search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school students"

    • பள்ளி மாணவ-மாணவிகள் 22,985 பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
    • கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பெற்று பயன் பெறலாம்.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் காரைக்குடி மண்டலத்திற்கு உட்பட்ட சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கட்டண மில்லா பயணம் செய்வதற்கு ஏதுவாக சிவ கங்கை மாவட்டத்தில் 13,061 மாணவ, மாணவி களுக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 9,924 மாணவ, மாணவி களுக்கும் மொத்தம் 22,985 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான கட்டணமில்லா பேருந்து அட்டைகள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் மன்னர் மேல்நிலைப் பள்ளி யில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் மாணவ மாணவி களுக்கு கட்டணமில்லா பேருந்து அட்டைகளை வழங்கினார். ஏனைய பள்ளிகளில் காரைக்குடி மண்டலத்தில் உள்ள 2 கோட்ட மேலாளர்கள், 11 கிளை மேலாளர்கள் மூலம் பள்ளி மாணவ, மாணவி களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டது.

    மேலும் இது நாள் வரை கட்டணமில்லா பேருந்து பயண அட்டைக்கு விண் ணப்பிக்காத மாணவ, மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்து கட்டண மில்லா பேருந்து பயண அட்டைகளை பெற்று பயன் பெறுமாறு மாணவ, மாணவிகளுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    • மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறிய கனிமொழி எம்.பி. தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
    • மாவட்டம் முழுவதும் 18 ஆயிரத்து 819 மாணவ,மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர்.

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்குவளையில் தொடங்கி வைத்தார்.

    கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

    இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. அப்போது மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறிய கனிமொழி எம்.பி. தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

    இப்பள்ளியில் மொத்தம் 125 மாணவ- மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். மாவட்டம் முழுவதும் 524 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 18 ஆயிரத்து 819 மாணவ - மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர்.

    கலந்து கொண்டவர்கள்

    முன்னதாக நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் கவுரவ்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வீரபுத்திரன், தாசில்தார் பிரபாகரன், தூத்துக்குடி யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, அய்யனடைப்பு ஊராட்சி தலைவர் அதிஷ்ட கணபதி ராஜேந்திரன், துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி செயலர் சங்கர ராமசுப்பிரமணியன், தூத்துக்குடி மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்கொடி, துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குறைவான பஸ் வசதியால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.
    • தவித்த மாணவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

    பல்லடம்:

    பல்லடத்தில் இருந்து மாதப்பூர் வழியாக ஏராளமான பள்ளி மாணவர்கள், பல்லடம் மற்றும் பொங்கலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். பல்லடத்திலிருந்து சமத்துவபுரம், மாதப்பூர் வழியாக காலை நேரத்தில் ஒரு அரசு பஸ், ஒரு தனியார் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. குறைவான பஸ் வசதியால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.

    இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் மனு அளித்தும் இதுவரை கூடுதல் பஸ்கள் இவ்வழித்தடத்தில் இயக்குவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கிடையே நேற்று காலை மாதப்பூரில் இருந்து பொங்கலூர் அரசு பள்ளிக்குச் சென்ற 5 மாணவர்களை கூட்ட நெரிசல் காரணமாக பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு சென்றதால், பள்ளிக்கு செல்ல முடியாமல் அந்த மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.

    இந்தநிலையில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்த மாணவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

    பஸ்சுக்காக நல்லா கவுண்டம்பாளையத்தில் இருந்து மாதப்பூர் வரை 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே வருவதாகவும் மாதப்பூரில் இருந்து பொங்கலூர் செல்ல முறையான பஸ்வசதி இல்லாததால் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் பள்ளி மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசு பஸ் ஓட்டுனரிடம் கேட்டபோது, பல்லடம், சமத்துவபுரம், மாதப்பூர், நல்லா கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காலை நேரத்தில் வருகின்றனர்.

    கூடுதல் பஸ் வசதி இல்லாத காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் இது குறித்து அரசு போக்குவரத்து டிப்போவில் தெரிவித்துள்ளதாகவும், கூடுதல் பஸ்களை இயக்கினால் மட்டுமே இந்தப்பிரச்சனை தீரும் என்று தெரிவித்தார்.

    • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
    • முன்னாள் கவுன்சிலர் அருணா தேவி தெரிவித்தார்.

    வாடிப்பட்டி

    தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக திருக்குறள் ஒப்பு விக்கும் மாணவ-மாணவி களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படு கிறது.

    உலக பொதுமறையான திருக்குறள் 1330 குறட்பாக்க ளையும் மனப்பாடம் செய்து ஒப்பிவிக்கும் போட்டியில் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த மாணவ-மாணவி கள் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அம்மா மக்கள்குறை தீர்க்கும் வழிகாட்டு மையம் தனது கல்வி தொண்டில் இலவச நோட்டு புத்தகம், ஆக்கி மட்டை, அரசு பொது தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவ-மாணவி களுக்கு ரொக்க பணம் ரூ.10 ஆயிரம், 7ஆயிரம், 5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கு சிகரம் பதிக்கும் விதமாக மாணவ-மாணவி களுக்கு 2500 இலவச திருக்குறள் வழங்கிட முன்வந்துள்ளது. இதன் முதல் கட்டமாக வழிகாட்டு மைய அறங்காவலர் டாக்டர் அசோக்குமார் பிறந்த நாள்விழாவை யொட்டி வாடிப்பட்டி அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் 979 பேருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப் பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் திலக வதி தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவனர் முன்னான் கவுன்சிலர் அருணாதேவி முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் பிரேமா வரவேற்றார். கவுன்சிலர் சூரியா அசோக் குமார் மாணவிகளுக்கு இலவச திருக்குறள்புத்தகம் வழங்கினார்.

    இதில் 2-ம் கட்டமாக வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்க ளுக்கும், பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல் நிலைப் பள்ளியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கும், மேட்டு நீரேத்தான் உயர் நிலைப்பள்ளியில் 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகமும், ஆங்கில அகராதி யும் வழங்கப்பட உள்ளது என்று அம்மா மக்கள் குறைதீர்க்க வழிகாட்டுமைய நிறுவனர் முன்னாள் கவுன்சிலர் அருணா தேவி தெரிவித்தார்.

    • மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் பஸ் வசதி கேட்டு அரசு போக்கு வரத்துக்கழக பணிமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • முழுமையான சாலை வசதி அமைக்கப்பட்டவுடன் பஸ் வசதி இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் பஸ் வசதி கேட்டு அரசு போக்கு வரத்துக்கழக பணிமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பஸ் வசதிகேட்டு மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தோம். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி னோம்.

    இதனைதொடர்ந்து அரசு போக்குவரத்துகழக அலு வலர்கள், வருவாய்த்துறை யினருக்கு மாவட்ட கலெக்டர் பஸ்வசதி விடுவத ற்கான சாத்தியகூறுகள் குறித்து அறிவுரை வழங்கி னார். இந்த வழித்தடத்தில் தார்சாலை இல்லை என்றும், தார்ச்சாலை வசதி இருந்தால் மட்டுமே அரசு பஸ் இயக்க முடியும் என போக்குவரத்து கழகம் தெரிவித்தது. இதனைதொடர்ந்து ரூ.20.60 லட்சம் மதிப்பில் ஓரடடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    பள்ளி திறந்து 3 மாதங்கள் ஆகியும் இதுவரை பஸ் இயக்கப்படவில்லை. எனவே அரசு போக்குவரத்து கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறோம். பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமத்துடன் பள்ளிக்கு வரும் நிலை ஏற்படுகிறது. மேலும் பல மாணவர்கள் இடையிலேயே கல்வியை நிறுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என்றனர்.

    இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக மண்டலமேலாளர் டேனியல் சாலமன் தெரிவிக்கையில், மேற்கு மீனாட்சி நாயக்க ன்பட்டியில் செயல்பட்டு வரும் பள்ளி கட்டிடம், எம்.வி.எம்.அரசு மகளிர் கல்லூரி பின்புறம் மாற்ற ப்பட்டது. பஸ் வசதி கேட்டு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் மணற்பா ங்கான ரோடுகளும், குண்டும், குழியுமான சாலைகளும் உள்ளதால் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கும் பட்சத்தில் பஸ்வசதி செய்து தரப்படும். இதுகுறித்த அறிக்கையை கல்வித்துறை, பள்ளிநிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    முழுமையான சாலை வசதி அமைக்கப்பட்டவுடன் பஸ் வசதி இயக்கப்படும் என்றார்.

    • படுகாயமடைந்த சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை அவர்களது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • அண்ணன்-தங்கையை அரிவாளால் வெட்டிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி சின்னத்துரை உறவினர்கள் நள்ளிரவு வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    களக்காடு:

    நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது 17) என்ற மகனும், சந்திராசெல்வி (14) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரில் உள்ள பள்ளிக் கூடத்தில் படித்து வருகின்றனர்.

    நேற்று மாலையில் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர். பின்னர் இரவில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றபோது, அங்கு புகுந்த மர்மநபர்கள் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகிய 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    படுகாயமடைந்த சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை அவர்களது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதனைப்பார்த்த அவர்களுடைய சின்ன தாத்தா கிருஷ்ணன் (59) அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து நாங்குநேரி போலீ சார் வழக்குப்பதிவு செய்து, வீடுபுகுந்து அண்ணன்-தங்கையை அரிவாளால் வெட்டிய கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே அந்த கும்பலை கைது செய்ய வலியுறுத்தி சின்னத்துரை உறவினர்கள் நள்ளிரவு வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், சின்னத்துரையை அவர் படிக்கும் அதே பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் சிலர் சிகரெட் வாங்கி வருமாறு அடிக்கடி கூறி வந்ததாகவும், இதனால் மனம் உடைந்த சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து சின்னத்துரை தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் நேற்று பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் கூறியுள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிளஸ்-2 மாணவர்கள் சின்னத்துரை மற்றும் அவர் சகோதரியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த மாணவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பேரணியில் என்.சி.சி. மாணவர்கள் சுமார் 93 பேர் கலந்து கொண்டனர்.
    • பேரணியை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் விதமான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் என்.சி.சி. மாணவர்கள் சுமார் 93 பேர் கலந்து கொண்டு உள்ளூர் சந்தை பொருட்களை பயன்படுத்துவதன் முக்கி யத்துவத்தை வெளி ப்படுத்தும் விதமாகவும், அயல்நாட்டுப் பொருட்களை தவிர்ப்போம் என்றும் எழுதப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ரெயில்வே ரோட்டில் நேரடியாக சென்றனர்.

    பேரணியை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் உலகநாதன் தலைமை தாங்கினார். உள்ளூர் சந்தை பொரு ட்களின் முக்கியத்துவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சோமசுந்தரம் பேசினார்.

    நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகா, 9-வது என்.சி.சி குழுவின் சுபைதார் தசரதன், கவில்தார் சதீஷ், தலைமை ஆசிரியர் உலகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை என்.சி.சி. ஒருங்கி ணைப்பாளர் செல்லத்துரை, முதுகலை ஆசிரியர்கள் மதன்ராஜ், செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆற்றுப்படை அறக்கட்டளையை சேர்ந்த அரவிந்த் கார்த்திகேயன், அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகிறார்.
    • நடப்பு ஆண்டில் 80 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

    சென்னை:

    'பெல்லோ சிட்டிசன்' நிதியுதவியுடன் செயல்படும் ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 6 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

    சமூக சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் இருக்கும் இளைஞர்களுக்கு அதற்குரிய பொருளாதார வசதி, பின்னணி இல்லாமல் இருப்பார்கள். அதுபோன்ற இளைஞர்களையும், சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களையும் அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வகையில் 'தந்தி' டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து 'பெல்லோ சிட்டிசன்' (சக மனிதர்களின் மேன்மைக்கான அமைப்பு) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்கள்.

    அந்தவகையில், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வரும், பயிற்சி டாக்டரும், ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திகேயன் என்பவர் 'பெல்லோ சிட்டிசன்' அமைப்பு மூலம் அடையாளம் காணப்பட்டார். அந்த தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆற்றுப்படை அறக்கட்டளையை சேர்ந்த அரவிந்த் கார்த்திகேயன், அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் கடந்த ஆண்டில் 90 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் பங்கு பெற்றவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு மூலம் 10 இடங்களில் வந்தனர்.

    அதேபோல், நடப்பு ஆண்டில் 80 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பங்கு பெற்ற மாணவ-மாணவிகளில் 6 பேர் வெற்றி பெற்று, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கு பெற தகுதி பெற்றனர். அவர்களில் 5 பேர் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இடங்களை பெற்று இருக்கின்றனர். அதன்படி, கே.துர்கா தேவி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியையும், ஹரிணிதேவி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், ஆர்.இலக்கியா திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியையும், விமல்சுவார் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியையும், விஷ்ணுபிரியா ஈரோடு நந்தா பல் மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்து உள்ளனர்.

    இதுதவிர நீட் தேர்வில் 523 மதிப்பெண் பெற்ற கனிஷ்கா என்ற மாணவி பொதுப்பிரிவு கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்து, அதற்கான முடிவுக்காக காத்திருக்கிறார். இவர் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவி ஆவார்.

    ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் 2024-ம் ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு நிறைவு பெற்று, மாணவர் சேர்க்கையும் முடிந்துவிட்டது. அவர்களுக்கான வகுப்புகள் விரைவில் தொடங்கி நடைபெற இருக்கின்றன.

    • அரசு தொடக்கப்பள்ளியில் 220-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் 220-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி மாண வர்களுக்கு அடையாள அட்டை, டைரி, கற்றலில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் முன்னாள் மாணவர் காவல்துறை அதிகாரி ராஜசேகர் மாணவர்களுக்கு அடையாள அட்டை, டைரி மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    மாநில அளவில் வாசிப்பு மற்றும் கையெழுத்து போட்டி, கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி விழாவுக்கு தலைமை வகித்தார். ஆசிரியர் பாரதிராஜா வரவேற்றார். ஆசிரியை கீதா நன்றி கூறினார்.

    விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் எழிலரசி, அவந்தி, தேவி, அழகம்மாள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • பேரணி பள்ளியில் தொடங்கி நாசரேத் பஸ் நிறுத்தம் வரை நடந்தது.
    • மாணவ, மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

    நாசரேத்:

    நாசரேத் நகரில் அமைந்துள்ள பிரகாசபுரம் ஜேம்ஸ் மெமோரியல் மேல்நிலை பள்ளியில் 'பசுமையை நோக்கி' என்ற தலைப்பில் பசுமையை காப்பது, மரங்களை நடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. எஸ்.டி.ஏ. பள்ளிகளின் தெற்கு மண்டல ஆய்வாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.

    பேரணியை நாசரேத் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பள்ளியில் தொடங்கி நாசரேத் பஸ் நிறுத்தம் வரை நடந்தது. இதில் மரங்களை நடுவோம் மழை பெறுவோம், மரங்களை வெட்டாதீர், பசுமை யை காப்போம் போன்ற வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்ற னர். பேரணியில் சப்-இன்ஸ்பெ க்டர்கள் ராய்ஸ்டன், வை குண்டதாஸ், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொ ண்டனர். பள்ளி முதல்வர் எட்வின் சாமுவேல் நன்றி கூறினார்.

    • அனைத்து வகை நகர பஸ்களிலும் பள்ளி மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
    • ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூலமாக இவை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மகேந்திரகுமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், நெல்லை கோட்ட பஸ்கள் இயக்க பகுதியான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் பாதுகாப்பாக குறித்த நேரத்தில் பள்ளிக்கு சென்று வருவதற்கு வசதியாக நெல்லை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து வகை நகர பஸ்களிலும் (சாதாரண, எல்.எஸ்.எஸ் மற்றும் சொகுசு பஸ்கள்) பயணம் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர். இதனை ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜூலை 18-ந்தேதி “தமிழ்நாடு நாள் விழாவாக” இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு முதல்-அமைச்சராக பேரறிஞர் அண்ணா இருந்தபோது தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என ஜூலை 18-ந்தேதி பெயர் சூட்டினார்.

    அந்த நாளினை "தமிழ்நாடு நாள் விழாவாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இவ்விழாவினை கொண்டாடும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    மாவட்ட அளவில் கட்டுரை.

    பேச்சு ப்போட்டியில் வெற்றிபெறும் மாணவ ர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகள் நடைபெறும் இடம், நாள், நேரம், போட்டிக்கான தலைப்பு, விதிமுறைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவி க்கப்படும்.

    இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×