என் மலர்

    செய்திகள்

    ஆத்திகுளத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது
    X

    ஆத்திகுளத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரை அருகே போதை மாத்திரைகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள புதுநத்தம் ரோடு, ஆத்திக்குளம் சந்திப்பில் 2 பேர் போதை மாத்திரைகள் விற்பதாக தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்களிடம் 2 ஆயிரத்து 889 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போதை மாத்திரைகள் விற்றதாக ஊமச்சிக்குளம் முத்துராமலிங்கம் தெருவைச் சேர்ந்த ராஜா (வயது 43), அய்யர்பங்களா விசாலாட்சி நகர் பாண்டி யன் (48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    Next Story
    ×