search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "self immolation"

    தஞ்சையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிபட்டி அருகே உள்ள அய்யன் திருவள்ளுவர் நகரைச் சேரந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி முத்துமாரி (வயது 40). மனநிலை பாதிக்கப்பட்டவர்.

    இந்தநிலையில் நேற்று முத்துமாரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென மண்எண்ணெய்யை எடுத்து ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

    இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியாங்குப்பத்தில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்தவர் சார்லஸ். இவர் சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது28). இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக சரண்யா எதையோ பறிகொடுத்தது போல் விரக்தியுடன் இருந்து வந்தார். அவருக்கு சார்லஸ் ஆறுதல் கூறி சில நாட்களில் அனைத்தும் சரியாகிவிடும் என்று சமாதானபடுத்தி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சரண்யா வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். உடல் முழுவதும் தீபரவியதால் வலி தாங்காமல் சரண்யா அலறினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து சரண்யாவை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சரண்யா பரிதாபமாக இறந்து போனார்.

    இதகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போச்சம்பள்ளி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஏ.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மலர் (வயது 30). 
    கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்தது வந்தது தெரியவந்தது. கடந்த மாதம் 18-ந் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மலர் வீட்டில் தனியாக இருந்தபோது மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். 

    இதில் உடல் முழுவதும் தீ பரவியது. இதனால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மலரை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    அங்கு சிகிச்சை பெற்ற இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கடை அருகே வீட்டில் தனியாக இருந்த பட்டதாரி பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    புதுக்கடை அருகே உள்ள கிள்ளியூர் வாழபழஞ்சிவிளையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவரது பக்கத்து வீட்டில் 22 வயது இளம்பெண் வசிக்கிறார். எம்.ஏ. பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. நேற்று இவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது ராஜேஷ் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தார். திடீரென அவர் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து செக்ஸ் தொல்லை கொடுத்தார். இதனால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனே ராஜேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அந்த பகுதியினர் அங்கு கூடினர். ராஜேசின் செயல், அந்த பெண்ணுக்கு வேதனையை ஏற்படுத்தியது. இதனால் மனம் உடைந்த பெண், உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் இளம்பெண்ணிடம் நாகர்கோவில் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார். அவரிடம் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜேஷ் எனக்கு அண்ணன் முறையாவார். நேற்று எனது பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டுக்கு வந்தார். சுத்தியல் வேண்டும் என என்னிடம் கேட்டார். எனது வீட்டில் டி.வி. சரியாக தெரியாததால் அதனை சரி செய்து தரும்படி அவரிடம் கூறினேன். அப்போது திடீரென அவர் என் மீது பாய்ந்து எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். இதனால் ஏற்பட்ட மனவேதனையில் நான் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    அதன்பேரில் புதுக்கடை போலீசார் ராஜேஷ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    ஆம்பூரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 4 குழந்தைகளின் தந்தை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் 2-வது தார்வழி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் பிரபு (வயது 35) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கீதா 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரபு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார். ஆம்பூர் டவுன் போலீசார் உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    4 குழந்தைகளின் தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மகள் மாயமானது குறித்து ஊரார் தவறாக பேசிவிடுவார்களோ என்று எண்ணி கட்டிட தொழிலாளி தீக்குளித்து இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பர்வதனஅள்ளி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 38). கட்டிடதொழிலாளி. இவரது மனைவி விமலாராணி (31). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன அவர்கள் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    கடந்த 11-ந்தேதி அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டார். தனது மகள் மாயமாகி மீண்டும் திரும்பி வந்ததால் ஊரார் ஏளனமாக பேசி விடுவார்களோ என்று கந்தசாமி மிகவும் மனவருத்தத்துடன் காணப்பட்டார்.

    நேற்று மகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படுவதாக பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது. விமலாராணி தனது கணவரிடம் பள்ளிக்கு சென்று சான்றிதழை வாங்கி வருமாறு கூறினார். அதற்கு அவர் நான் வீட்டிலேயே இருக்கிறேன். நீ பள்ளிக்கு சென்று சான்றிதழை வாங்கி வா என்று கூறி விமலா ராணியை அனுப்பி வைத்தார்.

    உடனே விமலாராணி பள்ளிக்கு சென்று சான்றிதழை வாங்கி கொண்டு திரும்பி வந்தார். அப்போது அங்கு உடலில் மண்எண்ணையை ஊற்றி கொண்டு கையில் தீப்பெட்டியுடன் கந்தசாமி நின்று கொண்டிருந்தார். இதனை கண்ட விமலா ராணி வேண்டாம் என்று கதறினார். அதற்குள் அவர் உடலில் தீவைத்துக் கொண்டார். 

    இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியதால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கந்தசாமியை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகள் மாயமானது குறித்து ஊரார் தவறாக பேசிவிடுவார்களோ என்று எண்ணி கட்டிட தொழிலாளி தீக்குளித்து இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றையொட்டி ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றங்கரையில் ஏராளமான வீடுகள் உள்ளன.

    தற்போது மழை காலம் நெருங்குவதையடுத்து அடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றையொட்டி ஆக்கிரமித்து கட்டியிருந்த 47 வீடுகளை அகற்ற கடந்த மாதம் பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். அவர்களுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டது.

    ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது வீட்டை காலி செய்யாமல் அங்கேயே தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் வந்தனர். அவர்கள் பொருட்களை அப்புறப்படுத்தி வீடுகளை இடித்து அகற்றினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க போவதாக கூறி திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றினார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    வீட்டுக்குள் அவரது மனைவியும், 2 குழந்தையும் இருந்தனர். அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து கர்ணனையும், அவரது குடும்பத்தையும் மீட்டனர்.

    பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதில் பெரும் பரபரப்பு எற்பட்டது.

    தொடர்ந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. தீக்குளிக்க முயன்ற கர்ணனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    புவனகிரி அருகே விபத்தில் தம்பி சிக்கியதில் மயக்க நிலையில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த முட்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 45). இவரது தம்பி மணிவேல். இவர் விபத்து ஒன்றில் சிக்கி மயக்கநிலையில் வீட்டில் இருந்து வருகிறார்.

    ராஜலட்சுமி சாத்தப்பாடியில் உள்ள தனது தம்பி வீட்டுக்கு சென்று அவரை பார்த்தார். அதன் பின்பு அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் யாரிடமும் பேசாமல் மனவேதனையுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ராஜலட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    உடலில் தீ பிடித்ததும் கூச்சல்போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ராஜலட்சுமி இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கியில் குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த கூகனூர்குடியிருப்பைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சுமித்ரா(வயது 20). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த  நிலையில் கடந்த மாதம் 15-ந்தேதி தங்கவேலு விற்கும், சுமித்ராவிற்கும் இடையே குடும்பதகராறு ஏற்பட்டதாக    கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த சுமித்ரா தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். 

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுமித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சுசீந்திரம் அருகே நோய் குணமாகாததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நாகர்கோவில்:

    சுசீந்திரம் அக்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (வயது46). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் செல்விக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த செல்வி 29-ந்தேதி தீக்குளித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    இதேபோல் நாகர்கோவில் இடலாக்குடி மேலச்சரக்கல்விளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாய். இவரது மனைவி பத்மாவதி(50). இவர் கடந்த 29-ந்தேதி வீட்டில் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
    தூத்துக்குடியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீனாட்சிபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). நிலதரகர். இவருடைய மனைவி ராஜகிருஷ்ணவேணி (42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் செண்பகதேவிக்கு திருமணம் செய்து வைக்க, ராஜகிருஷ்ணவேணி தனது சொந்தத்தில் உள்ள ஒரு பையனை பார்த்ததாகவும் அவர் கிராமப்புறத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதில் சுகுமாருக்கு உடன்பாடு இல்லை என்பதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜகிருஷ்ணவேணி காலை 6 மணிக்கு வீட்டில் இருந்த சமையல் எண்ணெயை தனது உடம்பில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தற்கொலை செய்து கொண்ட ராஜகிருஷ்ணவேணியின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் சுகுமாரை போலீசார் கைது செய்தனர்.

    டி.வி.பார்த்து கொண்டிருந்த மனைவியை சோறு போடுமாறு கணவர் அழைத்ததால் அவர் வர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி மீது தீ வைத்துக்கொண்டார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அருகே முழையூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி அருண்மொழி. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சிவானந்தம் மது குடித்து விட்டு வீட்டுக்கு போதையில் வந்தார். அப்போது அருண்மொழி வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது பசியில் இருந்த சிவானந்தம் மனைவியிடம் ‘சோறு போடும்படி‘’ கூறினாராம். ஆனால் இதை கவனிக்காமல் அருண்மொழி டி.வி.யை சுவாரஸ்சியமாக பார்த்து கொண்டிருந்தார்.

    இதனால் போதையில் இருந்த சிவானந்தத்துக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

    அப்போது சிவானந்தம் வீட்டில் பாட்டிலில் இருந்த மண்எண்ணையை தனது வாயில் ஊற்றிக்கொண்டு பின்னர் தீக்குச்சியை பற்ற வைத்து அருண்மொழி முகம் அருகில் கொப்பளித்தார்.

    அப்போது அருண்மொழி முகம், தலை மீது தீ ‘குபீர்’ என பிடித்தது. இதில் தீயில் கருகி அவர் அலறி கூச்சல் போட்டார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவானந்தம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அருண்மொழியை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×