search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட சைக்கிள் போட்டிகள்
    X

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட சைக்கிள் போட்டிகள்

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட சைக்கிள் போட்டிகள் நடக்க இருக்கிறது.
    • மதுரையில் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

    மதுரை

    முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை யொட்டி மாணவ-மாணவி களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் வருகிற 14-ந்தேதி எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    13,15,17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ -மாணவிகள் தங்கள் சொந்த சைக்கிள் களை கொண்டு வர வேண்டும். இந்தியாவில் தயாரிக் கப்பட்ட சாதாரண கைப் பிடி கொண்ட சைக்கிள் களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கியர் சைக்கிள், ரேஸ் சைக்கிள்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படாது.

    மாணவ-மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்புதல் பெற்ற வயது சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங் கில் நேரில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசும், 4 முதல் 10 வரை இடம் பிடிப்ப வர்களுக்கு ரூ.250 ஊக்கப் பரிசும் வழங்கப்படும்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×