என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகர போலீசார்
    X

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகர போலீசார்

    • நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாநகர போலீசார் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • டவுன் சாப்டர் மேல்நிலை பள்ளியில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் நெல்லை மாநகர துணை கமிஷனர்கள் ஆதர்ஷ் பசேரா (கிழக்கு), சரவணகுமார் (மேற்கு), அனிதா (தலைமையிடம்) ஆகியோர் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாநகர போலீசார் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    டவுன் சாப்டர் மேல்நிலை பள்ளியில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் போலீசார் மாணவர்களிடம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றியும், குற்றங்கள் நடந்தால் செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் (உதவி எண்:1098,181) மற்றும் பாலியல் ரீதியான குற்றங்கள் சம்பந்தமாகவும், போக்சோ சட்டம் குறித்தும், அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்தாஸ் ஜெபக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×