந்தது.

    ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டதற்காக, மேனகா காந்திக்கு திருநங்கைகள் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேஜையை தட்டியபடி சிரித்த மேனகா காந்தியும், எம்.பி.க்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

    இந்நிலையில், மேனகா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “மற்றொருவர் என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். நான் சிரிக்கவில்லை. திருநங்கைகள் பற்றிய அதிகாரபூர்வ சொல் எனக்கு தெரியாது. அதுவே எனக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கி விட்டது. இனிமேல், அதிகாரபூர்வ தகவல் தொடர்பில், திருநங்கையர் ‘டி.ஜி.’ என்று குறிப்பிடப்படுவார்கள்” என்று கூறியுள்ளார். #ManekaGandhi #OtherOnes #Transgender #Tamilnews
    சாலை திறப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியாக்கு அழைப்பு விடுக்காமல் இருந்த செயலுக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி மன்னிப்பு கேட்டார். #NitinGadkari #JyotiradityaScindia
    புதுடெல்லி:

    மத்தியபிரதேச மாநிலத்தின் குணா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா. சமீபத்தில் இவருடைய தொகுதியில் நெடுஞ்சாலை ஒன்று மாநில அரசால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சாலை திறப்புவிழாவில் பங்கேற்க அந்த தொகுதி எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியாக்கு அழைப்பு விடுக்காமலும், அவருடைய பெயரை கல்வெட்டில் இருந்து நீக்கியும் அவமதித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தின் போது எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியா இதுதொடர்பாக பிரச்சினை எழுப்பினார். அப்போது மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர விரும்புவதாக அவர் கூறினார். இதற்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்து பேசினார். அப்போது அவர், “நான் அந்த சாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டதால், இந்த பிரச்சினைக்கு பொறுப்பேற்கிறேன். அதோடு இந்த சம்பவத்துக்காக எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்பட அனைவரிடம் மன்னிப்பு கோருகிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிச்சயமாக நிகழாது” என கூறினார்.  #NitinGadkari #JyotiradityaScindia #tamilnews
    பிரியங்கா சோப்ரா நடிக்கும் குவான்டிகோ சீரியலில் இந்தியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் காட்சி இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
    வாஷிங்டன்:

    பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா குவான்டிகோ என்ற அமெரிக்க தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவர் சி.ஐ.ஏ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

    மிகவும் பிரபலமான இந்த சீரியலில் சமீபத்தில் வெளியான ஒரு எபிசோடில், இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாகிஸ்தானியர் போல நடித்து நியூயார்க் நகரில் அணு குண்டை வெடிக்க சதி செய்வது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த காட்சிக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. சமூக வலைதளங்களில் சீரியலை பலர் காரசாரமாக விமர்சிக்க வேறு வழியின்றி சீரியல் தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. 
    இந்திய ரெயில்வே குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக ரெயில்வேயிடம் பாலிவுட் நடிகை ஷாபனா ஆஸ்மி மன்னிப்பு கேட்டுள்ளார். #ShabanaAzmi
    புதுடெல்லி:

    பாலிவுட் நடிகையும், சமூக சேவைகியுமான ஷாபனா ஆஸ்மி நேற்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் மூன்று பேர் மிகவும் அழுக்கான நீரில் பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தனர். 

    அவர்கள் ரெயில்வே ஊழியர்கள் எனவும், அந்த வீடியோவை ரெயில்வே துறை மந்திரி பியூஸ் கோயல் கவனத்தை ஈர்க்கும் வகையில் 'டாக்' செய்திருந்தார். 67 ஆயிரம் பேர் பார்வையிட்டு சுமார் ஆயிரம் பேர் ரீடுவிட் செய்த அந்த வீடியோ வைரலாக பரவியது.

    அந்த வீடியோ பார்த்து அதற்கு விளக்கம் அளித்த ரெயில்வே துறை மந்திரி, 'இந்த வீடியோவில் இருப்பது மலேசியாவில் உள்ள ஒரு உணவகம். அங்குள்ள ஊழியர்கள் அசுத்தமான நீரில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்கின்றனர்' என குறிப்பிட்டிருந்தார்.

    இதனை கண்ட ஆஸ்மி உடனடியாக ரெயில்வே துறையிடம் மன்னிப்பு கேட்டார். அதில், இது குறித்து விளக்கம் அளித்ததற்கு நன்றி. எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என டுவிட் செய்தார்.

    ஷாபனா பாலிவுட் நடிகையாக மட்டுமல்லமால் பல சமூக சேவைகளையும் புரிந்துள்ளார். 1989-ம் ஆண்டு முதல் தேசிய ஒருமைப்பாட்டு குழுவின் உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், 1998-ம் ஆண்டு இந்தியாவின் நல்லெண்ண தூதராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ShabanaAzmi

    ×