என் மலர்
செய்திகள்

தஞ்சையில் பெண் தீக்குளித்து தற்கொலை
தஞ்சையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சை மானோஜிபட்டி அருகே உள்ள அய்யன் திருவள்ளுவர் நகரைச் சேரந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி முத்துமாரி (வயது 40). மனநிலை பாதிக்கப்பட்டவர்.
இந்தநிலையில் நேற்று முத்துமாரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென மண்எண்ணெய்யை எடுத்து ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story