search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sold"

    • மார்க்கெட்டுகளுக்கு வரத்து அதிகரிப்பால் மதுரையில் 10 ரூபாய்க்கு தக்காளி விற்பனையாகும்.
    • வெங்காயம் விலையும் வீழ்ச்சி அடைந்தது.

    மதுரை

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் காய்கறி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று அறுவடை பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

    நாட்டு காய்கறிகளான தக்காளி, கத்தரி, வெண்டை, பாகற்காய், மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக விளைச்சல் காரணமாக மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் வருகிறது. நாட்டு காய்கறிகள் அதிக வரத்து காரணமாகவும், முகூர்த்த நாள் இல்லாததாலும் காய்கறிகளின் விற்பனை மந்தமாக உள்ளது. மேலும் காய்கறிகளின் விலை வழக்கமான விலையை விட குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சில மாதங்களுக்கு முன்பு மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோவுக்கு ரூ.140 முதல் 160 வரை விற்கப்பட்டன. அப்போது தக்காளியை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    அதன் பிறகு படிப்படியாக வரத்து அதிகரித்ததால் தக்காளியின் விலையும் குறைந்தது. கடந்த வாரம் ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்றைய நிலவரப்படி ரூ.10-க்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதனை வாங்க பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    விலை வீழ்ச்சி காரணமாக பல்வேறு இடங்களில் தக்காளி பறிப்பதில் விவசாயிகளுக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் செடிகளிலேயே தக்காளியை அழுக விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் மார்க்கெட் களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் தக்காளியும் மாலை நேரங்களில் வீடு திரும்பும் போது சில வியாபாரிகள் குப்பைத்தொட்டியில் கொட்டும் அவலமும் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    விலை வீழ்ச்சி காரணமாக தக்காளி மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல சிறிய வெங்காயம், பல்லாரி ஆகியவற்றின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

    மதுரை மார்க்கெட்டுகளில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.100-க்கு மேல் விற்கப்பட்ட பல்லாரி மற்றும் சிறிய வெங்காயம் தற்போது கிலோ 15 முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மற்ற காய்கறிகளான கத்தரி கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 20 ரூபாய்க்கும், முட்டைகோஸ் 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 40 ரூபாய்க்கும், கேரட் 30 ரூபாய்க்கும், பீன்ஸ் 70 ரூபாய்க்கும், புடலங்காய் 20 ரூபாய்க்கும், மிளகாய் 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 20 ரூபாய்க்கும், மல்லி 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இஞ்சி 60 ரூபாய்க்கும், கறிவேப்பிலை 30 ரூபாய்க்கும் விற்பனை–யாகிறது. மலை காய்கறி–களான பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ், பட்டாணி ஆகியவை 100 முதல் 110 ரூபாய் வரை விற்பனையாகிறது.

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் பி. எஸ்.முருகன் கூறுகையில், தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளன. ஒரு சில நாட்களில் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்றார்.

    • வீடு விற்பனை செய்வதற்காக கோவையைச் சேர்ந்த தரகரை அணுகினர்.
    • தரகர் பெயருக்கு பவர் எழுதிக் தரப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமா கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(வயது 53). இவரது மனைவி மல்லிகா(48) .இந்த நிலையில் முத்துசாமியின் தாயார் அருக்காணி அம்மாள் அவருக்கு சொந்தமான வீட்டை முத்துசாமி பெயரில் எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக முத்துசாமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

    இதனால், வீட்டை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து மருத்துவ செலவுகளை செய்து கொள்ளலாம் என குடும்பத்தார் முடிவு செய்து, வீடு விற்பனை செய்வதற்காக கோவையைச் சேர்ந்த தரகர் கோபிநாத் என்பவரை அணுகினர். கோபிநாத் தனது பெயரில் பவர் எழுதிக் கொடுத்தால் உடனடியாக விற்றுத் தருகிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெயருக்கு பவர் எழுதிக் தரப்பட்டது. இதன் பின்னர் பலமுறை கோபிநாத்தை தொடர்புகொண்டபோது அவர் சரியான பதில் கூறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டின் பத்திரத்திற்கு வில்லங்க சான்று போட்டு பார்த்த போது, கோபிநாத், முத்துசாமிக்கு சொந்தமான வீட்டை ரூ. 35 லட்சம் ரூபாய்க்கு சத்யன் என்பவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த பத்திரப்பதிவு மோசடிக்கு முத்துசாமிக்கு உடல்நிலை சரியில்லை என போலியான மருத்துவ சான்றிதழ் தயாரித்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து முத்துசாமி குடும்பத்தினர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகார் திருப்பூர் மாவட்ட நில மோசடி புகார் பிரிவுக்கு மாற்றப்பட்டு இந்த மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    தஞ்சையில் அதிகாலையில் மதுக்கடையை திறந்து கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் பாலாஜி நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இந்தக்கடை சாலையோரமாக, குடியிருப்பு பகுதிகளின் அருகாமையில் செயல்பட்டு வருகிறது.

    நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த கடை அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று மதியம் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டிய மதுக்கடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த கடையில் தினமும் காலையில் உள்ளே சிலர் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தனர்.இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் . அந்த வழியாக நடந்து செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது,

    இந்த மதுக்கடையில் தொடர்ந்து கள்ளத்தனமாக மது விற்கப்படுகிறது. இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். அதிகாலை நேரத்தில் கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பிளேபாய் கவர்ச்சி பத்திரிகை நிறுவனர் ஹெப்னரின் 14 காரட் ‘வயாகரா’ தங்க மோதிரம் 22 ஆயிரத்து 400 டாலருக்கு விலை போனது. #PlayBoy #GoldViagra #Hefner
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    உலகின் முன்னணி கவர்ச்சி பத்திரிகையான ‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் ஹியூ ஹெப்னர். சொகுசான ஒரு வாழ்க்கையை நடத்தி வந்த இவர், கடந்த ஆண்டு, தனது 91-வது வயதில் மரணம் அடைந்து விட்டார்.

    இந்த நிலையில் அவர் பயன்படுத்தி வந்த பொருட்கள், சாதனங்கள் மட்டுமல்லாது ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் ஆகியவை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஜூலியன் நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.அவற்றை அவரது ரசிகர்கள் அதிக தொகை கொடுத்து மகிழ்ச்சியுடன் வாங்கி குவித்திருக்கிறார்கள். இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ:-

    ஹாலிவுட் கவர்ச்சிப்புயல் மர்லின் மன்றோவின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்த ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் பிரதி 31 ஆயிரத்து 250 டாலருக்கு விற்பனையானது. (ஒரு டாலரின் மதிப்பு சுமார் ரூ.70).

    ‘வயாகரா’ மாத்திரையை மறைத்து வைத்து, தயாரிக்கப்பட்டிருந்த ஹெப்னரின் 14 காரட் தங்க மோதிரம், 22 ஆயிரத்து 400 டாலருக்கு விலை போனது.

    ஹெப்னர், ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் கட்டுரைகளை தட்டச்சு செய்வதற்கு பயன்படுத்திய தட்டச்சு எந்திரம், 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 டாலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

    அவர் புகை பிடிக்கும் போது பயன்படுத்திய மேலாடை உள்ளிட்ட நிறைய பொருட்களை அவரது ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கிறார்கள். #PlayBoy #GoldViagra #Hefner
    சீன பட்டாசுகளை விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். #ADMK #TNMinister #KCKaruppannan #ChinaCrackers
    அந்தியூர்:

    தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் அந்தியூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க பெருவாரியான இடத்தில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் செயல்படுவது எப்படி என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை புகையில்லா தீபாவளியாக கொண்டாட அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. சீன பட்டாசுகளை அரசு கட்டுப்படுத்தியிருக்கிறது. தெரியாமல் யாரும் விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னையை பொருத்தவரை நடமாடும் காற்று கண்காணிப்பு மையம் உள்ளது. இதன் மூலம் மாசு மற்றும் புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும், அரசு சார்பில் விபத்தில்லா தீபாவளிக்காக கொடுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்களுக்கு இது குறித்து தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #KCKaruppannan #ChinaCrackers
    மதுரை அருகே போதை மாத்திரைகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள புதுநத்தம் ரோடு, ஆத்திக்குளம் சந்திப்பில் 2 பேர் போதை மாத்திரைகள் விற்பதாக தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்களிடம் 2 ஆயிரத்து 889 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போதை மாத்திரைகள் விற்றதாக ஊமச்சிக்குளம் முத்துராமலிங்கம் தெருவைச் சேர்ந்த ராஜா (வயது 43), அய்யர்பங்களா விசாலாட்சி நகர் பாண்டி யன் (48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    புதிய பாடத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கியது.
    சென்னை:

    புதிய பாடத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கியது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் இந்த கல்வியாண்டுக்கு முதல்கட்டமாக 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த பாடநூல்கள் சிறந்த வல்லுநர்களால் மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளத்தக்க வகையில் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் பக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குயிக் ரெஸ்பான்ஸ் (கியூ.ஆர்.கோடு) போன்ற சிறப்பு அம்சங்களுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

    பாடநூல்கள் வழக்கமாக அச்சிட பயன்படுத்தப்படும் மேப் லித்தோ தாளுக்கு பதிலாக தரம் உயர்ந்த எலிகண்ட் தாள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 11-ம் வகுப்பு பாடநூல்கள் 60 ஜி.எஸ்.எம். தாளில் ஒரு வண்ண அச்சுக்குப் பதிலாக, 80 ஜி.எஸ்.எம். தாளில் 4 வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளன. மேலட்டைகள் சிறந்த முறையில் அச்சிடப்பட்டு லேமினேஷன் செய்து புதுப்பொலிவுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.

    புதிய பாடத்திட்டத்தின்படி தயார் செய்யப்பட்டுள்ள 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்குரிய விலையில்லா பாடநூல்கள், பள்ளி திறக்கும் அன்றே மாணவ-மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 11-ம் வகுப்புக்கான பாடநூல்கள் ஜூன் 2-வது வாரத்தில் விற்பனை தொடங்கப்பட உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்றவாறு விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    1, 6, 9-ம் வகுப்பு பாடநூல்கள் ஆன்லைனில் ( www.textbookonline.tn.nic.in) விற்பனை தொடங்கியுள்ளது என்றும் மேலும் டி.பி.ஐ. வளாகத்திலும் புதிய பாடப்புத்தகங்கள் கிடைக்கும் என்றும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக அதிகாரி ஜெகன்நாதன் தெரிவித்துள்ளார். 
    ×