எம்.ஜி.ஆர். குறித்த பேச்சுக்கு மன்னிப்புக் கோரினார் நடிகர் ராஜேந்திர பிரசாத்!

நாசர் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த தவறை மீண்டும் செய்யமாட்டேன் என உறுதியளிக்கிறேன்
எம்.ஜி.ஆர். குறித்த பேச்சுக்கு மன்னிப்புக் கோரினார் நடிகர் ராஜேந்திர பிரசாத்!
Published on

அண்மையில் தெலுங்கு நடிகர் காந்தா ராவ்வின் நினைவு விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், காந்தா ராவின் வாள் சண்டை மற்றும் நடிப்பைப் பார்த்து எம்.ஜி.ஆர் பயந்ததாகவும், "காந்தா ராவைப் பார்த்தாலே எம்.ஜி.ஆர் தன் பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்து விடுவார்" என்ற பொருளில் பேசியிருந்தார்.

இவரின் இந்தக் கருத்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், இதுதொடர்பாக ராஜேந்திர பிரசாத் மனிதிலிருந்து மன்னிப்புக் கோரவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் ராஜேந்திர பிரசாத் மன்னிப்புக் கோரியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவின் கடவுள் போன்றவர். காந்த ராவ் சாரை புகழ்ந்து பேசும்போது, நான் தவறுதலாக எம்ஜிஆர் சாரை பற்றி ஒரு ஆட்சேபகரமான வார்த்தையைப் பயன்படுத்தினேன். இதற்காகத் தமிழ் மக்களிடமும் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடமும் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த தவறை மீண்டும் செய்யமாட்டேன் என உறுதியளிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com