search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman suicide"

    • தினேஷ் குமாரை அவரது மனைவிக்கு போன் செய்ய சொல்லி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
    • கந்து வட்டி கும்பல் திட்டியதால் வேதனை அடைந்த செல்வி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோடு காமராஜர் நகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் (29). இவர் சி.சி.டி.வி. விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி செல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. பெண் குழந்தை உள்ளது. தினேஷ் குமார் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த முருகனிடம் வட்டிக்கு பணம் வாங்குவது வழக்கம். ஏற்கனவே பணம் வாங்கி அதனை வட்டியுடன் கட்டி உள்ளார்.

    தற்போது தினேஷ் குமார், முருகனிடம் ரூ. ஒன்றரை லட்சம் பணம் கடனாக வாங்கி இருந்தார். அதற்கு வாரம் ரூ. 6 ஆயிரம் கட்ட வேண்டும் என முருகன் கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் தினேஷ்குமாரால் பணம் கட்ட தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேர் கும்பல் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தினேஷ் குமாரை அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

    பின்னர் தினேஷ் குமாரை அவரது மனைவிக்கு போன் செய்ய சொல்லி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

    பின்னர் தினேஷ் குமாரை விடுவித்தனர். கந்து வட்டி கும்பல் திட்டியதால் வேதனை அடைந்த செல்வி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கந்து வட்டி கும்பல் திட்டியதால் மனம் உடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 3 மாதங்களாக சதீஷ்குமாருடன் ஐஸ்வர்யா ஒரே வீட்டில் தங்கி இருந்தார்.
    • ஐஸ்வர்யாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் சதீஷ் குமார். தனியார் சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி, 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் திருச்சியை சேர்ந்த ஐஸ்வர்யா (வயது22) என்பவரும் காதலித்து வந்தனர்.

    அவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மேலும் அவர்களது திருமணத்தை விரைவில் நடத்தவும் முடிவு செய்து இருந்தனர்.

    இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக சதீஷ்குமாருடன் ஐஸ்வர்யா ஒரே வீட்டில் தங்கி இருந்தார். நேற்று இரவு வெளியில் சென்று இருந்த சதீஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு ஐஸ்வர்யா பேசியபோது திடீரென இணைப்பை துண்டித்து விட்டார். அப்போது அவர் மன உளைச்சலில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தேகமடைந்த சதீஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் தனது தங்கையிடம் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார். சதீஷ்குமாரின் தங்கை வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சென்றனர்.

    அங்கு ஐஸ்வர்யா புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஐஸ்வர்யாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இது தொடர்பாக சதீஷ்குமாரிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • மனவேதனை அடைந்த ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • வடிவேலுவை தாக்கியதாக ராஜேஸ்வரியின் சகோதரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    ஆர்.கே.நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் வடிவேல். இவரும் திருவொற்றியூரை சேர்ந்த ராஜேஸ்வரியும் (வயது19) கடந்த 6 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரி பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இது தொடர்பாக அவரை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதற்கிடையே வடிவேலுவை தாக்கியதாக ராஜேஸ்வரியின் சகோதரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தற்கொலை செய்து கொண்ட ஸ்வேதா பள்ளி அளவில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தவர் ஆவார்.
    • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் முருகன். இவரது மூத்த மகள் ஸ்வேதா (வயது 21).

    இவர் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் பட்டபடிப்பை கடந்த ஆண்டு முடித்தார். இதன் பின்னர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைக்காக நேர்முக தேர்வு வரை சென்றும் எதிலும் வேலை கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்வேதா அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு சென்றார். இதிலும் அவர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படாமல் வீடு திரும்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் ஸ்வேதா வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறிது நேரம் கழித்து பெற்றோர் அறைக்கு வந்து பார்த்த போது மகள் ஸ்வேதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் நடத்திய சோதனையின் போது ஸ்வேதா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் நான் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. அம்மாவை நன்றாக பார்த்து கொள்ளவும். தங்கையை நன்றாக பார்த்து கொள்ளவும். அம்மாவை வேலைக்கு அனுப்ப வேண்டாம். பூனையை பத்திரமாக பார்த்து கொள்ளவும் என்று எழுதி உள்ளார்.

    தற்கொலை செய்து கொண்ட ஸ்வேதா பள்ளி அளவில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தவர் ஆவார்.

    கல்லூரி படிப்பு முடித்து அவருக்கு வேலை கிடைக்காத நிலையில் அவரது தங்கை நல்ல நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்ததாக தெரிகிறது. இதனால் வீட்டிற்கு மூத்தவளாக இருந்தும் வேலை கிடைக்காததால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற மன வேதனையில் அவர் தற்கொலை செய்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    • கடந்த 20 நாட்களுக்கு முன்பு கவுரிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது.
    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கவுரி நேற்று அதேபகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகில் உள்ள கோவுகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் கவுரி(22) என்பவருக்கும் சிவக்குமார்(25) என்பவருக்கும் கடந்த 9.9.2021-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்குபிறகு உடனடியாக குழந்தை வேண்டாம் என குழந்தை பிறப்பை தள்ளிபோட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கவுரிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கவுரி நேற்று அதேபகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கவுரியின் தாய் நாகலட்சுமி வடமதுரை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் சிவக்குமாரின் கள்ளக்காதலால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. வளைகாப்பு சமயத்தில் இந்த பிரச்சனை நீடிக்கவே கவுரி சத்தம் போட்டுள்ளார்.

    அதற்கு சிவக்குமார் அவ்வாறுதான் இருப்பேன். உனக்கு இஷ்டம் இருந்தால் என்னுடன் சேர்ந்து வாழலாம். இல்லையென்றால் செத்துபோ என கூறியுள்ளார். குழந்தை பிறந்த பிறகு மனைவிக்கு தெரியாமல் தனது வீட்டிற்கு குழந்தையை தூக்கி வந்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    கவுரியை தற்கொலைக்கு தூண்டும் வகையில் துன்புறுத்தி பேசியதால் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிவக்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்ததும், தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததும் உறுதியானது. இதனால் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    • குழந்தைகள் அழுதுகொண்டே இருந்த நிலையில் கவுரியை காணாததால் அருகில் இருந்தவர்கள் அவரை தேடினர்.
    • இளம்பெண் தற்கொலை குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை கிராமத்திற்கு உட்பட்ட கோமுககவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கவுரி (22) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

    கவுரிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலையிலும் அதே போல் தனது மனைவியை சத்தம் போட்டு விட்டு சிவக்குமார் வெளியே சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த கவுரி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் அழுதுகொண்டே இருந்த நிலையில் கவுரியை காணாததால் அருகில் இருந்தவர்கள் அவரை தேடினர்.

    அப்போது அவர் கிணற்றில் மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடலை இறந்த நிலையில் மீட்டனர். இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கவுரியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்த உள்ளார். தாய் இறந்த நிலையில் இரட்டைக்குழந்தைகள் பாலுக்காக தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    • காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஜி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.
    • தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் விஜி (வயது 20). இவர் தனது தாய் மற்றும் தங்கை ஆகியோருடன் திருப்பூர்-மங்கலம் சாலை பாரப்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். மேலும் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்துள்ளார்.

    இவர் கடந்த ஒரு ஆண்டாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய காதல் விவகாரம் விஜியின் தாயாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த விஜி கடந்த 7-ந்தேதி பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து அவரது தாயார் திருப்பூர் மத்திய போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜியை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் பாராபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விஜி பிணமாக கிடந்தார்.

    உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறையினர் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஜி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன உளைச்சலுக்கு ஆளான காவ்யா வீட்டிலிருந்த விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
    • திருமணமாகி 7 மாதங்கள் ஆனநிலையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தருமபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பென்னாகரம்:

    பென்னாகரம் போடூர் காலனி பகுதியைச் சேர்ந்த காவ்யா (வயது 19). இவருக்கும் பாலக்கோடு அருகே எலுமிச்சனஅள்ளி பகுதியைச் சேர்ந்த விமல்குமார் என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் விமல்குமார், மாமியார் பட்டு, கணவரின் அக்கா மஞ்சு ஆகியோர்கள் காவ்யாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது.

    இதனால் கோபித்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு காவ்யா தனது தாயார் வீட்டிற்கு வந்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று விமல்குமார் காவ்யாவிடம் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டிலிருந்த விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் காவ்யாவை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 7 மாதங்கள் ஆனநிலையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் உறவினர்களிடம் தருமபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த மாதம் குழுவிற்கு கட்ட வேண்டிய பணம் செலுத்த காலதாமதம் ஆகியுள்ளது.
    • பணம் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன குழு ஊழியர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அய்யாமாளிடம் கடன் தவணைத் தொகையை செலுத்த கோரி வற்புறுத்தி உள்ளனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆண்டாத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர்கள் சக்தி குமார்-அய்யம்மாள் தம்பதியினர். சக்திகுமாருக்கு முதல் திருமணமாகி விவாகரத்தான நிலையில் இரண்டாவதாக அய்யம்மாளை பெரியோர்கள் சம்மதத்துடன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    அவர்களது மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த நிலையில் அதற்கு சான்றாக கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தம்பதிக்கு சிவமணி என்ற ஆண் குழந்தை பிறந்தது. கொத்தனாராக வேலை பார்த்து வரும் சக்திகுமாருக்கு சில மாதங்களாக சரிவர வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்துள்ளது.

    இதன் காரணமாக குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. குழந்தையை வளர்க்கவும், குடும்பம் நடத்தவும் தம்பதியினர் தவித்து வந்தனர். இதனை சரிசெய்யும் நோக்கத்தில் அய்யம்மாள் தனியார் நிதி நிறுவன மகளிர் குழுவில் ரூ.50,000 கடன் பெற்று மாதந்தோறும் ரூ.2,300 தவணைத்தொகையாக செலுத்தி வந்தார்.

    கடந்த மாதம் குழுவிற்கு கட்ட வேண்டிய பணம் செலுத்த காலதாமதம் ஆகியுள்ளது. பணம் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன குழு ஊழியர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அய்யாமாளிடம் கடன் தவணைத் தொகையை செலுத்த கோரி வற்புறுத்தி உள்ளனர். மேலும் கால அவகாசம் கேட்ட அய்யமாளிடம் கடுமையான வார்த்தைகளினாலும் திட்டி தீர்த்துள்ளனர்.

    11 மாத கைக்குழந்தையுடன் அய்யம்மாள் கண்ணீர் வடித்து நிற்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது குழு தொகையை கட்டியுள்ளனர். பலரது முன்னிலையில் அவமானமாக எண்ணிய அய்யம்மாள் கணவரிடமும், நெருங்கிய உறவினர்களிடமும் கூறி அழுதுள்ளார். கணவரும் அவரை தேற்றினார்.

    இந்த நிலையில் அண்டை வீட்டாருடன் பேசிக்கொண்டிருந்த அய்யம்மாள் இரவு வீட்டிற்குள் சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதற்கிடையே வீட்டிற்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் மட்டும் நீண்டநேரமாக கேட்டுக்கொண்டே இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அய்யம்மாள் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதுபற்றி உடனடியாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன் பேரில் விரைந்து வந்த ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி தலைமையிலான போலீசார் அய்யம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனியார் நிதி நிறுவன குழு பிரச்சனையால் அய்யம்மாள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாயை இழந்தது கூட தெரியாமல் தவித்து வந்த 11 மாத கைக்குழந்தையை உறவினர்கள் கையில் வைத்து கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ராஜேஸ்வரி கடந்த ஒரு மாதமாக வளசரவாக்கம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
    • இருவருக்கும் திருமணம் முடிந்து 7 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    போரூர்:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 25). இவர் கடந்த ஒரு மாதமாக வளசரவாக்கம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இதை கணவர் அருண்குமார் கண்டித்தார். இந்த நிலையில் நேற்று காலை அருண்குமார்-ராஜேஸ்வரி இடையே மீண்டும் செல்போனில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சென்ற இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் ராஜேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஸ்வரி- அருண்குமார் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். மேலும் இருவருக்கும் திருமணம் முடிந்து 7 மாதங்களே ஆவதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    கல்யாணி தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காளஹஸ்தியில் உள்ள தனது தாய் விஜயலட்சுமி வீட்டிற்கு குழந்தையுடன் வந்தார்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த ஈதுல குண்டா பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கல்யாணி (வயது 28). கல்யாணிக்கும் மோகனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு முனி மேதான்ஸ் என்ற 3 வயது மகன் இருந்தார்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கல்யாணி தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காளஹஸ்தியில் உள்ள தனது தாய் விஜயலட்சுமி வீட்டிற்கு குழந்தையுடன் வந்தார். மனைவியையும், குழந்தையையும் மோகன் மீண்டும் வந்து அழைத்துச் செல்லாததால் தாய் வீட்டிலேயே கல்யாணி தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் வேலை செய்து வந்த கல்யாணியின் தம்பி கடந்த சில நாட்களுக்கு முன்பு காளஹஸ்தி வந்தார். அவர் கல்யாணியிடம் எவ்வளவு நாட்கள்தான் தாய் வீட்டிலேயே இருப்பாய். உனது குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு போ என திட்டியதாக கூறப்படுகிறது.

    கணவர் வீட்டில் தான் பிரச்சனை என தாய் வீட்டிற்கு வந்தால் இங்கும் தன்னை கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என வற்புறுத்தி இருக்கிறார்கள். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கல்யாணி படுக்கை அறைக்கு சென்று அங்கு வைத்திருந்த விஷத்தை எடுத்து குழந்தையின் வாயில் ஊற்றினார். குழந்தை சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தது.

    இதையடுத்து கல்யாணியும் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். படுக்கை அறைக்கு சென்ற கல்யாணி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் விஜயலட்சுமி நீண்ட நேரம் கதவை தட்டினார். கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது சிறுவன் வாயில் நுரை தள்ளியடியும், கல்யாணி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கல்யாணி மற்றும் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக காளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து 2 டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வைரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதுரை மகன் அசோக் (வயது 32), இவரது மனைவி ஷர்மிளா(23) இவர்களுக்கு  2ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. கடந்த 3 நாட்களாக ஷர்மிளா அவரது தாய் வீடான பெரமண்டூர் கிராமத்தில் இருந்தவரை நேற்று மாலை அசோக் வைரபுரம் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. பின்னர், அசோக் வெளியே சென்ற நிலையில், ஷர்மிளா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    ×