search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்சிலோனா"

    • அங்கு இடம்பெற்றிருக்கும் நுணுக்கமான கலை வடிவங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
    • இந்த கட்டிடம் பார்சிலோனா நாட்டில் அமைந்திருக்கிறது.

    பழங்கால கட்டுமானங்கள் பல ஆண்டுக்கணக்கில் கட்டப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். அவற்றை எப்படி கட்டி இருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது. அதில் இடம்பெற்றிருக்கும் நுணுக்கமான கலை வடிவங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதனை பார்வையிடும் பலரும் எப்படித்தான் இப்படி கலை வேலைப்பாடுகளை செய்திருப்பார்களோ என்று வியப்பில் ஆழ்ந்து போவார்கள். எத்தனை ஆண்டுகளாக கட்டி இருப்பார்கள் என்று யூகிப்பார்கள்.

    ஆனால் நூற்றாண்டுகளை கடந்தும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. பழமை மாறாமல் அந்த கட்டுமானத்தை நிர்மாணிக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஆண்டுக்கணக்கில் கட்டுமானம் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது.

    அந்த கட்டிடம் பார்சிலோனா நாட்டில் அமைந்திருக்கிறது. அது தேவாலயமாக எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. சாக்ரடா பேமிலியா கதீட்ரல் எனப்படும் அந்த தேவாலயத்தின் கட்டுமானப்பணி 1881-ம் ஆண்டு தொடங்கி இருக்கிறது. கட்டிடக் கலைஞர் ஆண்டனி கவுடி என்பவர் இந்த கட்டுமானத்திற்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார். உலகமே வியந்து பார்க்கும் வகையிலான பிரமாண்டமாக, கலை வேலைப்பாடுகள் கொண்ட கட்டிடமாக அமைய வேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கிறார். அதற்காக ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்.

    கட்டுமான வரைபடம் தயாரிப்பதற்கு மட்டுமே சுமார் 10 ஆண்டுகாலம் செலவிட்டிருக்கிறார். அவர் எதிர்பார்த்தபடியே கட்டுமான வரைபடம் அமைய, உற்சாகமாக பணியை தொடங்கி இருக்கிறார். ஆனால் இப்போது போல் கட்டுமான தொழில்நுட்பட்பம் அந்த காலத்தில் இல்லை என்பதால் கட்டுமான பணி மெதுவாக நடந்திருக்கிறது. அவர் எதிர்பார்த்தபடி கட்டுமானத்தில் ஒரு பகுதி கூட நிறைவடையாத நிலையில் 1926-ம் ஆண்டு ஆண்டனி கவுடி உயிரிழந்துவிட்டார்.

    அதனால் கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்டது. அங்கு நடைபெற்ற உள்நாட்டு போரும் கட்டுமான பணியை பாதிப்புக்குள்ளாகிவிட்டது. போரின்போது கட்டுமான வரைபடத்தை சிதைத்துவிட்டார்கள். அதனால் ஆண்டனி கவுடி திட்டமிட்டபடி கட்டுமானத்தை எழுப்புவது சவாலாக மாறியது. அவர் ஏற்படுத்தி கொடுத்த அடித்தள கட்டுமானத்தின் அடிப்படையில் கட்டுமான பணிகளை செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

    கட்டுமானத்திற்கு நிதி கிடைப்பதில் ஏற்பட்ட சுணக்கமும் தாமதத்தை அதிகப்படுத்திவிட்டது. இப்போது உலகின் பல பகுதிகளில் இருந்தும் நிதி குவிந்து கொண்டிருக்கிறது. நவீன கட்டுமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழமை மாறாமல் கட்டுமானத்தை எழுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆண்டனி கவுடி தேவாலயத்தின் முகப்பு பகுதிகளை நுணுக்கமான வேலைப்பாடுகளால் அலங்கரித்துவிட்டார். தேவாலயத்திற்குள் நுழைவதற்கு 3 நுழைவு வாயில்கள் அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தார். அவற்றுள் இரண்டு நுழைவு வாயில் பகுதிகள் அமைக்கப்பட்டுவிட்டன. மூன்றாவது நுழைவு வாயில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தேவாலய கட்டுமான பணி 2026-ம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கட்டுமான பணி முடிவடையும்போது இது உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறும்.

    ஆண்டனி கவுடி, தேவாலயம் 18 பெரிய, சுழல் வடிவ கோபுரங்களை கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். 12 அப்போஸ்தலர்கள், 4 சுவிசேஷகர்கள், கன்னி மேரி மற்றும் இயேசு என ஒவ்வொரு கோபுரத்திலும் வெவ்வேறு உருவங்கள் இடம் பெற வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அதன்படியே கட்டுமானம் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    நான்கு சுவிசேஷ கோபுரங்களும் 135 மீட்டர் உயரம் (சுமார் 443 அடி) கொண்டிருக்கின்றன. 138-மீட்டர் (453-அடி) உயரம் கொண்ட கன்னி மேரியின் கோபுரத்தின் மேல் 12 ஸ்டார்கள் கொண்ட பெரிய நட்சத்திரம் வடிவமைக்கப்பட்டது. இந்த கோபுர கட்டுமானப்பணி 2021-ம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது.

    இயேசு கிறிஸ்துவை குறிக்கும் கோபுரம் 172.5 மீட்டர் (566 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். 1984-ம் ஆண்டில், இந்த கட்டிடம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துவிட்டது. 2010-ம் ஆண்டு வழிபாட்டிற்காக பதினைந்தாம் போப் பெனடிக்ட்டால் புனிதப்படுத்தப்பட்டது. இந்த தேவாலயத்தையும், அதன் கட்டுமான பணியையும் காண்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    • பி.எஸ்.ஜி. அணிக்காக 57 போட்டிகளில் 22 கோல்கள் அடித்துள்ளார்
    • இரண்டு சீசனோடு பிஎஸ்ஜி-யில் இருந்து வெளியேறுகிறார்

    கால்பந்து, அர்ஜென்டினா என்றாலே நினைவுக்கு வரும் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் மெஸ்சி. பார்சிலோனா அணிக்காக நீண்ட காலம் விளையாடிய அவர், திடீரென பி.எஸ்.ஜி. (paris saint-germain fc) அணிக்கு மாறினார். 2021-ல் இருந்து பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.

    இதுவரை 57 போட்டிகளில் விளையாடி 22 கோல்கள் அடித்துள்ளார். பிஎஸ்ஜி அணியில் இருந்து மெஸ்சி வெளியேற வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

    இந்த நிலையில் பிஎஸ்ஜி அணி நாளை மறுதினம் சனிக்கிழமை கிளெர்மோன்ட் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதுதான் மெஸ்சி பிஎஸ்ஜி அணிக்காக விளையாடும் கடைசி போட்டி என அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டோபர் கால்டியர் தெரிவித்துள்ளார்.

    பார்சிலோனா அணிக்காக மெஸ்சி 474 போட்டிகளில் விளையாடி 520 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பார்சிலோனா அணி நிர்வாகத்திடம், மீண்டும் பார்சிலோனாவில் விளையாட தங்களுக்கு விருப்பம் இருந்தால் 10 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என மெஸ்சி தெரிவித்ததாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

    மெஸ்சி மீண்டும் அணிக்கு திரும்புவதை பார்சிலோனா மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கும் நிலையில், அவர்களின் நிதி அமைப்பு சிக்கலாக இருக்கும் எனத் தெரிகிறது.

    ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து காலிறுதியின் முதல் லெக்கில் பார்சிலோனா, டோட்டன்ஹாம், லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றன. #UCL
    ஐரோப்பா நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெறும். 2018-19 சீசனில் பார்சிலோனா, யுவான்டஸ், அஜாக்ஸ், போர்ட்டோ, மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, டோட்டன்ஹாம், லிவர்பூல் காலிறுதிக்கு முன்னேறின.

    காலிறுதியின் முதல் லெக் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. மான்செஸ்டர் யுனைடெட் - டோட்டன்ஹாம் இடையிலான ஆட்டத்தில் டோட்டன்ஹாம் 1-0 என வெற்றி பெற்றது.



    லிவர்பூல் - போர்ட்டோ இடையிலான ஆட்டத்தில் லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்றது. யுவான்டஸ் - அஜாக்ஸ் இடையிலான ஆட்டம் 1-1 என டிரா ஆனது. பார்சிலோனா - மான்செஸ்டர் யுனைடெட் இடையிலான ஆட்டத்தில் பார்சிலோனா 1-0 என வெற்றி பெற்றது.
    லா லிகா கால்பந்து தொடரில் மெஸ்சியின் 51-வது ஹாட்ரிக் கோலால் ரியல் பெட்டிஸ் அணியை 4-1 என வீழ்த்தியது பார்சிலோனா. #Laliga #Messi
    லா லிகா கால்பந்து தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - ரியல் பெட்டிஸ் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஆட்டத்தின் 18-வது நமிடத்தில் ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை பதிவு செய்தார். முதல் பாதி நேரம் முடிவடைவதற்கு சற்று முன் (45+2) 2-வது கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் மற்றொரு நட்சத்திர வீரர் சுவாரஸ் கோல் அடித்தார். 82-வது நிமிடத்தில் ரியல் பெட்டிஸ் அணியின் லோரென் மொரோன் கோல் அடித்தார். மெஸ்சி 85-வது நிமிடத்தில் 3-வது கோல் அடித்தார்.

    இதனால் பார்சிலோனா 4-1 என வெற்றிபெற்றது. மெஸ்சி இந்த போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் தனது 51-வது ஹாட்ரிக்கை பதிவு செய்துள்ளார்.
    கோபா டெல் ரே கோப்பைக்கான காலிறுதி ஆட்டத்தின் முதல் லெக்கில் பார்சிலோனாவை 2-0 என வீழ்த்தியது செவியா. #Barcelona
    கோபா டெல் ரே கோப்பைக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - செவியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணியும் அவரவர் சொந்த மைதானத்தில் தலா ஒருமுறை மோத வேண்டும். இரண்டு போட்டிகளில் எந்த அணி அதிக கோல் அடித்துள்ளதோ, அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    அதன்படி பார்சிலோனா - செவியா இடையிலான முதல் லெக் செவியாவிற்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் செவியா 2-0 என வெற்றி பெற்று பார்சிலோனாவிற்கு அதிர்ச்சி அளித்தது.

    ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் செவியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் பப்லோ சராபியா 58-வது நிமிடத்திலும், விஸ்சாம் பென் யாட்டர் 76-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.



    பார்சிலோனா தொடர்ந்து நான்கு முறை கோபா டெல் ரே கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருந்த பார்சிலோனாவிற்கு செவியா முட்டுக்கட்டை போட்டுள்ளது.

    பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறும் 2-வது லெக்கில் செவியாவிற்கு எதிராக மூன்று கோல் அடித்தால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பார்சிலோனா உள்ளது.
    ×