search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை மரணம்
    X

    முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை மரணம்

    அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது அதிமுக அமைப்புச் செயலாளராகவும் உள்ள கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் (வயது 86) இன்று மரணம் அடைந்தார். #GokulaIndira
    திருவொற்றியூர்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் தற்போது அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராகவும் உள்ள கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் (வயது 86) இன்று மரணம் அடைந்தார்.

    மரணம் அடைந்த சுப்பிரமணிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மகன் ஏற்கனவே சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் சுப்பிரமணி கோகுல இந்திரா வீட்டில் வசித்து வந்தார்.

    சமீப காலமாக உடல் நலக்குறைவில் இருந்த அவர் இன்று அதிகாலை 5 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் அண்ணாநகர் ஐயப்பன் கோயில் அருகில் உள்ள கோகுல இந்திரா இல்லத்தில் தொடங்கி மாலை 5 மணிக்கு வேலாங்காடு சுடுகாட்டில் நடைபெறுகிறது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிமுகவினரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #GokulaIndira


    Next Story
    ×