search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school students"

    • பேரணியை தாசில்தார் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் தாசில்தார் அலுவலக அதிகாரிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், விளாத்திகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தாசில்தார் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி எட்டயபுரம் ரோடு, பஸ் நிலையம், மதுரை ரோடு, காய்கறி மார்க்கெட் வழியாக தாசில்தார் அலுவலகத்தில் முடிவடைந்தது.

    மேலும் இப்பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் தவசுமுத்து, தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன் உட்பட வருவாய்த்துறை ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம், விளாத்திகுளம் அரசு பள்ளி ஆசிரியர் சேகர், காவல் துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தினமும் மதியம் முட்டை கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக மாணவ-மாணவிகளுக்கு முட்டை வழங்கப்படவில்லை.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி மாணவ-மாணவிகளின் பசியை போக்கும் வகையில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தினமும் மதியம் முட்டை கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகவும் இருந்து வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வாரந்தோறும் 92 ஆயிரம் முட்டைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி மொடக்குறிச்சி தாலுகாவில் 126 பள்ளிகளும், கொடுமுடி தாலுகாவில் 90 பள்ளிகளும் வாரந்தோறும் முட்டை பெறுகின்றன.

    இதில் பல பள்ளிகளில் உள்ள மதிய உணவு மையங்களில் உள்ள சமையலர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கடந்த புதன்கிழமை மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகி போய் இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பிரச்சனையை எடுத்துக் கூறினர். அதனைத் தொடர்ந்து கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்ட முட்டைகளும் அழுகிய நிலையில் காணப்பட்டன.

    இதனால் கடந்த 3 நாட்களாக மாணவ-மாணவிகளுக்கு முட்டை வழங்கப்படவில்லை. மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள 27 பள்ளிகளில் ஆயிரத்து 348 முட்டைகளும், கொடுமுடி தாலுகாவில் 13 பள்ளிகளில் 767 முட்டைகளும் அழுகிய நிலையில் காணப்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மேலும் இச்சம்பவம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    அவரது உத்தரவின் பேரில் முட்டைகளின் மாதிரிகளை துறையினர் சோதனைக்காக எடுத்துச் சென்றனர். பின்னர் முட்டையை சப்ளை செய்த நிறுவனத்திடம் நல்ல முட்டைகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாநகர போலீசார் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • டவுன் சாப்டர் மேல்நிலை பள்ளியில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் நெல்லை மாநகர துணை கமிஷனர்கள் ஆதர்ஷ் பசேரா (கிழக்கு), சரவணகுமார் (மேற்கு), அனிதா (தலைமையிடம்) ஆகியோர் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாநகர போலீசார் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    டவுன் சாப்டர் மேல்நிலை பள்ளியில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் போலீசார் மாணவர்களிடம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றியும், குற்றங்கள் நடந்தால் செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் (உதவி எண்:1098,181) மற்றும் பாலியல் ரீதியான குற்றங்கள் சம்பந்தமாகவும், போக்சோ சட்டம் குறித்தும், அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்தாஸ் ஜெபக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கொலை நடப்பது போல் ரீல்ஸ் செய்து பதிவிட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
    • நீதிபதி மாணவர்களை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தார்.

    விருதுநகர்

    சாத்தூரில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழா முடிந்த பின்னர் 6 மாணவர்கள் சேர்ந்து பார் ஊழியர் கொலை செய்யப்படுவது போல் நடித்து ரீல்ஸ் செய்து சமூக வலை தளத்தில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் மாணவர்களின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

    இதையடுத்து அம்மாபட்டி போலீசார் அந்த மாணவர்களை கைது செய்து முதல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது நீதிபதி மாணவர்களை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தார்.

    திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள போட்டி பல்லடம் அம்பாள் புரொபஷனல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    போட்டியில் 14 வயதிற்குட்பட்டோர் மாணவர் பிரிவில் குண்டுஎறிதல் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவன் ஆர்.கோகுல் 2-ம் இடமும், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் பிளஸ்-1 மாணவர் பி.சந்துரு 2-ம் இடமும், 17 வயதிற்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவி எம்.வைஷ்ணவி முதலிடமும், 17 வயதிற்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் மும்முறை தாண்டுதல் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவி ஜி.ஆதியா 2-ம் இடமும், 100 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் இடமும் பிடித்தார். 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆதியா, வைஷ்ணவி, சுதீபா, சர்விகா, கார்னிகா ஆகியோர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற 2 மாணவர்களும், 5 மாணவிகளும், செங்கல்பட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் 14 மற்றும் 17 வயது பிரிவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • பொருளாளர் ஸ்ருதி வி. ஹரீஸ், பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    திருப்பூர்,:

    திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் ெஜய் சாரதா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆக்கி போட்டியில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவில் முதலிடம் பிடித்தனர். கைப்பந்து போட்டியில் 14, 17 வயது பிரிவில் முதலிடம், எறிபந்து போட்டியில் 17 வயது பிரிவில் முதலிடம், 14 வயது பிரிவில் 2-வது இடம் பெற்றனர். சதுரங்க போட்டியில் 11 வயது பிரிவில் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் பால்பேட்மிட்டன் போட்டியில் முதலிடம் பிடித்தனர்.

    மாணவருக்கான தடகள போட்டியில் 14 வயது பிரிவில் 400 மீ., 600 மீட்டரில் முதலிடம் மற்றும் 3-வது இடம், 4x100 மீட்டர் போட்டியில் முதலிடம், 17-வயது பிரிவில் 3 ஆயிரம் மீட்டர், 1500 மீட்டர், 400 மீட்டர் போட்டியில் முதலிடம் மற்றும் 2-வது இடம் பிடித்தனர். 4x100 மற்றும் 4x400 மீட்டர் போட்டியில் முதலிடமும், வட்டு எறிதல் போட்டியில் 2-வது இடமும், தடைதாண்டும் போட்டியில் 2-வது இடமும் பிடித்தனர்.

    19-வயது பிரிவில் 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், தடை தாண்டும் போட்டியில் முதலிடம், 4x400 மீட்டர் போட்டியில் முதலிடம், நீளம் தாண்டுதல் போட்டியில் 3-வதுஇடம் பெற்றனர்.

    மாணவிகள் 14 வயது பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் முதலிடம், 17 வயது பிரிவில் 400 மீட்டர், 800 மீட்டர் முதலிடம், 1500 மீட்டரில் 2-வது இடம், நீளம் தாண்டுதலில் 3-வது இடம், 4x100 மீ. போட்டியில் 2-வது இடம், மற்றும் 4x400 மீ போட்டியில் முதலிடம் பெற்றனர். 17 வயது பிரிவில் 800, 1500, 3 ஆயிரம் மீட்டர் போட்டியில் 2-வதுஇடம், உயரம் தாண்டுதலில் முதலிடம், நீளம் தாண்டுதலில் 3-வது இடம் பிடித்தனர். 4x100 மீட்டர் போட்டியில் 2-வதுஇடம், 4x400 மீட்டரில் முதலிடம், குண்டு எறிதலில் 3-வது இடம் பிடித்தனர்.

    மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் 14 மற்றும் 17 வயது பிரிவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். தடகள போட்டியில் 800 மீட்டர், 1500 மீட்டர், 400 மீட்டர், 4x100 மீட்டர், 4x400மீட்டர் ஆகிய போட்டிகளில் முதல், 2-வது இடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் திருப்பூர் வடக்கு குறுமையம் முதலிடம் பெற 40 புள்ளிகள் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் ஈ.வேலுச்சாமி, பள்ளி செயலாளர் கீர்த்திகா வாணி வி.சதிஷ், பொருளாளர் ஸ்ருதி வி. ஹரீஸ், பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட சைக்கிள் போட்டிகள் நடக்க இருக்கிறது.
    • மதுரையில் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

    மதுரை

    முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை யொட்டி மாணவ-மாணவி களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் வருகிற 14-ந்தேதி எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    13,15,17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ -மாணவிகள் தங்கள் சொந்த சைக்கிள் களை கொண்டு வர வேண்டும். இந்தியாவில் தயாரிக் கப்பட்ட சாதாரண கைப் பிடி கொண்ட சைக்கிள் களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கியர் சைக்கிள், ரேஸ் சைக்கிள்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படாது.

    மாணவ-மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்புதல் பெற்ற வயது சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங் கில் நேரில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசும், 4 முதல் 10 வரை இடம் பிடிப்ப வர்களுக்கு ரூ.250 ஊக்கப் பரிசும் வழங்கப்படும்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • இத்திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது.

    திருப்பூர்:

    உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,000 பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள்எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப்பெயர்கள்,உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

    முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிக்குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு திருப்பூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநரால் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது.

    திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை திருப்பூர் மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0421 – 2971183 என்ற அலுவலகத்தொலைபேசி எண் அல்லது 99405 90165 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15-12-2023-க்குள் மாவட்டத்தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம்,அறை எண்.608, 6-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூர் என்றமுகவரிக்கோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் திறனை ஊக்குவிப்ப தற்காக புதிய கண்டுபிடிப்பு, திட்ட மாதிரிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • கல்லூரி அரங்கில் பள்ளி மாணவர்கள் தங்களது வியத்தகு கண்டுபிடிப்புகளையும், திட்டங்களையும் காட்சிபடுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் திறனை ஊக்குவிப்ப தற்காக புதிய கண்டுபிடிப்பு, திட்ட மாதிரிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசின் சிறு, குறு தொழில் துறை இணை இயக்குநர் சிமியோன் (நெல்லை-மதுரை) டாடா பவர்-எனர்ஜி நிறுவன தலைமை மனிதவள மேம்பாட்டு அதிகாரி அனுபாமா ரட்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்.

    இதனையடுத்து பொதுமேலாளர் ஜெயக்குமார், இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான்கென்னடி ஆகியோர் மாணவர்கள் திறனை ஊக்குவிக்கும் வகையில் பேசினர். உதவி பேராசிரியர் சதீஷ் குமார் நன்றி கூறினார்.இதனையடுத்து, கல்லூரி அரங்கில் பள்ளி மாணவர்கள் தங்களது வியத்தகு கண்டுபிடிப்புகளையும், திட்டங்களையும் காட்சிபடுத்தினர். அவற்றின் செயல்பாடுகளை பற்றி பார்வையாளர்களிடம் விளக்கி கூறினர். இந்த கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த படைப்புகள், கண்டு பிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    கண்காட்சியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், பொது மேலாளர் கிருஷ்ணகுமார், டாடா தொழில்நுட்ப தலைமை அதிகாரி ஸ்டீபன், தொழில்முனைவோர் துறை இயக்குநர் பூபாலராயன், அப்ளைய்ட் ஆய்வக பொறுப்பா ளர் பேரா சிரியர் லட்சுமிநாராயணன், ஐ.டி. துறை தலைவர் சஜிலின் ரோலட், பேராசிரியர் டேவிட் ஐ லிங் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    • உக்ரைன் போர், தேசப்பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது
    • மாணவர்கள் துப்பாக்கிகளை கையாளுவதற்கு நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்

    கடந்த பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    போரில் வெற்றி பெற இரு தரப்பும் பல்வேறு வழிகளை கடைபிடித்து வருகிறது. இதில் ஒன்றாக ரஷியா, தன் நாட்டு பள்ளிகளில் குழந்தைகளையும் மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ரஷியாவில் பரவலாக அனைத்து இடைநிலைக்கு மேற்பட்ட பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பதுங்கு குழி தோண்டுவது, கையெறி குண்டு வீசுவது, துப்பாக்கியை கையாளுதல் உட்பட பல போர்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டிற்காக தியாகம் செய்வதை பாராட்டும் விதமாக பள்ளி கல்வியில் பாடதிட்டங்கள் மாற்றப்பட்டிருக்கிறது. பெரும் பொருட்செலவில் இதில் ரஷியா ஈடுபட்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி கூடங்களையும் அமைத்துள்ளது. உக்ரைன் போர், தேசப்பற்று மற்றும் ராணுவ பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. பயிற்சிகளுக்கு மாணவ மாணவியர் தாங்களாகவே வர மறுத்தாலும், அரசாங்கத்தால் வற்புறுத்தப்படுகிறார்கள்.

    உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும், தானியங்கி துப்பாக்கிகளை கையாளுவதற்கும், பிரித்து கோர்ப்பதற்கும் கைதேர்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

    மேலும், பள்ளி குழந்தைகள் போர் வீரர்கள் அணியும் உடை மற்றும் தொப்பி ஆகியவற்றை தைத்து தரவும் பயிற்சிகள் நடக்கிறது.

    இன்றைய குழந்தைகளை எதிர்கால ரஷிய போர் வீரர்களாக கட்டாயபடுத்தி மாற்ற முயல்வதற்கு சமூக வலைதளங்களில் பயனர்கள் அந்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதால் இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன.

    திருப்பூர்:

    ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் சார்பில் விண்கற்கள் தேடுதல் திட்டத்தில் பங்கேற்று அவற்றிற்கு பெயர் வைக்கும் வாய்ப்பும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதால் இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அறிவியல் கல்வி நிறுவனமான ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் விண்கற்களை கண்டறிவதற்கான பயிற்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.

    சர்வதேச வானியல் தேடல் கூட்டமைப்பான ஐ.எஸ்.ஏ.சி., மற்றும் நாசா இணைந்து, ஹவாயில் உள்ள பான்-ஸ்டார்ஸ் தொலைநோக்கி வாயிலாக எடுக்கப்படும் படங்களை இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.பிரத்யேக மென்பொருள் உதவியோடு, படங்களில் இருப்பவை விண்கற்களா என மாணவர்களும், ஆசிரியர்களும் ஆராய்ந்து, நகரும் பொருட்கள் இருப்பின் மீண்டும் வானியலாளர்களுக்கு அனுப்பப்படும்.

    பல நிலை பரிசோதனைகளுக்கு பின், மாணவர்கள் அனுப்பியவை விண்கற்கள் என அடையாளம் காணப்பட்டால் அதற்கு பெயர் வைக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    இது குறித்து ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் உதவி அறிவியலாளர் கிரித்திகா கூறியதாவது:-

    சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. விண்கற்களை கண்டறிவதன் வாயிலாக அதன் மோதலால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியும்.இதற்காக, வானியல் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த விண்கற்கள் தேடுதல் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு பின் திட்டத்தில் பங்கேற்பாளர்களாக சேர்க்கப்படுவர்.நவம்பர் மாதம் ஆன்லைன் பயிற்சி வகுப்பு துவங்குவதால், ஆர்வமுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் www.openspacefoundation.in என்ற இணையதளத்திலோ அல்லது 99522 09695 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேதாரண்யம் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
    • அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் 100 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னை சுற்றுச்சூழல் துறையும் நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமை படையும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் கிரேட் எப் தொண்டு நிறுவனமும் இணைந்து உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.

    தோப்பு துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் திலீப் குமார் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார்.

    கடற்கரை தினம் கொண்டாடப்படும் காரணம், கடற்கரை தினத்தை ஒட்டி ஐநா சபை வகுத்த நெறிமுறைகள் மக்கும் குப்பை மக்கா குப்பை பிரித்தெடுத்தல் இவற்றை பற்றி தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் கார்த்திகேயன் மற்றும் ரோட்டரி சங்கத்தினர், பசுமை செயல்பாடுகளை கண்காணிக்கும் அலுவலர் பசுமை டிவைனியா மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.

    சுற்றுச்சூழல் துறை சார்பில் மாணவர்க ளுக்கு பச்சை வண்ண த்தொப்பி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தோப்பு த்துறை அரசினர் மேல்நி லைப்பள்ளி தலைமையாசி ரியர் எஸ் கவி நிலவன் தேசிய பசுமை படை ஆசிரியர் வி கண்ணையன், மாவட்ட சூழல் ஒருங்கிணைப்பாளர். இமய சிவன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணி வண்ணன், மற்றும் ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்கள், ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    உலக கடற்கரை தூய்மை தினத்தை (ஒவ்வொரு வருடம் செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமை) முன்னிட்டு உலக ஓசோன் தினத்தை முன்னிட்டும் கலைக்கு ழுவினர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

    பின்னர் நகராட்சி தலைவர் புகழேந்தி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

    பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று உப்பு சத்தியாகிரக மண்டபத்தை அடைந்தது.

    மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்தனர். முடிவில் மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ×