search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former India skipper Sourav Ganguly"

    கிரிக்கெட் போட்டியை பொறுத்தமட்டில் கேப்டன்தான் முக்கியமான நபர். பயிற்சியாளருக்கு பின் சீட்டுதான் என கங்குலி தெரிவித்துள்ளார். #Ganguly
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இடது கை பேட்ஸ்மேனும், தற்போதைய மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் ஆன சவுரவ் கங்குலி ‘A Century is not Enough’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

    இந்த புத்தகத்தின் வெளியிட்டு விழா சிம்பியோசிஸ் இன்டர்நேஷனலில் நடைபெற்றது. அப்போது கங்குலி கூறுகையில் ‘‘கிரிக்கெட் கால்பந்து போட்டி போன்றது அல்ல.



    தற்போதுள்ள பெரும்பாலான பயிற்சியாளர்கள் கால்பந்தை பயிற்சியாளர்கள் இயக்குவது போல் இயக்கலாம் என்ற நினைப்பில் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், கிரிக்கெட் கேப்டன்களின் விளையாட்டு. பயிற்சியாளர் பின் சீட்டில்தான் இருக்க வேண்டும். இதுதான் முக்கியமானது’’ என்றார்.
    ×