என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

போடி அருகே திருமணம் பிடிக்காததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

- தனது வீட்டு மாடியில் இருந்த அர்ச்சனா நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை.
- சந்தேகமடைந்த அர்ச்சனா குடும்பத்தினர் மேலே சென்று பார்த்த போது உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி எஸ்.எஸ்.புரம் அருகே உள்ள சடையாண்டி நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முருகன் துணி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது 2-வது மகள் அர்ச்சனா (23). பி.காம் படித்து முடித்த இவர் வங்கியில் சில மாதங்கள் வேலை பார்த்தார். அதன் பிறகு வேலையின்றி வீட்டிலேயே இருந்து தனது தந்தை செய்யும் தொழிலுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.
இதனால் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முருகன் முடிவு செய்தார். இது குறித்து அவரிடம் கேட்ட போது உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பிறகு கலகலப்பாக யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
நேற்று மாலை தனது வீட்டு மாடியில் இருந்த அர்ச்சனா நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் மேலே சென்று பார்த்த போது உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.
அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் அர்ச்சனா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
