search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father death"

    • அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.
    • தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

    மன்னார்குடி:

    திருமக்கோட்டை அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர் எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). விவசாயி. இவரது மகன் எழில்வேந்தன். இவர் திருமக்கோட்டை உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் ஆறுமுகம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார்.

    அவரது இறுதிச்சடங்கு நடைபெறாத நிலையில் நேற்று 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடந்தது. தந்தை இறந்த துக்கத்தையும் பொருட்படுத்தாமல், சோகத்தையும் வெளிகாட்ட முடியாமல் தனது படிப்புக்காக தேர்வை எழுத வேண்டும் என்ற நிலையில் திருமக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.

    அப்போது கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பள்ளியின் தன்னார்வ உடற்கல்வி ஆசிரியர் பூபேஷ் ஆகியோர் மாணவருக்கு ஆறுதல் கூறி தகுந்த ஆலோசனை வழங்கி தேர்வு அறைக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாணவர் தேர்வு எழுதினார்.

    தனது தந்தை உயிரிழந்து, அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது விருப்பபடி தனது கல்விக்கு எந்த தடையும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் நேற்றைய தேர்வில் எழில்வேந்தன் பங்கேற்றது அனைவர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் எழில்வேந்தனின் பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

    • அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் ரமேஷின் தந்தை மரணமடைந்தார்.
    • இறுதிச் சடங்கு இன்று மாலை 6 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது.

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ், எம்.பாலசுப்பிர மணி, எம்.ராஜா எம்.சுரேஷ் காந்த் ஆகியோரின் தந்தை திருப்பரங்குன்றம் கீழத்தெரு நடுச்சந்தை சேர்ந்த குழாய் கடை எம்.முத்துத்தேவர் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

    அவர் இறந்த செய்தியை அறிந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்.முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அமைப்பு செயலாளரும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முத்துத்தேவர் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினார்.

    முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., ஆகியோரும் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்தியன், மற்றும் கிழக்கு மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் கிளை நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், தொண்டர்க ளும், உறவினர்களும் நண்பர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    முத்துத்தேவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 6 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது.

    • வைஷ்ணவிக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
    • மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் வைஷ்ணவி கிடைக்கவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் அவரது மனைவி வைஷ்ணவி. (வயது 19). இவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 20-ந் தேதி வைஷ்ணவியின் தந்தை இறந்து போனார். இதற்காக வைஷ்ணவி பெரிய காட்டுபாளையம் கிராமத்துக்கு சென்றார்.

    அதன்பின்னர் அவர் மாளிகம்பட்டு கிராமத்துக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் வைஷ்ணவி அங்கு செல்லவில்லை. அதிர்ச்சி அடைந்த நந்தகோபால் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் வைஷ்ணவி கிடைக்கவில்லை. இதுகுறித்து நந்தகோபால் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குபதிவு செய்து வைஷ்ணவி என்ன ஆனார் எங்கு சென்றார் கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    பெற்ற தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை அண்ணன் நடத்தி முடித்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் ராஜகுரு. செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகள் கனிமொழி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜகுரு-கனிமொழி ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

    நேற்று திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய்து, லால்குடி வடக்கு அய்யன்வாய்க்கால் அருகில் உள்ள திருமண மண்டபத்தை பதிவு செய்தனர். மணமகன், மணமகள் குடும்பத்தார் திருமண பத்திரிகை அடித்து அவர்களது உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர்.

    மணமகள் கனிமொழியின் தந்தை நடராஜனுக்கு தலையில் கட்டி ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால், அவர் திருச்சி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே திருமண ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் தடபுடலாக செய்து வந்தனர்.

    இந்த நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வி‌ஷயம் மணமகளின் அண்ணன் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே தெரியும். தந்தை இறந்த தகவலை தெரிவித்தால் தனது சகோதரியின் திருமணம் நின்று விடும் என்று கருதிய கனிமொழியின் அண்ணன், அந்த தகவலை மறைத்து, சகோதரியின் திருமணத்துக்கு செல்லாமல் மருத்துவமனையில் இருந்து விட்டார்.

    நேற்று காலை ராஜகுரு- கனிமொழி திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது. அனைத்து திருமண சடங்குகளும் நிறைவடைந்தன. அந்த நேரத்தில் மணமகளின் உறவினர் ஒருவர் நடராஜன் இறந்த தகவலை அங்கிருந்த சிலரிடம் தெரிவிக்கவே, அந்த தகவல் திருமண மண்டபம் முழுவதும் பரவியது.

    இதைக்கேட்ட மணமகள், அவரது தாய், சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். மணமகன் குடும்பத்தினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். திருமணத்திற்கு வந்த அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.

    இதையடுத்து அனைவரும் மருத்துவமனை சென்று உடலை ஊருக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை நடராஜன் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மணக்கோலத்துடன் மணமகள் கலந்து கொண்டார். காலையில் மகள் திருமணம் நடந்த நிலையில், மாலையில் தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

    பெற்ற தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை அண்ணன் நடத்தி முடித்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது அதிமுக அமைப்புச் செயலாளராகவும் உள்ள கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் (வயது 86) இன்று மரணம் அடைந்தார். #GokulaIndira
    திருவொற்றியூர்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் தற்போது அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராகவும் உள்ள கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் (வயது 86) இன்று மரணம் அடைந்தார்.

    மரணம் அடைந்த சுப்பிரமணிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மகன் ஏற்கனவே சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் சுப்பிரமணி கோகுல இந்திரா வீட்டில் வசித்து வந்தார்.

    சமீப காலமாக உடல் நலக்குறைவில் இருந்த அவர் இன்று அதிகாலை 5 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் அண்ணாநகர் ஐயப்பன் கோயில் அருகில் உள்ள கோகுல இந்திரா இல்லத்தில் தொடங்கி மாலை 5 மணிக்கு வேலாங்காடு சுடுகாட்டில் நடைபெறுகிறது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிமுகவினரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #GokulaIndira


    ஆம்பூரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 4 குழந்தைகளின் தந்தை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் 2-வது தார்வழி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் பிரபு (வயது 35) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கீதா 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரபு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார். ஆம்பூர் டவுன் போலீசார் உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    4 குழந்தைகளின் தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்யாறு அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் தந்தை பலியானார். மகன் பலத்த காயமடைந்தார்.

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவரது மகன் சூர்யா (22). இருவரும் தங்கள் கிராமத்தில் இருந்து பைக்கில் தூளி என்ற பகுதிக்கு சென்றனர். பைக்கை சூர்யா ஓட்டினார். பின்னால் தந்தை அமர்ந்திருந்தார்.

    காயத்ரி நகர் சிறுபாலம் மீது சென்ற போது மேடு பள்ளத்தில் நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து தந்தையும், மகனும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். அவர்கள் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர், சேகர் மட்டும் சென்னை ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சூர்யா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து பற்றி செய்யாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    தவளக்குப்பம் அருகே தந்தை இறந்த சோகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை தவளக்குப்பம் அருகே உள்ள நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கல்பனா. இவர்களது மகள் புவனேஸ்வரி (வயது 15) இவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருந்தார். இதற்கிடையே  கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறில் சரவணன் தற்கொலை செய்து கொண்டார்.

    தந்தை மீது அதிகளவு பாசம் வைத்திருந்த புவனேஸ்வரிக்கு தந்தையின் மரணம் தாங்கி கொள்ள முடியவில்லை. எப்போதும் தந்தையின்  நினைவிலேயே புவனேஸ்வரி இருந்து வந்தார். சோகத்தை மறைக்க  குருசுகுப்பத்தில் உள்ள அவரது பாட்டி சரோஜினி வீட்டில் தங்கவைத்து இருந்தனர். எனினும் புவனேஸ்வரி பாட்டி சரோஜினியிடம்  தனது தந்தை இறப்பு குறித்து அடிக்கடி கூறி வருத்தப்பட்டு வந்தார். அவரை சரோஜினி சமாதானம்  செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சரோஜினி கடைக்கு  சென்றிருந்த வேளையில்  புவனேஸ்வரி வீட்டின் குளியல் அறையில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். பொருட்கள் வாங்கி கொண்டு சரோஜினி வீடு திரும்பிய போது பேத்தி புவனேஸ்வரி தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் புவனேஸ்வரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள்  ஏற்கனவே புவனேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பட்டுக்கோட்டையில் மகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 46). இவர் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையம் எதிரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது மகன் பிளஸ்-2 தேர்வில் 1005 மதிப்பெண் எடுத்ததை அறிந்து இனிப்பு வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது தனது வீட்டில் இருந்த செல்போன் விளம்பரபோர்டு சாய்ந்து இருந்ததால் அதனை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாரத விதமாக அவர் மீது உயர்அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் சென்று மின் இணைப்பை துண்டித்து அடைக்கலத்தின் உடலை மீட்டனர். இதுபற்றி பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×