என் மலர்
நீங்கள் தேடியது "10-ம் வகுப்பு பொதுத்தேர்வு"
- மாணவிகளின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.
- சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.
திருச்சி:
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று நிறைவடைந்தது. கடைசி தேர்வான சமூக அறிவியல் பாடத் தேர்வினை நேற்று மாணவ-மாணவிகள் எழுதினர். ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 5 மாணவிகள் மாலையில் வீடு திரும்பவில்லை.
இரவு 8 மணி ஆகியும் அந்த மாணவிகள் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பள்ளியில் விசாரித்த போது, தேர்வு எழுதிவிட்டு மதியமே தேர்வு மையத்திலிருந்து வெளியே சென்றதாக தெரிவித்தனர்.
பின்னர் அவர்களது தோழிகளிடம் விசாரித்த போது, எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பதட்டமடைந்த மாணவிகளின் பெற்றோர் பவானி போலீசில் புகார் செய்தனர்.
பின்னர் துணை போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.
இதில் 5 மாணவிகளும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனே பவானி போலீசார் சமயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சென்று 5 மாணவிகளையும் மீட்டனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தேர்வில் வெற்றி பெற பெற்றோருக்கு தகவல் கொடுக்காமல் சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை கூறினர். இதை தொடர்ந்து 5 பேரையும் ஈரோட்டுக்கு அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
- மாணவி நிரஞ்சானாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.
- சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
திருச்சி:
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (51). உரக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் நிரஞ்சனா தா.பேட்டையில் செயல்படும் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு நிரஞ்சனாவின் தந்தை முரளி மாரடைப்பு காரணமாக இறந்து போனார். இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி நிரஞ்சனா தனது தந்தையின் இழப்பை மனதளவில் ஏற்று கொண்டு தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வந்தார்.
சமூகஅறிவியல் தேர்வு எழுதுவதற்காக மாணவி தனது உறவினருடன் விழி நிறைய கண்ணீருடன் மனதில் சோகத்தை சுமந்து கொண்டு வந்த மாணவி நிரஞ்சானாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.
மாணவி நிரஞ்சனாவிற்கு பள்ளி ஆசிரியர்களும், தேர்வு மைய மேற்பார்வையாளர் சிவானந்தம் ஆகியோரும் ஆறுதல் கூறி தேர்வை நல்ல முறையில் எழுதுமாறு ஆலோசனை வழங்கினர்.
தந்தையின் உடலுக்கு உறவினர்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் மாணவி தந்தையை இழந்த துயரத்துடன் தேர்வு எழுதியது ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
- பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன.
- பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி நாளை நிறைவடைகிறது.
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன. பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி நாளை நிறைவடைகிறது.
இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாைள மறுநாள் (28-ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர்.
4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும், தனித் தேர்வர்கள் 25,888 பேரும், சிறைவாசிகள் 272 பேரும் எழுதுகிறார்கள்.
12,480 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 4113 தேர்வு மையங்களில் இத்தேர்வினை எழுத தயா ராக உள்ளனர். தேர்வில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க 4,858 பறக்கும் படைகள் அமைக்கப்பட் டுள்ளன. 48 ஆயிரத்து 426 பேர் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
மாணவர்கள் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத் தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வு துறை எச்சரித்துள்ளது.
மேலும் தேர்வு பணிகளில் ஈடுபடக் கூடிய ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்து தல், மாணவர்கள் பார்த்து எழுதுவதற்கு உதவுதல் போன்ற தவறான செயல்களுக்கு துணை போகக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் 2,3 நாட்கள் இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
10, 11, 12-ம் வகுப்புகளை சேர்ந்த 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு பொதுத் தேர்வை சந்திக்கிறார்கள்.
- 17 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்தது
- கல்வித்துறை அறிவிப்பிற்கு பிறகு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 9,319 மாணவர்கள், 8,968 மாணவிகள் என மொத்தம் 18,287 பேர் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.
இதில் 8,163 மாணவர்கள், 8,541 மாணவிகள் என மொத்தம் 16,704 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 87.60 சதவீதம் பேரும், மாணவிகள் 95.24 சதவீதம் பேரும் என மொத்தம் 91.34 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 59 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. இதில் 23 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளனர்.
கடந்த ஆண்டு வேலூர் மாவட்டம் 79.80 சதவீதம் தேர்ச்சி பெற்று 38-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு தேர்வு முடிவில் 91. 34 சதவீதம் தேர்ச்சி பெற்று 17 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் அளிப்பது குறித்து அறிவிப்பு வரவில்லை.
கல்வித்துறை அறிவிப்பிற்கு பிறகு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்தார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்விக்கான உதவிகளை அரசு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
- தாய் கஸ்தூரி கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்தார்.
கிருஷ்ணகிரி :
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களது மகன் கீர்த்தி வர்மா. இவர் நான்கு வயதில் வீட்டின் மாடியில் விளையாடியபோது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டி சென்ற மின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி கீர்த்தி வர்மா தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார். மகனின் இந்த நிலையை கண்ட அருள்மூர்த்தி வீட்டை விட்டு சென்று விட்டார்.
இதனால் எந்த ஆதரவும் இல்லாததால் கஸ்தூரி தனது இரண்டு கைகள் இல்லாத மகனுடன் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜீனூர் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்தார். இரண்டு கைகளும் இல்லை என்றாலும் தன்னம்பிக்கையை கைவிடாத கீர்த்திவர்மா நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
இந்த நிலையில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவன் கீர்த்திவர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இரண்டு கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் போராடி சாதனை படைத்த மாணவனை அவரது தாய் கஸ்தூரி மற்றும் ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து மாணவன் கீர்த்திவர்மா கூறுகையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் பெற்றுள்ளேன். இந்த மதிப்பெண் எடுக்க காரணமாக இருந்த பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்தி வர்மாவின் சாதனையை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கீர்த்தி வர்மாவின் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், அந்த மாணவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும் அரசு செய்து தரும் என உறுதி அளித்தார்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்கு செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் கீர்த்தி வர்மாவின் வெற்றிச்செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் கீர்த்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
அவரது தாயாரை தொடர்புகொண்டு பேசினேன். அவருக்கு கைகள் பொருத்திட தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் கீர்த்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்று சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






