search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "+2 Exam"

    • எனது மகள் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருப்பது எனக்கு உண்மையிலேயே பெருமையாக உள்ளது.
    • அரசு மாதிரிப் பள்ளி தொடர்ந்து 2-வது ஆண்டாக சாதனை படைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர் ரவிக்குமார் ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் வர்ஷா. திருவண்ணாமலை அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

    நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் வர்ஷா 600-க்கு 589 மதிப்பெண்கள் பெற்றார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    சாதனை படைத்த மாணவியை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் பாராட்டினார்.

    எனது தந்தை ஆட்டோ ஓட்டி வருகிறார். எங்கள் குடும்பத்தில் அதிக நிதி நெருக்கடி உள்ளது.

    எனக்கு மாதிரி பள்ளியில் ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. பொது தேர்வுகளின் போது ஆசிரியர்கள் தொடர்ந்து என்னை கடினமாக படிக்க தூண்டினர். தேர்வு நேரத்தில் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது பாடங்களை படித்து முடிப்பது சோதனையாக இருந்தது.

    ஆனாலும் கடினமாக படித்தேன். தற்போது அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. நான் அரசு ஊழியராக ஆசைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மகள் சாதனை பெற்றதில் ஆட்டோ டிரைவர் ரவிக்குமார் மகிழ்ச்சியோடு காணப்பட்டார். அவர் கூறுகையில்:-

    நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். அந்த வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறோம். வறுமையிலும் எனது மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவளை தொடர்ந்து படிக்க வைத்தேன்.

    தேர்வு நேரத்தில் எனது மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இருந்தாலும் அவர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நன்றாக படித்தார். எனது மகள் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருப்பது எனக்கு உண்மையிலேயே பெருமையாக உள்ளது என்றார்.

    திருவண்ணாமலையில் உள்ள அரசு மாதிரிப் பள்ளி, தொடர்ந்து 2-வது ஆண்டாக சாதனை படைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மாடல் பள்ளியைச் சேர்ந்த 77 மாணவர்களில், 23 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 

    • நான் முதல்வன், மாணவர்களுக்கான கையேடு என பல்வேறு திட்டங்களை வகுத்து இருப்பதால், அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகமாக படித்து வருகின்றனர்.
    • திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளோம்

    திருப்பூர்:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் அரசு பள்ளிகளில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மொத்தம் 8,863 மாணவர்கள் பிளஸ்-2தேர்வு எழுதினர். இதில் 8,548 பேர் தேர்ச்சி பெற்றனர்.இது 96.45 சதவீதம் ஆகும்.

    ஆண்கள், 4,457பேரில் 4,233 பேர் தேர்ச்சி பெற்றனர். பெண்கள் 4,409 பேரில் , 4,315 பேர் தேர்ச்சி பெற்றனர். சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள், சிறப்பான பயிற்சி அளித்த ஆசிரிய ர்களுக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பக்தவச்சலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் பள்ளி கல்வித்துறைக்கு கவனம் ஒதுக்கி பள்ளிகளில் ஆய்வு செய்து எங்களுக்கு ஊக்கம் அளித்த காரணத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் 96.45 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடிந்தது. மேலும் 97.79சதவீதம் பெற்று மாநில அளவில் 2ம் இடம் பிடித்துள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக நான் முதல்வன், மாணவர்களுக்கான கையேடு என பல்வேறு திட்டங்களை வகுத்து இருப்பதால், அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகமாக படித்து வருகின்றனர்.

    மேலும் திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளோம் . திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ள 19 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது என்றார்.

    ×