search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Project Competition"

    • அகில இந்திய செயல்திட்டப் போட்டியில் பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளது.
    • இந்த செயல்திட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்த பேராசிரியர்கள் கருப்பசாமி, கார்த்திகேயன், சங்கர் கணேஷ் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    சிவகாசி

    ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் உள்ள ஐ.ஐ.டி.யில், அடல் இன்னோவேசன் சென்டர் சார்பில் அகில இந்திய அளவில், கல்லூரி மாணவர்களுக்கான செயல் திட்டப் போட்டி நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இதில் தங்களின் படைப்புகளை சமர்ப்பித்தனர். இவர்களில் 30 குழுக்கள் தேர்வு தேர்வு செய்யப்பட்டு 3 சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. இறுதிச் சுற்றில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி இரண்டாமாண்டு மாணவிகள் சந்தியா, மெர்லின் எஸ்தர், நித்யஸ்ரீ மற்றும் பவித்ரா குழுவினர் 3-ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை எப்படி பிரித்தெடுப்பது என்பது விளக்கும் செயல்திட்டத்தை இவர்கள் சமர்ப்பித்திருந்தனர். வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி, முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறை தலைவர் வளர்மதி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். இந்த செயல்திட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்த பேராசிரியர்கள் கருப்பசாமி, கார்த்திகேயன், சங்கர் கணேஷ் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    ×