search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student Achievement"

    • 64 - வது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடை யிலான தடகள போட்டி செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
    • இதில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவ-மாணவிகள் 6 தங்கம் 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கம் பெற்றனர்.

    வள்ளியூர்:

    64 - வது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடை யிலான தடகள போட்டி செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவ-மாணவிகள் 6 தங்கம் 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கம் பெற்றனர். மாணவர் பிரிவில் லனிஷ் ஜோஷுவா 17 வயது பிரிவில் வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதலில் முதல் இடமும், 19 வயது பிரிவில் ஆரிஷ் மும்முறை தாண்டுதலில் முதலிடமும், அஸ்வின் வட்டு எறிதல் 3-ம் இடமும், பத்ம தேஜேஷ் குண்டு எறிதலில் 2-ம் இடமும் பெற்றனர்.

    மாணவிகள் பிரிவில் 14 வயது பிரிவில் சஸ்விகா உயரம் தாண்டுதலில் முதலிடமும், ஷாலினி 400 மீட்டர் ஒட்ட பந்தயத்தில் 3-ம் இடமும், 17 வயது பிரிவில் 4×100 மீட்டர் தொடர் ஒட்ட போட்டியில் 2-ம் இடமும், 19 வயது பிரிவில் ரோஷ்மா நீளம் தாண்டுதலில் 2-ம் இடமும், நாகேஸ்வரி குண்டு எறிதலில் 3-ம் இடமும், 4×100 மீட்டர் தொடர் ஒட்ட போட்டியில் முதலிடமும், 4×400 மீட்டர் தொடர் ஒட்ட போட்டியில் முதலிடமும் பெற்றனர்.

    இதில் 17 வயது பிரிவில் லனிஷ் ஜோஷீவா வட்டு எறிதல் போட்டியில் புதிய மாநில சாதனை படைத்து பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலை யாண்டி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

    • ஆணழகன் போட்டியில் பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர் சாதனை படைத்தனர்.
    • இப்போட்டியானது 7 பிரிவுகளாக நடைபெற்றது.

    சிவகாசி

    தமிழ்நாடு அமெச்சூர்பாடி பில்டிங் அசோசியேஷன் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான மிஸ்டர் விருதுநகர் என்ற தலைப்பில் ஆணழகன் போட்டி சிவகாசியில் நடந்தது. இப்போட்டியானது 7 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 70 கிலோ பிரிவில் பி.எஸ்.ஆர்.என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் ஜெயகணேஷ் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவனுக்கு கல்லூரி இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், கல்லூரியின் டீன் மாரிச்சாமி, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பேராசிரியர் முனிராஜ் பேராசிரியை கிருஷ்ணவேனி மற்றும் பலர் பாராட்டினர்.

    • மாவட்ட அளவில் நடந்த போட்டியில் பி.எஸ்.ஆர்.கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளது.
    • கதை, கட்டுரை, பேச்சுப்போட்டி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

    சிவகாசி

    தமிழக அரசின தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கிடையேயான கதை, கட்டுரை, பேச்சுப்போட்டி கடந்த ஏப்ரல் மாதம் விருதுநகர் மாவட்ட த்தில் நடைபெற்றது.

    மாவட்டம் வாரியாக நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் உயிர் மருத்துவப் பொறியியல் துறையின் மாணவன் நெல்லையப்ப ராஜா மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றார்.

    வெற்றி பெற்ற மாண வனுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.12 ஆயிரம் காசோலை மற்றும் சான்றி தழை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அருள் வழங்கி பாராட்டினார்.

    வெற்றி பெற்ற மாணவனுக்கு கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, உயிர் மருத்துவப்பொறியியல் துறைத்தலைவர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவனை பாராட்டினர்.

    • தேசிய விளையாட்டு போட்டியில் சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவர் சாதனை படைத்தனர்.
    • இதில் 65 பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    அகில இந்திய வேளாண் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், அரியானா மாநிலம் ஹிஸாரில் உள்ள சி.சி.எஸ். அரியானா வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

    இதில் 65 பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அங்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

    காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் 2-ம் ஆண்டு மாணவர் கார்த்தீஸ்வரன் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் கலந்து கொண்டு வட்டு எறிதல் போட்டியில் 2ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

    வெற்றி பெற்ற மாணவருக்கு சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாளாளர் சேது குமணன், கல்லூரி முதல்வர் கருணாநிதி, இயக்குனர் கோபால், ஆலோசகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • அகில இந்திய செயல்திட்டப் போட்டியில் பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளது.
    • இந்த செயல்திட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்த பேராசிரியர்கள் கருப்பசாமி, கார்த்திகேயன், சங்கர் கணேஷ் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    சிவகாசி

    ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் உள்ள ஐ.ஐ.டி.யில், அடல் இன்னோவேசன் சென்டர் சார்பில் அகில இந்திய அளவில், கல்லூரி மாணவர்களுக்கான செயல் திட்டப் போட்டி நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இதில் தங்களின் படைப்புகளை சமர்ப்பித்தனர். இவர்களில் 30 குழுக்கள் தேர்வு தேர்வு செய்யப்பட்டு 3 சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. இறுதிச் சுற்றில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி இரண்டாமாண்டு மாணவிகள் சந்தியா, மெர்லின் எஸ்தர், நித்யஸ்ரீ மற்றும் பவித்ரா குழுவினர் 3-ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை எப்படி பிரித்தெடுப்பது என்பது விளக்கும் செயல்திட்டத்தை இவர்கள் சமர்ப்பித்திருந்தனர். வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி, முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறை தலைவர் வளர்மதி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். இந்த செயல்திட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்த பேராசிரியர்கள் கருப்பசாமி, கார்த்திகேயன், சங்கர் கணேஷ் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    • ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் செயல்பட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக திகழ வேண்டும் என கலெக்டர் பேசினார்.
    • ஒவ்வொரு மாணவரின் திறமையையும் எளிதாக அறிந்திட முடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவித்தல் மற்றும் திறன் மேம்படுத்துதல் குறித்த குழுக்கள் உருவாக்கும் பணி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    மாணவ-மாணவிகள் முன்னிலையில் ஊதா, மஞ்சள், சிவப்பு, பச்சை என 4 வண்ணங்கள் கொண்ட குழுக்கள் உருவாக்கி அதில் மாணவ-மாணவிகள் தேர்வு செய்து அவர்களுக்குரிய ஆசிரி யர்களும் தேர்வு செய்து இக்குழு செயல்பட தொடங்கி உள்ளது.

    மேலும் இக்குழு வின் செயல்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 42 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்பள்ளியில் உள்ள மாணவர்களின் கற்றல் ஊக்குவித்தல், விளை யாட்டு ஊக்குவித்தல் மற்றும் தனித்திறன் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒவ்வொரு குழுவாக பிரித்து அவர்க ளுக்கான வழிகாட்டுதல் பணியை கையாளும் பொழுது ஒவ்வொரு மாணவரின் திறமையையும் எளிதாக அறிந்திட முடியும். அதே போல் ஒரு குழு என்பது குறைந்த எண்ணிக்கை கொண்ட நபர்களாக இருப்பதால் அவர்களை ஊக்குப்படுத்தும் பணியும் எளிதாக இருக்கும்.

    அதேபோல் சக மாண வர்கள், சக மாணவிகள் வெவ்வேறு குழுவில் இருக்கும் பொழுது எந்த குழு முதலில் வருகிறது என்ற நிலைப்பாட்டுடனும் ஒவ்வொரு குழுவும் ஆரோக்கியமான இந்த போட்டியில் பங்கேற்று ஆசிரியர்கள் வழிகாட்டும் பயிற்சியை கையாளுவதுடன் தங்கள் திறமையையும், ஆர்வத்தையும் செயல்ப டுத்தும் பொழுது அங்கு தனக்கென ஒரு வெற்றி கிடைக்கும் வகையில் ஒரு மகிழ்ச்சி தோன்றும்.

    அந்த மகிழ்ச்சியின் விளைவு தான் ஒவ்வொரு வரின் திறமைக்கும் வழி காட்டியாக அமையும். அவ்வாறு தன் திறமையை வெளிப்படுத்தி கல்வி யிலும், விளையாட்டிலும் தனி திறனிலும் சாதனை படைக்கும் பொழுது அந்த சாதனையானது தனக்கு மட்டுமின்றி, தனக்கு வழிகாட்டி ய ஆசிரியர்களுக்கும், தான் படித்த பள்ளிக்கும் என பாராட்டுக்கள் கிடைப்பதுடன் அதன் மூலம் மாவட்டத்திற்கு பெருமையை தேடித்தரும் நிலை உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவி மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • குத்துச்சண்டை போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் 20 பள்ளிகளை சேர்ந்த 180 மாண வர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

    14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 7-ம் வகுப்பு மாணவன் அனீக் ரசீத், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி யில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

    14 வயதுக்குட்பட்ட பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் செய்யது அப்துல் ஹசன், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் முகமது ஜாசிர் ஆகியோர் மாவட்ட அளவி லான போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாண வர்கள் மற்றும் பயிற்சி யாளர் ரபீக் உசேன் ராஜா ஆகியோரை பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், பள்ளி தலைமை ஆசிரி யர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

    • காரைக்காலில் 39-வது மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவிலும், புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹரிஷ் ராகவேந்திரன் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தார்.
    • இவர் அகில இந்திய அளவில் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் 13-வது இடத்திலும் 17 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில், 12-வது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் 39-வது மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவிலும், புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹரிஷ் ராகவேந்திரன் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தார்.

    இதன் மூலம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஆண்கள் இரட்டையர் பிரிவில் விளையாட புதுவை மாநிலம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் 13-வது இடத்திலும் 17 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில், 12-வது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தமிழ்நாடு மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவர் ஹரிஷ் ராகவேந்திரனை ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை போர்த்தியும், இனிப்புகள் வழங்கியும் பாராட்டினார். 

    • ராமநாதபுரம் அருகே 24 மணி நேரம் சுருள்வாள் சுற்றி பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
    • நரிப்பையூர் இல்ம் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு சார்பில் சுருள்வாள் சுற்றும் போட்டி நடந்தது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் இல்ம் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு சார்பில் சுருள்வாள் சுற்றும் போட்டி நடந்தது. இதில் 24 மணி நேரம், 24 நிமிடம், 24 நொடிகள் சுருள்வாள் சுற்றி மதுரை தனியார் பள்ளியை ேசர்ந்த பிளஸ்-2 மாணவர் ஹரிஸ் பாக்கியராஜ் சாதனை படைத்தார். இல்ம் மெட்ரிகுலேஷன் பள்ளி, தூத்துக்குடி தேவராஜ் வஸ்தாபி சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய சாதனை நிகழ்ச்சியில் மாணவர் ஹரிஸ் பாக்கியராஜ் சாதனை படைத்தார். அவர் கூறுகையில், உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் சாதனை படைத்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க தயாராக இருக்கிறேன். எனது முயற்சியை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு சான்றிதழை ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் நடுவர் ஹரிஹரன் வழங்கினார். இதில் சிலம்பாட்ட கழக ஒருங்கிணைப்பாளர் அருள் அந்தோணி, அந்தோணி பாஸ்டின், பள்ளி தாளாளர் நூருல் அமீன், நிர்வாகிகள் முகம்மது ஆரிப், அண்ணல் முகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • இந்தியா கிக்பாக்ஸிங் பெடரேஷன் மற்றும் சர்வதேச கிக்பாக்ஸிங் பெடரேஷன் இணைந்து டெல்லியில் உள்ள டல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டி நடைபெற்றது.
    • இவர் இதற்கு முன்பு தேசிய அளவில் ஜூலை மாதம் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சப்-ஜூனியர் போட்டியில் 1 தங்கப்பதக்கமும், 1 வெங்கலப் பதக்கமும் பெற்றுள்ளார் .

    புதுச்சேரி:

    இந்தியா கிக்பாக்ஸிங் பெடரேஷன் மற்றும் சர்வதேச கிக்பாக்ஸிங் பெடரேஷன் இணைந்து டெல்லியில் உள்ள டல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டி நடைபெற்றது.

    போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில், 34 நாடுகளைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கணைகள் கலந்து கொண்டனர் அதில் புதுவை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி மாணவன் பவித்ரன் கலந்து ெகாண்டு சப்-ஜூனியர் பிரிவில் 1 தங்க பதக்கமும், 1 வெங்கலப் பதக்கமும் பெற்று புதுவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    இவர் இதற்கு முன்பு தேசிய அளவில் ஜூலை மாதம் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சப்-ஜூனியர் போட்டியில் 1 தங்கப்பதக்கமும், 1 வெங்கலப் பதக்கமும் பெற்றுள்ளார் .

    இதனை கவுரவிக்கும் வகையில் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் எம்.பி.யுமான செல்வகணபதி, முதன்மை முதல்வர் பத்மா ஆகியோர் மாணவன் பவித்ரனை பாராட்டினார்கள்.

    • 100 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார்.
    • ஆசிரியர்கள் பாராட்டினர்.

    செய்யாறு:

    தமிழகத்தில் பிளஸ் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்தத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் கே.கிஷோர் குமார் வரலாறு படத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் ஒரே ஒரு மாணவனாக சாதனை படைத்துள்ளார்.

    மேலும் அதே பள்ளியில் கிஷோர் குமார் 600க்கு551 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், எம். ஹேமநாத்534 மதிப்பெண் எடுத்து 2ம் இடத்தையும், வி. கார்த்திகேயன் 484 மதிப்பெண் எடுத்து 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    தமிழக அளவில் ஒரே ஒரு மாணவனாக சாதனை படைத்த கிஷோர் குமார் உள்ளிட்ட 3 மாணவர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வழக்கறிஞர் அசோக், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    • தேசிய கராத்தே போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • விழுப்புரம் மாவட்டத்திற்க்கு பெறுமை சேர்த்த மாணவர்களை பாராட்டினர்,

    விழுப்புரம்,

    சேலம் தனியா ர்பொறியியல் கல்லூரியில் 8-வது தேசிய அளவிலான ஒபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சார்ந்த ஜுனியர், சீனியர் மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் விழுப்புரம் ஜார்ஜ் கார்னேஷன் கிளப் வளாகத்தில் பயிற்சியாளர் சென்சாய் செல்வகுமாரிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஜெயஸ்ரீ, அரிகரன், குருபிரசாத், வளர்மதி, ஷேக்ஆப்தாப், போகேஷ்வரன், கமலேஷ், சந்தோஷ், நிஷாந்த், விக்னேஷ்வரன், சஞ்சய், பாலகுமரன், ஷேக்ரிகான், அஸ்ரபி, அப்ரிகான், அப்ஷா பேகம், காளிதாஸ் ஆகியோர்கள் பங்கேற்றனர். இதில் கட்டா பிரிவில் 15 மாணவர்களும் கும்தே பிரிவில் 17 மாணவர்களும் கேடயம் மற்றும் சான்றிதழ் பெற்று சாதனை படைத்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்திற்க்கு பெறுமை சேர்த்த மாணவர்களை பயிற்சியாளர் சென்சாய் செல்வகுமார் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் சென்சாய் வைத்தியநாதன் மற்றும் பலரும் பாராட்டினர்.

    ×