என் மலர்
உள்ளூர் செய்திகள்

விளையாட்டு போட்டிகளில் இருமத்தூர் ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
- இதில் 14 மாணவர்கள் ஜூடோ போட்டியில் 19 மாணவர்கள் முதலிடமும் இரண்டாமிடமும் 12 மாணவர்கள் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
- குத்துச்சண்டை போட்டி யில் 32 மாணவர்கள் முதலிடமும் 16 மாணவர்கள் இரண்டாமிடமும் 8 மாண வர்கள் மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.முதலிடம் பிடித்த 55 மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மத்தூர்,
தருமபுரி மாவட்டம், இருமத்தூரில் உள்ள ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தடகளம், குழு மற்றும் தனிநபர் புதிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் தடகளம் போட்டியில் முகேஷ் என்கின்ற மாணவன் வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் இரண்டாமிடமும் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஜனஸ்ரீ என்கின்ற மாணவி முதலிடமும் கேரம் போட்டியில் மதுமதி, ஹாஷினி மற்றும் விபின் சந்திரசாமி முதலிடமும், கபடி போட்டியில் மாணவிகள் அணி மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
புதிய விளையாட்டு போட்டிகளான குத்துச்சண்டை மற்றும் ஜூடோ போட்டி நவம்பர் 1-ஆம் தேதி பாப்பிரெட்டிபட்டியில் நடத்தப்பட்டது.
இதில் 14 மாணவர்கள் ஜூடோ போட்டியில் 19 மாணவர்கள் முதலிடமும் இரண்டாமிடமும் 12 மாணவர்கள் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
குத்துச்சண்டை போட்டி யில் 32 மாணவர்கள் முதலிடமும் 16 மாணவர்கள் இரண்டாமிடமும் 8 மாண வர்கள் மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.முதலிடம் பிடித்த 55 மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முனியப்பன், சுகன், அர்ச்சுனன் ஆகியோரையும் பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் கோவிந்தராஜ், செயலாளர் ஜெயந்திவெங்கடேசன், பள்ளியின் முதல்வர் சண்முகவேல், துணை முதல்வர் ரகுபதி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.






