search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் சாதனை"

    • குமார்நகர் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது.
    • சுதா மோகன் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான பீச் வாலிபால் போட்டி குமார்நகர் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திருப்பூர் நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    இதன்படி மாணவர்களுக்கான சூப்பர் சீனியர் பிரிவு போட்டியில் பிளஸ்-2 மாணவர்கள் கிப்ஸன் சாமுவேல், விஜேஷ் ஆகியோர் வெற்றி பெற்று முதலிடமும், ஜூனியர் பிரிவு போட்டியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் சனோஜ், நிரஞ்சன் ஆகியோர் முதலிடமும், மாணவிகளுக்கான ஜூனியர் பிரிவு போட்டியில் செல்வதர்ஷினி, சாருநேத்ரா ஆகியோர் முதலிடமும் பிடித்தனர்.

    போட்டியின் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளையும், பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் அருள், செபாஸ்டின் ஆகியோரையும் திருமுருகன் குழும தலைவர் டாக்டர் ஜி.மோகன், பள்ளி தாளாளரும், முதல்வருமான சுதா மோகன் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

    • டேக்வாண்டோ போட்டிகளில் சுமார் 34 பள்ளிகளை சேர்ந்த 480 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
    • தலைமை ஆசிரியர் உமாநாதன் மற்றும் தாளாளர் செண்பகநாதன் பாராட்டினர்.

    நாகர்கோவில், நவ.22-

    கன்னியாகுமரி டேக்வாண்டோ அகடாமி சார்பில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் சுமார் 34 பள்ளிகளை சேர்ந்த 480 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    இதில் தெரிசனம்கோப்பு கவுசிகா பள்ளியை சேர்ந்த ருஷ்வந்த் குமார், கிருத்திகா, அஸ்லி பிளசிங், சுகேஷ், அஸ்வின் குமார் போன்றவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றனர். இவர்களை அவர்களது வகுப்பு ஆசிரியர்கள் நிஷா, வனிஷா, விஜி, அஜிதா, தலைமை ஆசிரியர் உமாநாதன், துணை தலைமை ஆசிரியர் மதிமகாதேவன் மற்றும் தாளாளர் செண்பகநாதன் பாராட்டினர்.

    • மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் 14 மற்றும் 17 வயது பிரிவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • பொருளாளர் ஸ்ருதி வி. ஹரீஸ், பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    திருப்பூர்,:

    திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் ெஜய் சாரதா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆக்கி போட்டியில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவில் முதலிடம் பிடித்தனர். கைப்பந்து போட்டியில் 14, 17 வயது பிரிவில் முதலிடம், எறிபந்து போட்டியில் 17 வயது பிரிவில் முதலிடம், 14 வயது பிரிவில் 2-வது இடம் பெற்றனர். சதுரங்க போட்டியில் 11 வயது பிரிவில் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் பால்பேட்மிட்டன் போட்டியில் முதலிடம் பிடித்தனர்.

    மாணவருக்கான தடகள போட்டியில் 14 வயது பிரிவில் 400 மீ., 600 மீட்டரில் முதலிடம் மற்றும் 3-வது இடம், 4x100 மீட்டர் போட்டியில் முதலிடம், 17-வயது பிரிவில் 3 ஆயிரம் மீட்டர், 1500 மீட்டர், 400 மீட்டர் போட்டியில் முதலிடம் மற்றும் 2-வது இடம் பிடித்தனர். 4x100 மற்றும் 4x400 மீட்டர் போட்டியில் முதலிடமும், வட்டு எறிதல் போட்டியில் 2-வது இடமும், தடைதாண்டும் போட்டியில் 2-வது இடமும் பிடித்தனர்.

    19-வயது பிரிவில் 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், தடை தாண்டும் போட்டியில் முதலிடம், 4x400 மீட்டர் போட்டியில் முதலிடம், நீளம் தாண்டுதல் போட்டியில் 3-வதுஇடம் பெற்றனர்.

    மாணவிகள் 14 வயது பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் முதலிடம், 17 வயது பிரிவில் 400 மீட்டர், 800 மீட்டர் முதலிடம், 1500 மீட்டரில் 2-வது இடம், நீளம் தாண்டுதலில் 3-வது இடம், 4x100 மீ. போட்டியில் 2-வது இடம், மற்றும் 4x400 மீ போட்டியில் முதலிடம் பெற்றனர். 17 வயது பிரிவில் 800, 1500, 3 ஆயிரம் மீட்டர் போட்டியில் 2-வதுஇடம், உயரம் தாண்டுதலில் முதலிடம், நீளம் தாண்டுதலில் 3-வது இடம் பிடித்தனர். 4x100 மீட்டர் போட்டியில் 2-வதுஇடம், 4x400 மீட்டரில் முதலிடம், குண்டு எறிதலில் 3-வது இடம் பிடித்தனர்.

    மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் 14 மற்றும் 17 வயது பிரிவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். தடகள போட்டியில் 800 மீட்டர், 1500 மீட்டர், 400 மீட்டர், 4x100 மீட்டர், 4x400மீட்டர் ஆகிய போட்டிகளில் முதல், 2-வது இடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் திருப்பூர் வடக்கு குறுமையம் முதலிடம் பெற 40 புள்ளிகள் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் ஈ.வேலுச்சாமி, பள்ளி செயலாளர் கீர்த்திகா வாணி வி.சதிஷ், பொருளாளர் ஸ்ருதி வி. ஹரீஸ், பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • 14 வயது பிரிவில் மாணவர்கள் வேதிஷ் மற்றும் நரோஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    • மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் உள்ள ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் காரிமங்கலத்தில் நடந்த சரக அளவிலான புல்வெளி டென்னிஸ் போட்டியில் 14 வயது பிரிவில் மாணவர்கள் வேதிஷ் மற்றும் நரோஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மற்றும் பாவனி தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான்இருதயராஜ், ஆகியோர் பாராட்டினர்.

    மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், திருப்பதி, தினேஷ், புவனேஸ்வரி ஆகியோரை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.  

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • துணை முதல்வர் லினிமோல், அபாகஸ் பயிற்சி ஆசிரியர் உமர் சரிப் ஆகியோர் பாராட்டினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் தொடக்க பள்ளியில் மாவட்ட அளவி லான அபாகஸ் போட்டி நடைபெற்றது. மாவட்ட அளவில் 21 பள்ளிகளில் இருந்து 787 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் படிக்கும் 9 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 4 மாணவர்கள் சாம்பியன் பட்டமும், மற்ற மாணவர்கள் முதல் 3 இடங்களிலும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர் களை பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்றாகீம், பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், துணை முதல்வர் லினிமோல், அபாகஸ் பயிற்சி ஆசிரியர் உமர் சரிப் ஆகியோர் பாராட்டினர்.

    • சோழவந்தான் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    சோழவந்தான்

    சி.பி.ஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் மதுரை கல்வி சர்வதேச பொதுப்பள்ளி சார்பில் மதுரை எஸ்.எஸ்.ஜி.ஏ. மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.

    இதில் 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்றன. இந்த தொடரின் இறுதி போட்டியில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் மற்றும் அத்யாபனா பள்ளி மாண வர்கள் மோதின. 15 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தில் முதலாவதாக பேட்டிங் செய்த மதுரை அத்யாபனா பள்ளி 13.1 ஓவர்களில் 48 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் பறிகொடுத்தது.

    பின் 49 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் 7 ஓவர்களில் 50 ரன்களுக்கு 4 விக்கெட் டுகள் மட்டும் இழந்து தங்க பதக்கம் வெற்றி பெற்றது. சிறந்த பேட்ஸ்மேனாக ஷமீர் மற்றும் தொடர் நாயகனாக ரிஷிசித்ரன் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.

    தொடரை வென்ற கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கணேச மூர்த்தி, கார்த்திக் ஆகியோர் களை பள்ளி தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • சேலம் மண்டல அளவிலான நடைபெற்ற மேஜை பந்து போட்டியில் ஸ்ரீராம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான நடைபெறும் தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    மொரப்பூர்:

    கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளி மாணவர்கள் சேலம் மண்டல அளவில் நடைப்பெற்ற மேஜைப் பந்து அணிக்காக தேர்வு போட்டிகள் நடைபெற்றது.

    இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் நரேன்குமார், முதல் இடமும், கிரிஷ்வர்மா 4-வது இடமும், 19 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் பிரியதர்ஷன் 2-ம் இடம் பிடித்து சேலம் மண்டலத்திற்கான அணியில் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் பள்ளியின் தாளா ளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மற்றும் பாவனி தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான்இருதயராஜ், ஆகி யோர் பாராட்டினர். மாண வர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் செல்வம், பள்ளி நிர்வாகம் பாராட்டியது.

    • 12 வயதிற்கு உட்பட்ட பந்து எறிதல் போட்டியில் மாணவன் தெய்விக் ரோஷன் முதல் பரிசு
    • ஆசிரிய - ஆசிரியைகள் மற்றும் சக மாணவர்கள் பாரட்டினர்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் நாகர்கோவில அண்ணாவிளையாட்டு ஆரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளுக்கு மவுண்ட் லிட்ரா பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

    12 வயதிற்கு உட்பட்ட பந்து எறிதல் போட்டியில் மாணவன் தெய்விக் ரோஷன் முதல் பரிசையும் மாணவி ஜோவிஷா தெரேஸ் குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் பரிசையும் வென்றனர். 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் ரித்திக் ரோஷன் 600 மீட்டர் ஓட்டபந்தயத்தில் முதல் பரிசையும், 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் காட்வின் 300 மீட்டர் பந்தயத்தில் முதல் இடத்தையும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் இடத்தையும் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் அல்ஹம்கான் மூன்றாம் இடத்தையும் வென்று சாதனை படைத்தனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் தில்லை செல்வம், இயக்குநர்கள், முதல்வர் தீபாசெல்வி, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய - ஆசிரியைகள் மற்றும் சக மாணவர்கள் பாரட்டினர்.

    • சரக அளவிலான கோ-கோ போட்டியில் ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • பாப்பிரெட்டிப்பட்டியில் சரக அளவில் நடைபெற்று வரும் குழு விளையாட்டு போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் சரக அளவில் நடைபெற்று வரும் குழு விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோ-கோ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் 14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடமும், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடமும், பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார் மற்றும் சங்கீதா ஆகியோரை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விளையாட்டு போட்டி களில் ஸ்டான்லி மெட்ரி குலேஷன் மேல்நிலை பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டி யில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
    • இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

     பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, சரக அளவில் நடைபெற்று வரும் குழு விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரி குலேஷன் மேல்நிலை பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டி யில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

    பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் U-19 பெண்கள் பிரிவில் முதலிடமும், U-19 ஆண்கள் பிரிவில் முதலிடமும், U-14 ஆண்கள் பிரிவில் இரண்டாமிடமும், பிடித்து வெற்றி பெற் றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்த குமார் மற்றும் சங்கீதா ஆகியோரை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வயது வரம்பு அடிப்படையில் U-17 ஒற்றையர் பிரிவில் செங்கொடி முதல் இடம் பெற்றுள்ளார்.
    • வெற்றிபெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    முதலிடமும் பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கேரம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

    பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் U-17 ஒற்றையர் பிரிவில் செங்கொடி முதலிடமும், கவிசரண் இரண்டாமிடமும், U-14 இரட்டையர் பிரிவில் கவிசரண் மற்றும் சரன்பாபு முதலிடமும்பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். U-17 ஒற்றையர் பிரிவில் தாஸ் இரண்டாமிடமும், U-19 ஒற்றையர் பிரிவில் சச்சி ன்தாசன் முதலிட மும்பிடித்து வெற்றி பெற்று ள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் முருகேசன் , செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூப்பர் சீனியர் பிரிவுக்கான வாலிபால் இறுதி போட்டி கோபி நாதம்பட்டி கூட்ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
    • வட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இதில் சூப்பர் சீனியர் பிரிவுக்கான வாலிபால் இறுதி போட்டி கோபி நாதம்பட்டி கூட்ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும், ராமியம் பட்டி பள்ளி அணியும் விளை யாடினர்.

    இதில் கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    ×