என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman suicide"

    • வீட்டில் தனியாக இருந்த மனிஷா தனது குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு வந்தார்.
    • வீட்டில் அதிக அளவு எறும்புகள் இருப்பதை கண்டு மிரண்டு போனார்.

    தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் மஞ்சேரியலை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். ஐடி ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா (வயது 25). தம்பதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.

    மனிஷாவுக்கு சிறு வயது முதலே எறும்பை கண்டு பயப்படும் மிர்மிகோ போபியா என்ற வியாதி உள்ளது. இந்த வியாதி உள்ளவர்கள் எறும்புகளை கண்டால் பயந்து அலறி நடுங்குவார்கள். மனிஷா இந்த வியாதிக்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று காலை ஸ்ரீகாந்த் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மனிஷா தனது குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு வந்தார். பின்னர் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் அதிக அளவு எறும்புகள் இருப்பதை கண்டு மிரண்டு போனார். எறும்புகளை கண்டு பயந்து போன மனிஷா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது கணவருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்தார். அதில் ஐ எம் சாரி ஸ்ரீ. என்னை மன்னித்துவிடு. குழந்தையை நன்றாக பார்த்துக் கொள். நான் உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன். மாமியாருக்கு சாப்பாடு போட மறந்து விடாதே என எழுதினார்.

    பின்னர் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மனிஷாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எறும்புகளுக்கு பயந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • ரிதன்யாவுக்கு திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும் கைகாட்டிப்புதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமானது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து காரை எடுத்துச்சென்ற ரிதன்யா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை தின்ற நிலையில், ரிதன்யா பிணமாக கிடந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்ப பிரச்சனையில் ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார். அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அந்த ஆடியோவில், தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து கடுமையாக சித்ரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது, மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருந்தார்.

    எனவே கணவர், மாமனார், மாமியார் சித்ரவதை காரணமாக ரிதன்யா தற்கொலை செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரிதன்யாவுக்கு திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. தந்தைக்கு ஆடியோ அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஷா கிருஷ்ணராவ் இருவரும் தலைமறைவானார்கள்.
    • பல்வேறு இடங்களில் அனுஷாவை தேடிய அவரது குடும்பத்தினர் அவர் காணாமல் போனதாக கோவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ் (வயது 21) கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த அனுஷா (21) இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

    வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் அனுஷாவுக்கு அதே மாவட்டத்தை சேர்ந்த பாபு (27) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் அனுஷாவுக்கு துளி கூட விருப்பமில்லை.

    கணவருடன் இருந்தாலும் தனது காதலனுடன் அடிக்கடி அனுஷா செல்போனில் பேசி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஷா கிருஷ்ணராவ் இருவரும் தலைமறைவானார்கள். பல்வேறு இடங்களில் அனுஷாவை தேடிய அவரது குடும்பத்தினர் அவர் காணாமல் போனதாக கோவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணாராவ், அனுஷா இருவரும் திருப்பதி வந்தனர். கோவிந்தராஜ சாமி கோவில் வடக்கு மாடவீதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அவர்கள் தங்கி இருந்தனர். இருவரும் லாட்ஜில் கணவன், மனைவி போல உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த இருவரும் நேற்று லாட்ஜில் உள்ள அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பதி கிழக்கு போலீசார் லாட்ஜிக்கு சென்று 2 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரிய வந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரசாந்தும், மேகலாபிரியாவும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்தனர்.
    • மேகலா பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் பிரசாந்த் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

    கோவை:

    கோவை ரத்தினபுரி அருகே விசுவாசபுரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மேகலா பிரியா (வயது 26).

    இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சுண்டக்காபட்டி ஆகும். கோவை பீளமேட்டில் லேப்-டெக்னீசியாக வேலை பார்த்ததால் இங்கேயே தனி வீடு எடுத்து தங்கியிருந்தார்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மேகலா பிரியா வேலைக்கு செல்லவில்லை. அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பார்த்தனர். ஆனால் மேகலாபிரியா போனை எடுக்கவில்லை.

    இதனால் ஊழியர்கள் நேராக அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ரத்தினபுரி போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு நிர்வாண நிலையில் மேகலா பிரியா தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

    மேகலாபிரியாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மேகலா பிரியா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மேகலாபிரியா காதல் விவகாரத்தில் தற்கொலை என்னும் விபரீத முடிவை எடுத்திருப்பது தெரியவந்தது.

    மேகலாபிரியாவும், தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோபாலபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (25) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். பிரசாந்த் தனியார் நிறுவனத்தில் சூப்பிரவைசராக பணியாற்றி வந்தார்.

    பிரசாந்தும், மேகலாபிரியாவும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்தனர். மேகலா பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் பிரசாந்த் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் மேகலாபிரியாவுடன் பேசுவதையும் நிறுத்தி உள்ளார்.

    சம்பவத்தன்று 2 பேரும் செல்போனில் பேசி உள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே காரசார விவாதம் நடந்துள்ளது. அதன்பிறகு தான் காதலன் தன்னை ஏமாற்றி விட்டார், எனவே உயிரோடு வாழக்கூடாது என முடிவு செய்து மேகலாபிரியா தற்கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளின் கீழ் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மேகலா பிரியா நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கியது பற்றி போலீசார் விசாரித்தனர். மேகலாபிரியா கொல்லிமலை வட்டாரத்தைச் சேர்ந்த ஆதிவாசி கிராமத்தில் பிறந்து வளர்ந்துள்ளார். இவரது குலத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கும் முன்பு ஆடைகள் இன்றி இருக்க விரும்புவார்களாம். அந்த சம்பிரதாயத்தின் படி தான் மேகலாபிரியா ஆடைகள் இன்றி தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • மனவேதனை அடைந்த கலைச்செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போரூர்:

    மதுரவாயல் கங்கை அம்மன் நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் ராஜூ. தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி கலைச்செல்வி (வயது28). இவர்களுக்கு 1-வயதில் மகன் உள்ளான்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த கலைச்செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர், ஊர் பெரியவர்களை அழைத்து காதலனை இனிமேல் தனது மகளை சந்திக்க கூடாது என தெரிவித்துள்ளனர்
    • காதலனின் குடும்பத்தார் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த பெண் அதே பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி 1வது வார்டு அமராவதி பள்ளித் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து இவரது மகள் காளீஸ்வரிக்கும் ராஜா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே காளீஸ்வரி அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி என்ற வினோத் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

    திருமணத்துக்கு பிறகும் இவர்களது உறவு நீடித்துள்ளது. இதனால் காளீஸ்வரியின் பெற்றோர் ஊர் பெரியவர்களை அழைத்து வினோத்தை இனிமேல் தனது மகளுடன் சந்திக்க கூடாது என தெரிவித்துள்ளனர்

    இருந்த போதும், வினோத் தொடர்ந்து காளீஸ்வரியுடன் பழகி வந்துள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு காளீஸ்வரியின் வீட்டுக்கு சென்ற வினோத் கதவை தட்டி அவரை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது வினோத்தின் தந்தை அன்னக்கொடி, தாய் அன்னலெட்சுமி, அழகர்ராஜா, அல்போன்சா, ஆண்டனி ஆகியோர் சேர்ந்து காளீஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.

    இதனால் மனமுடைந்த காளீஸ்வரி அதே பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காளீஸ்வரியின் தாய் பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது வீட்டு மாடியில் இருந்த அர்ச்சனா நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை.
    • சந்தேகமடைந்த அர்ச்சனா குடும்பத்தினர் மேலே சென்று பார்த்த போது உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி எஸ்.எஸ்.புரம் அருகே உள்ள சடையாண்டி நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முருகன் துணி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரது 2-வது மகள் அர்ச்சனா (23). பி.காம் படித்து முடித்த இவர் வங்கியில் சில மாதங்கள் வேலை பார்த்தார். அதன் பிறகு வேலையின்றி வீட்டிலேயே இருந்து தனது தந்தை செய்யும் தொழிலுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.

    இதனால் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முருகன் முடிவு செய்தார். இது குறித்து அவரிடம் கேட்ட போது உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பிறகு கலகலப்பாக யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

    நேற்று மாலை தனது வீட்டு மாடியில் இருந்த அர்ச்சனா நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் மேலே சென்று பார்த்த போது உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் அர்ச்சனா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவலிங்கேஸ்வரி கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த 2 மகன்களையும் ஒருவர் பின் ஒருவராக தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார்.
    • மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த இந்திர சேனா மனைவி மற்றும் மகன்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நரசராவ் பேட்டை, பெடசெருவு பகுதியை சேர்ந்தவர் இந்திர சேனா. இவருக்கும் ரொம்பி சர்லா, நல்கர்ல பாடு பகுதியை சேர்ந்த சிவலிங்கேஸ்வரி (வயது 27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    தம்பதிக்கு சரண் சாய் (8), ஜிதின் (4) என 2 மகன்கள் இருந்தனர். இந்திர சேனா குண்டூரில் உள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    இந்திர சேனா திருமணத்திற்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின்னரும் இந்திர சேனா அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டிக்காததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டபோது இந்திர சேனா, சிவலிங்கேஸ்வரியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவலிங்கேஸ்வரி நேற்று காலை கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த 2 மகன்களையும் ஒருவர் பின் ஒருவராக தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் சிவலிங்கேஸ்வரியும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

    மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த இந்திர சேனா மனைவி மற்றும் மகன்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சுபாஷினி குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து டீசலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.
    • கண்இமைக்கும் நேரத்தில் சுபாஷினி உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள வையாபுரி நகரை சேர்ந்தவர் வைகுந்தன்.

    இவரது மனைவி சுபாஷினி (வயது 28). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. மேலும் வைகுந்தன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து சுபாஷினியிடம் தகராறு செய்து வந்தார்.

    இதன் காரணமாக மனவேதனை அடைந்த அவர் 3 முறை தற்கொலைக்கு முயன்றார். சுபாஷினியை அவரது உறவினர்கள் காப்பாற்றினர்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து டீசலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.

    கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சுபாஷினியை மீட்டனர்.

    பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுபாஷினி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மது அருந்தி விட்டு வந்த கணேசனுக்கும் அவரது மனைவிக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனைவியுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற கணேசன் , பின்னர் மனைவிக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.

    திருப்பூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் மாரப்பூர் மேலபுலவன் காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 30). இவர் திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அதே நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்த வசந்தாமணி (23) என்ற பெண்ணை கணேசன் காதலித்து வந்தார்.

    2 பேரும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு 15 வேலம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் கணேசன் தினமும் குடித்து விட்டு வந்து வசந்தாமணியை அடித்து சித்ரவதை செய்துள்ளார்.

    நேற்று இரவும் மது அருந்தி விட்டு வந்த கணேசனுக்கும் அவரது மனைவிக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மனைவியுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற கணேசன் , பின்னர் மனைவிக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு வசந்தாமணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வசந்தாமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜேஸ்வரி கடந்த ஒரு மாதமாக வளசரவாக்கம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
    • இருவருக்கும் திருமணம் முடிந்து 7 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    போரூர்:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 25). இவர் கடந்த ஒரு மாதமாக வளசரவாக்கம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இதை கணவர் அருண்குமார் கண்டித்தார். இந்த நிலையில் நேற்று காலை அருண்குமார்-ராஜேஸ்வரி இடையே மீண்டும் செல்போனில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சென்ற இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் ராஜேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஸ்வரி- அருண்குமார் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். மேலும் இருவருக்கும் திருமணம் முடிந்து 7 மாதங்களே ஆவதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கடந்த மாதம் குழுவிற்கு கட்ட வேண்டிய பணம் செலுத்த காலதாமதம் ஆகியுள்ளது.
    • பணம் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன குழு ஊழியர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அய்யாமாளிடம் கடன் தவணைத் தொகையை செலுத்த கோரி வற்புறுத்தி உள்ளனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆண்டாத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர்கள் சக்தி குமார்-அய்யம்மாள் தம்பதியினர். சக்திகுமாருக்கு முதல் திருமணமாகி விவாகரத்தான நிலையில் இரண்டாவதாக அய்யம்மாளை பெரியோர்கள் சம்மதத்துடன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    அவர்களது மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த நிலையில் அதற்கு சான்றாக கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தம்பதிக்கு சிவமணி என்ற ஆண் குழந்தை பிறந்தது. கொத்தனாராக வேலை பார்த்து வரும் சக்திகுமாருக்கு சில மாதங்களாக சரிவர வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்துள்ளது.

    இதன் காரணமாக குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. குழந்தையை வளர்க்கவும், குடும்பம் நடத்தவும் தம்பதியினர் தவித்து வந்தனர். இதனை சரிசெய்யும் நோக்கத்தில் அய்யம்மாள் தனியார் நிதி நிறுவன மகளிர் குழுவில் ரூ.50,000 கடன் பெற்று மாதந்தோறும் ரூ.2,300 தவணைத்தொகையாக செலுத்தி வந்தார்.

    கடந்த மாதம் குழுவிற்கு கட்ட வேண்டிய பணம் செலுத்த காலதாமதம் ஆகியுள்ளது. பணம் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன குழு ஊழியர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அய்யாமாளிடம் கடன் தவணைத் தொகையை செலுத்த கோரி வற்புறுத்தி உள்ளனர். மேலும் கால அவகாசம் கேட்ட அய்யமாளிடம் கடுமையான வார்த்தைகளினாலும் திட்டி தீர்த்துள்ளனர்.

    11 மாத கைக்குழந்தையுடன் அய்யம்மாள் கண்ணீர் வடித்து நிற்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது குழு தொகையை கட்டியுள்ளனர். பலரது முன்னிலையில் அவமானமாக எண்ணிய அய்யம்மாள் கணவரிடமும், நெருங்கிய உறவினர்களிடமும் கூறி அழுதுள்ளார். கணவரும் அவரை தேற்றினார்.

    இந்த நிலையில் அண்டை வீட்டாருடன் பேசிக்கொண்டிருந்த அய்யம்மாள் இரவு வீட்டிற்குள் சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதற்கிடையே வீட்டிற்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் மட்டும் நீண்டநேரமாக கேட்டுக்கொண்டே இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அய்யம்மாள் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதுபற்றி உடனடியாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன் பேரில் விரைந்து வந்த ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி தலைமையிலான போலீசார் அய்யம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனியார் நிதி நிறுவன குழு பிரச்சனையால் அய்யம்மாள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாயை இழந்தது கூட தெரியாமல் தவித்து வந்த 11 மாத கைக்குழந்தையை உறவினர்கள் கையில் வைத்து கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×