search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

    • பெற்றோர், ஊர் பெரியவர்களை அழைத்து காதலனை இனிமேல் தனது மகளை சந்திக்க கூடாது என தெரிவித்துள்ளனர்
    • காதலனின் குடும்பத்தார் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த பெண் அதே பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி 1வது வார்டு அமராவதி பள்ளித் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து இவரது மகள் காளீஸ்வரிக்கும் ராஜா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே காளீஸ்வரி அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி என்ற வினோத் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

    திருமணத்துக்கு பிறகும் இவர்களது உறவு நீடித்துள்ளது. இதனால் காளீஸ்வரியின் பெற்றோர் ஊர் பெரியவர்களை அழைத்து வினோத்தை இனிமேல் தனது மகளுடன் சந்திக்க கூடாது என தெரிவித்துள்ளனர்

    இருந்த போதும், வினோத் தொடர்ந்து காளீஸ்வரியுடன் பழகி வந்துள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு காளீஸ்வரியின் வீட்டுக்கு சென்ற வினோத் கதவை தட்டி அவரை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது வினோத்தின் தந்தை அன்னக்கொடி, தாய் அன்னலெட்சுமி, அழகர்ராஜா, அல்போன்சா, ஆண்டனி ஆகியோர் சேர்ந்து காளீஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.

    இதனால் மனமுடைந்த காளீஸ்வரி அதே பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காளீஸ்வரியின் தாய் பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×